வழிபாடு

முத்து கிரீடம் அலங்காரத்தில் நம்பெருமாள்

Published On 2023-12-15 05:28 GMT   |   Update On 2023-12-15 05:28 GMT
  • வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாள்.
  • அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி பகல் பத்து உற்சவத்தின் இரண்டாம் நாளான நேற்று காலை நம்பெருமாள் முத்து கிரீடம், ரத்தின காதுகாப்பு, நெல்லிக்காய் மாலை, காசு மாலை, அடுக்கு பதக்கம் உள்ளிட்ட திருவாபரணங்கள் அணிந்து சர்வ அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ராமானுஜர், நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார் பின்தொடர பக்தர்கள் புடைசூழ ராஜமகேந்திரன் திருச்சுற்று வழியாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.

Tags:    

Similar News