கிரிக்கெட்
இந்தியாவுக்கு 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
- ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
- இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில் இன்று நடைபெற்ற டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் ஆடியது.
ஆஸ்திரேலியா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 52 ரன்களை குவித்தார். இவருடன் களமிறங்கிய 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஜோஷ் இங்லிஸ் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
போட்டி முடிவில் ஆஸ்திரேலியா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் இங்லிஸ் 110 ரன்களை குவித்தார். இந்தியா சார்பில் ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.