கிரிக்கெட்

ரோகித் குறித்த கேள்வி.. பதிலளிக்க மறுத்த பாண்ட்யா.. வைரலாகும் வீடியோ

Published On 2024-03-18 12:30 GMT   |   Update On 2024-03-18 12:30 GMT
  • ரோகித் சர்மா குறித்த கேள்விக்கு ஹர்திக் பாண்ட்யா பதிலளித்தார்.
  • ஆனால் ரோகித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஏன் என்ற கேள்விக்கு பாண்ட்யா - பவுச்சர் பதிலளிக்காமல் இருந்தனர்.

2024-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இதனால் அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2 வருடங்களாக குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த பாண்ட்யாவை இந்த வருடம் மும்பை அணி வாங்கி அவரை கேப்டனாக நியமித்துள்ளது. மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோகித் சர்மா ஒரு சாதாரண வீரராக மட்டும் செயல்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்திக்கை கேப்டனாக நியமித்ததற்கு ஏராளமான ரசிகர்கள் தற்போது வரை விமர்சித்து வருகின்றனர்.

இதனால் மும்பை இந்தியன்ஸ் குறித்து கருத்துக்கள் சமூக வலைதளங்களில் அவ்வபோது வைரலாகி வருவதுண்டு. அந்த வகையில் இன்று ஹர்திக் மற்றும் பவுச்சர் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றனர்.

இந்நிலையில் ரோகித்தை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதற்கு என்ன காரணம் என்று பத்திரைக்கையாளர் கேட்ட கேள்விக்கு ஹர்திக் மற்றும் பயிற்சியாளர் பவுச்சர் மெளனமாக இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்த சந்திப்பின் போது ரோகித் சர்மா குறித்து கேள்வி கேட்க்கப்பட்ட போது பதிலளித்த பாண்ட்யா, கேப்டன்சி பற்றிய குறிப்புகள் ஆவணங்களில் இருந்ததாக தகவல் வெளியானது என்ற கேள்விக்கும் (இந்த கேள்விக்கு மும்பை அணி தரப்பில் இருந்து இந்த கேள்வி வேண்டாம். அதற்கு பாண்ட்யா பதிலளிக்க முடியாது என ஒருவர் தெரிவித்தார்) மும்பை கேப்டன் பதவியில் இருந்து ரோகித் நீக்கப்பட்டது மற்றும் ஹர்திக் நியமிக்கப்பட்டதற்கு என்ன காரணம் என்ற கேள்விக்கும் இருவரும் பதிலளிக்காமல் மெளனம் சாதித்தனர்.

Tags:    

Similar News