செய்திகள்
சேலம் - நாமக்கல்லில் வழக்கம் போல் பஸ்கள் ஓடின
சேலம், நாமக்கல்லில் பஸ்கள், லாரிகள் இன்று வழக்கம்போல் ஓடின. போராட்டத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.#Bharatbandh
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை வாழப்பாடி, வீரபாண்டி, இளம்பிள்ளை, மேச்சேரி, ஓமலூர், இரும்பாலை, ஆட்டையாம் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் உள்ளூர் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.
அதுபோல் திருச்சி, தர்மபுரி, கரூர், நாமக்கல், மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பஸ்களும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.
பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மட்டும் குறைந்த அளவே ஓடியது. மற்றபடி வேன், கால்டாக்சி வாகனங்கள் ஓடின.
சூரமங்கலம் மீன் மார்க்கெட், உழவர் சந்தை, செவ்வாய்ப்பேட்டை, திருமணிமுத்தாறு, வ.உ.சி. மார்க்கெட் திறந்திருந்தன. வழக்கம்போல் பொதுமக்கள் காய்கறிகள் வாங்கிச் சென்றனர். பெரும்பாலான கடைகள் திறந்திருந்தது.
நாமக்கல்லில் பஸ்கள், லாரிகள் இன்று வழக்கம்போல் இயங்கின. நாமக்கல் நகரில் கறிக்கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள் மட்டும் குறைந்த அளவே ஓடியது. மினிவேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கியது.
மோகனூர், பரமத்திவேலூர், சேந்த மங்கலம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், ஓட்டல்கள் திறந்திருந்தன. வேலை நிறுத்த போராட்டத்தினால் நாமக்கல் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. #Bharatbandh
சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இன்று காலை வாழப்பாடி, வீரபாண்டி, இளம்பிள்ளை, மேச்சேரி, ஓமலூர், இரும்பாலை, ஆட்டையாம் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் உள்ளூர் பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.
அதுபோல் திருச்சி, தர்மபுரி, கரூர், நாமக்கல், மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லக்கூடிய பஸ்களும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.
பள்ளி குழந்தைகளை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள் மட்டும் குறைந்த அளவே ஓடியது. மற்றபடி வேன், கால்டாக்சி வாகனங்கள் ஓடின.
சூரமங்கலம் மீன் மார்க்கெட், உழவர் சந்தை, செவ்வாய்ப்பேட்டை, திருமணிமுத்தாறு, வ.உ.சி. மார்க்கெட் திறந்திருந்தன. வழக்கம்போல் பொதுமக்கள் காய்கறிகள் வாங்கிச் சென்றனர். பெரும்பாலான கடைகள் திறந்திருந்தது.
நாமக்கல்லில் பஸ்கள், லாரிகள் இன்று வழக்கம்போல் இயங்கின. நாமக்கல் நகரில் கறிக்கடைகள், மளிகைக் கடைகள் திறக்கப்பட்டு இருந்தன. ஆட்டோக்கள் மட்டும் குறைந்த அளவே ஓடியது. மினிவேன், கார் உள்ளிட்ட வாகனங்கள் இயங்கியது.
மோகனூர், பரமத்திவேலூர், சேந்த மங்கலம், பள்ளிப்பாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், ஓட்டல்கள் திறந்திருந்தன. வேலை நிறுத்த போராட்டத்தினால் நாமக்கல் மாவட்டத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. #Bharatbandh