செய்திகள்

காசிமேட்டில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து கொள்ளை

Published On 2018-10-01 09:19 GMT   |   Update On 2018-10-01 09:19 GMT
காசிமேட்டில் செல்போன் கடையில் பூட்டை உடைத்து ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயபுரம்:

காசிமேடு, திடீர்நகரை சேர்ந்தவர் சலீம்பாஷா. அதே பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்து உள்ளார். இன்று காலை கடையை திறக்க சென்றபோது ‌ஷட்டர் உடைந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான செல்போன்கள், ரூ.42 ஆயிரத்தை காணவில்லை. மர்மபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. #tamilnews
Tags:    

Similar News