இன்ஸ்டாவில் ப்ரோக்கன் ஹார்ட் ஸ்டோரி வைத்த சூர்யகுமார் யாதவ்- காரணம் இதுதான்
- சூர்யகுமார் யாதவ் இன்ஸ்டா ஸ்டோரியில் பிரோக்கன் ஹார்ட் வைத்திருந்தார்.
- அதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.
ஐபிஎல் தொடர் 2024 வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முறை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா களமிறங்குகிறார்.
ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. தற்போது வரை அதற்கு ரசிகர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேனான சூர்யகுமார் யாதவ் தற்போது டிரெண்டாகி வருகிறார்.
அது ஏன் என்றால். அவரது இன்ஸ்டா ஸ்டோரியில் பிரோக்கன் ஹார்ட் வைத்திருந்தார். இவர் ஏன் இப்படி வைத்திருக்கிறார் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஒருசில ரசிகர்கள் ரோகித்க்கு ஆதரவாகவும் பாண்ட்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்படி வைத்ததாகவும் வதந்திகள் பரவி வந்தனர்.
இந்நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் உடல் தகுதிக்கான சோதனையில் அவர் தேர்ச்சி பெறவில்லை. அடுத்த சோதனை நாளை மறுதினம் நடைபெறுகிறது. இதன் காரணமாக தான் அவர் அந்த ஸ்டோரி வைத்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அவர் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாடுவது சந்தேகம் என்ற நிலையில் உள்ளது.