கிரிக்கெட் (Cricket)

ஐ.பி.எல். 2024: ரசிகர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த கம்பீர்

Published On 2024-04-06 11:21 GMT   |   Update On 2024-04-06 11:21 GMT
  • கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் 2 முறை கோப்பை வென்றுள்ளது
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கம்பீர் இந்த சீசனில் அந்த அணியின் ஆலோசகராக உள்ளார்

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கம்பீர் இந்த சீசனில் அந்த அணியின் ஆலோசகராக உள்ளார்.

கம்பீர் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் 2 முறை கோப்பை வென்றுள்ளது.

கடந்த 2 ஐ.பி.எல். சீசன்களில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்து கம்பீர் இந்த சீசனில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை கம்பீர் சமூக எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், "எங்கள் ரசிகர்களின் அன்பினால்தான் நாங்கள் இங்கே இருக்கிறோம்!" என்று பதிவிட்டுள்ளார்

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றதும் பாரதிய ஜனதாவில் கம்பீர் இணைந்தார். பாஜகவும் உடனடியாக அவருக்கு 2019 மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்தது. எம்.பி ஆக இருந்த கம்பீர் இந்தாண்டு ஐ.பி.எல்-லில் கொல்கத்தா அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக அண்மையில் அரசியலில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News