கிரிக்கெட்

கோலியை கட்டியணைத்த கம்பீர்.. ஆஸ்கரே கொடுக்கலாம் - சுனில் கவாஸ்கர்

Published On 2024-03-29 18:10 GMT   |   Update On 2024-03-29 18:10 GMT
  • இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
  • சுனில் கவாஸ்கர் டைமிங்கில் கொடுத்த ரியாக்ஷன் வைரல்.

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடையிலான போட்டியின் போது விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்து கொண்ட சம்பவம் மைதானத்தில் மயான அமைதியை ஏற்படுத்தியது. மேலும் இந்த சம்பவம் இணையத்தில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

போட்டியின் போது களத்திற்கு வந்த கம்பீர் கோலியை கட்டியணைத்தார். இது தொடர்பான வீடியோவை தனியார் நிறுவனம் மீண்டும் ஒளிபரப்பியது. அப்போது வீடியோவை பார்த்த சுனில் கவாஸ்கர் டைமிங்கில் கொடுத்த ரியாக்ஷன் வைரலாகி வருகிறது.


இந்த வீடியோவை பார்த்த ரவி சாஸ்திரி, "கோலி, கம்பீர் கட்டியணைத்துக் கொண்டது கே.கே.ஆர். அணிக்கு ஃபேர்பிளே (Fairplay) விருது கிடைக்க உதவியாக இருக்கும்," என்று தெரிவித்தார். இதை கேட்ட சுனில் கவாஸ்கர், "ஃபேர்பிளே மட்டுமல்ல ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்," என்று தெரிவித்தார்.

விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் கட்டியணைத்துக் கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Tags:    

Similar News