சினிமா
அடுத்த 5 நாட்களுக்கு விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து - சர்கார் படக்குழு அறிவிப்பு
விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு நேற்று வெளியாகிய நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு சிறப்பு விருந்து அளிக்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. #Sarkar #Vijay #SarkarWorkingStills
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்தது.
இந்த நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு விஜய் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நாளை முதல் அடுத்த 5 நாளைக்கு ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் அதன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர். #Sarkar #Vijay #SarkarWorkingStills