சினிமா

நெஞ்சமெல்லாம் பல வண்ணம்

Published On 2018-08-15 12:28 GMT   |   Update On 2018-08-15 12:28 GMT
ஸ்ரீகாந்த் இயக்கத்தில் மகேஷ் பாபு, வெங்கடேஷ் - சமந்தா, அஞ்சலி நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டுள்ள `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' படத்தின் முன்னோட்டம். #NanjamPalaVannam #MaheshBabu
மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்துள்ள படம் `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்'.

தெலுங்கில் “ சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிய இந்த படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இசை - மிக்கி ஜே.மேயர், பாடல்கள் - அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண்பாரதி, ராஜராஜா, ரா.சங்கர், பா.சபிக், தமிழ்ப்ரியன் நசிர், எடிட்டிங் -  நிவேதா ஸ்டுடியோஸ் செல்வம், வசனம் மற்றும் தமிழாக்கம் -A.R.K.ராஜராஜா, தயாரிப்பு - ரோல்ஸ் பிரைட் மீடியா(பி.லிட்) மெஹபு பாஷா, இயக்கம் - ஸ்ரீகாந்த். 

படம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் பேசும் போது,

இந்த படம் தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீட், பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும் தான் என்கிற மாயையை தகர்த்தெரிந்துள்ளது.



முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன், தம்பிகளாக நடித்துள்ளனர். கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அதே போலவே இந்த படத்தில் மகேஷ்பாபு கடைக்குட்டியாக நடித்துள்ளார். அது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் செல்வந்தன் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவிற்கு பெயர் சொல்லும் படமாக இந்த நெஞ்சமெல்லாம் பல வண்ணம் இருக்கும். 

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்றார். #NanjamPalaVannam #MaheshBabu #Venkatesh #Samantha #Anjali

Tags:    

Similar News