கிரிக்கெட் (Cricket)

வாஷிங்டன் சுந்தர் விலகல்- முதல் முறையாக இந்திய அணியில் இணையும் மாற்று வீரர்

Published On 2026-01-12 14:15 IST   |   Update On 2026-01-12 14:15:00 IST
  • 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
  • இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்தியா- நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.

இந்த போட்டியின் போது தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் காயமடைந்தார். இந்த காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஆயுஷ் பதோனி முதன்முறையாக இந்திய ஒருநாள் அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெறும் இடமான ராஜ்கோட்டில் அவர் அணியுடன் இணைவார்.

Tags:    

Similar News