ஒருநாள் போட்டியில் நாங்கதான்- தொடரும் இந்திய அணியின் சரித்திர சாதனை
- 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை வகிக்கிறது.
- 2-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 300 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 306 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் 300 ரன்களை சேசிங் செய்ததன் மூலம் அதிக முறை 300+ ரன்களை சேசிங் செய்த அணி என்ற சரித்திர சாதனையை இந்தியா படைத்துள்ளது.
இந்திய அணி இதுவரை 20 முறை 300+ ரன்களை சேசிங் செய்து யாரும் தொடமுடியாத இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து (15 முறை) அணி உள்ளது. அதனை தொடர்ந்து ஆஸ்திரேலியா (14), பாகிஸ்தான் (12), இலங்கை (11), நியூசிலாந்து (11) ஆகிய அணிகள் உள்ளன.