உள்ளூர் செய்திகள்

நெல்லை டவுனில் கடைகளில் 11 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Published On 2023-06-17 14:40 IST   |   Update On 2023-06-17 14:40:00 IST
  • மாநகரில் 4 மண்டலங்களிலும் அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • நெல்லை டவுனில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் உள்ள காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் மற்றும் மற்றும் வணிக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதாக தொடர்ந்து மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்திக்கு புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மாநகரில் 4 மண்டலங்களிலும் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் டவுன் மண்டல சுகாதார அலுவலர் முன்னிலையில் இன்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. டவுன் தெற்கு மவுண்ட் ரோடு, கல்லணை தெரு, மேல மவுண்ட் ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளில் இன்று தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படு கிறதா? என்று ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 11 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,400 அபராதமாக விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News