search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராகுல் காந்தி"

    • காங்கிரஸுக்கு பணம் கிடைத்தது என்று கூறிய பிரதமர் மோடியின் கருத்து.
    • பிரதமர் மோடியின் கருத்துக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் பதிலளித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடியை குறிவைத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "டெம்போவில் கோடீஸ்வரர்களிடமிருந்து" பெற்ற நோட்டுகளை பாஜக எண்ணிக்கொண்டிருக்கும் நிலையில், சமத்துவத்தை உறுதிசெய்ய காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் என்று கூறினார்.

    அதானி மற்றும் அம்பானியிடம் இருந்து டெம்போக்களில் காங்கிரஸுக்கு பணம் கிடைத்தது என்று கூறிய பிரதமர் மோடியின் கருத்துக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர் பதிலளித்தார்.

    இதுதொடர்பாக ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் கோட்டீஸ்வரர்களிடம் இருந்து பெற்ற 'நோட்டுகளை' எண்ணுகிறார்கள். நாங்கள் 'சாதிக் கணக்கெடுப்பு' மூலம் நாட்டை எக்ஸ்ரே செய்வோம். ஒவ்வொரு பிரிவினருக்கும் சமமான பங்களிப்பை உறுதி செய்வோம்.

    அதானியும் அம்பானியும் கறுப்புப் பணத்தை அனுப்பினார்களா என்பது குறித்து சிபிஐ அல்லது இடி விசாரணைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும்" என்றார்.

    சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம் தொடர்பாக அரசை எதிர்க்கும் கட்சி விளம்பரத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    சமூக- பொருளாதார மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்த தனது கருத்தைப் பகிர்ந்து கொள்ளுமாறு பிரதமரிடம் காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.

    ஜாதிகள் மற்றும் துணை ஜாதிகள் மற்றும் அவர்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை கணக்கிடுவதற்காக நாடு தழுவிய சமூக-பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதாக காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விவாதத்தில் பங்கேற்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
    • இந்த பொது விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது.

    உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர், உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏபி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என் ராம் ஆகியோர் பாராளுமன்ற தேர்தல் தோதான விவாதத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் எழுதியுள்ள கடிதத்தில், "பொதுமக்கள் என்ற முறையில், நாங்கள் இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் மட்டுமே கேட்டோம், ஆனால் அர்த்தமுள்ள பதில்கள் எதையும் கேட்கவில்லை. ஆகவே மக்கள் உண்மையை தெரிந்து கொண்டு வாக்கு செலுத்துவதற்கு இந்த விவாதம் தேவைப்படுகிறது.

    ஆகவே முக்கிய தேர்தல் பிரச்சினைகள் குறித்த இந்த விவாதத்தில் பங்கேற்குமாறு மோடியையும் ராகுல் காந்தியையும் நாங்கள் கேட்டு கொள்கிறோம். அவர்கள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அவர்களின் தரப்பிலிருந்து ஒரு பிரதிநிதியை அவர்கள் பரிந்துரைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், "இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விவாதத்தில் பங்கேற்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த பொது விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று நாடே எதிர்பார்க்கிறது" என்று முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விடுத்த அழைப்புக்கு ராகுல் காந்தி கடிதம் மூலம் பதில் அளித்துள்ளார். 

    • 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
    • மஹாராஷ்டிராவில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

    பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, கடந்த மாதம் 19-ந் தேதி 102 தொகுதிகளுக்கும், 26-ந்தேதி 89 தொகுதிகளுக்கும் மே 7-ம் தேதி 93 தொகுதிகளுக்கும் முதல் 3 கட்டங்களாக ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டது.

    இதனையடுத்து 4-வது கட்டத் தேர்தல் 10 மாநிலங்களில் வருகிற 13-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று 96 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிவடைந்தது.

    இந்நிலையில், மஹாராஷ்டிராவில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட தேர்தல் பிரசாரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அது தொடர்பான வீடியோவை பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவை பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, "மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், ஹரியானா, பீகார் என நாடு முழுவதும் இந்தியா கூட்டணியின் புயல் வீசுகிறது. மீண்டும் சொல்கிறேன் ஜூன் 4 ஆம் தேதிக்கு பிறகு நரேந்திர மோடி பிரதமராக இருக்க மாட்டார்" என்று பதிவிட்டுள்ளார்.

    • நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு குற்றம்சாட்டியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
    • இது தொடர்பாக அவருக்கு தெரிந்திருந்தால், எதுவுமே செய்யாமல் இருந்தது ஏன்?.

    அதானி, அம்பானி டெம்போ மூலம் எதிர்க்கட்சிக்கு பணம் கொடுத்ததாக பிரதமர் மோடி கடந்த 8-ந்தேதி தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் மீது குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து சிபிஐ, அமலாக்கத்துறை அமைப்புகள் விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் அதானி, அம்பானி குற்ச்சாட்டு குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடியை தடுப்பது எது? என ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    கடந்த 8-ந்தேதி டெம்போ மூலம் எதிர்க்கட்சிகளுக்கு அதானி மற்றும் அம்பானி பணம் சப்ளை செய்ததாக பிரதமர் மோடி குற்றம்சாட்டினார். நாட்டின் மிகப்பெரிய பணக்காரர்கள் மீது இதுவரை இல்லாத அளவிற்கு குற்றம்சாட்டியுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இது தொடர்பாக அவருக்கு தெரிந்திருந்தால், எதுவுமே செய்யாமல் இருந்தது ஏன்?. அவரிடம் அத்தகைய விரிவான மற்றும் நடவடிக்கை எடுக்கக்கூடிய தகவல்கள் இருந்தால் விசாரணை அமைப்புகளை (சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை) பயன்படுத்த தடுத்தது என்ன?

    கடந்த ஆண்டு ஹம் அதானி கே ஹைன் கவுன் (HAHK) சீரிஸ் கீழ் பிரதமரிடம் 100 கேள்விகளைக் கேட்டோம். தற்போது, டெம்போக்களில் பணப் பைகளைப் பெறுவது குறித்து நாட்டு மக்களுக்கு வாக்குமூலத்தோடு தனது நீண்ட மௌனத்தைக் கலைக்கிறாரா பிரதமர்?

    அதானியை சட்டத்திற்குப் புறம்பாக பாதுகாக்க பிரதமர் எவ்வளவு தூரம் சென்றார் என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு நன்கு தெரியும்.

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    • மோடி இந்தியாவின் பிரதமராகமாட்டார் என்பதை எழுத்துப்பூர்வ உறுதியாக அளிக்கிறேன்.
    • எந்த டெம்போ, என்ன வகையான பணத்தை அதானி அனுப்பினார் என்பது மோடிக்கு தெரியும்.

    காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களையும், இந்தியா கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    உத்தர பிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேரடியாக களம் இறங்கியுள்ளார். அவரை ஆதரித்து ராகுல் காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

    நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராகமாட்டார். அவரது பிரதமர் காலம் முடிந்தது. இதை எழுத்துப்பூர்வ உறுதியாக நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.

    கடந்த 10 ஆண்டுகளாக நீங்கள் பார்த்தீர்கள் என்றால், பிரதமர் மோடி அதானி மற்றும் அம்பானி பெயரை உச்சரித்தது கிடையாது. தற்போது அவர்களால் மோடியை காப்பாற்ற முடியும் என அவர் நினைக்கிறார்.

    இந்தியா கூட்டணி என்னை சூழ்ந்து சுற்றி வளைத்துள்ளது. நான் தோற்றுக் கொண்டு வருகிறேன். என்னை காப்பாற்றுங்கள். அதானி- அம்பானி ஜி என்னை காப்பாற்றுங்கள் என மோடி, அவரது தொழில் அதிபர் நண்பர்களிடம் கூறும் நிலையில் மோடி இருக்கிறார் என்பதுபோல் ராகுல் காந்தி கிண்டல் செய்தார்.

    ஆகவே எந்த டெம்போ, என்ன வகையான பணத்தை அதானி அனுப்பினார் என்பது மோடிக்கு தெரியும். டெம்போ குறித்த தனிப்பட்ட அனுபவம் மோடிக்கு உள்ளது.

    உத்தர பிரசேதத்தில் நீங்கள் பார்க்க போகிறீர்கள்... இந்தியா கூட்டணி என்ன புயல் வந்து கொண்டிருக்கிறது. இங்கு பா.ஜனதா மிகப்பெரிய தோல்வியை சந்திக்க போகிறது என்பதை நான் உங்களுக்கு எழுத்துப்பூர்வ உறுதியாக தருகிறேன். இந்தியாவில் மாற்றம் நிகழப் போகிறது. மக்கள் முடிவு செய்துவிட்டனர். உ.பி.யில் மாற்றம் நிகழும் என மக்கள் முடிவு செய்திருந்தனர்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    • 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகிலேஷ் யாதவ் களம் இறங்கி உள்ளதால் போட்டி கடுமையாகி உள்ளது.
    • பாரதிய ஜனதா மீண்டும் தனது பலத்தை நிரூபிக்குமா? என்பது ஜூன் மாதம் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.

    லக்னோ:

    பாரதிய ஜனதாவின் கோட்டையாக திகழ்ந்து வரும் உத்தரபிரதேசத்தில் அம்மாநில முன்னாள் முதல்-மந்திரியும், சமாஜ்வாடி கட்சித்தலைவருமான அகிலேஷ்யாதவ் பாராளுமன்ற தேர்தலில் நேரடியாக களம் இறங்கியது அரசியல் களத்தை சூடாக்கி உள்ளது. அங்குள்ள கண்ணூஜ் தொகுதியில் அவர் சமாஜ்வாடி கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.

    முதலில் இத்தொகுதியில் அகிலேஷ் யாதவ்வின் சகோதரி மகன் தேஜ் பிரதாப் சிங் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது மாமாவுக்காக ( அகிலேஷ்யாதவ்) தொகுதியை விட்டு கொடுத்தார். இதனால் கண்ணூஜ் நட்சத்திர தொகுதியாக மாறியது. இத்தொகுதியில் அவர் ஏற்கனவே 2000, 2004 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றி பெற்று சாதனை படைத்தார். கண்ணூஜ் தொகுதியை பொறுத்த

    வரை அகிலேஷ் யாதவின் குடும்ப தொகுதியாக இருந்து வருகிறது.

    இத்தொகுதியில் அகிலேஷ் யாதவின் தந்தை முலாயம் சிங் யாதவ் ஒருமுறையும், அகிலேஷ் 3 முறையும், அவரது மனைவி டிம்பிள் யாதவ் ஒரு முறையும் வெற்றி வாகை சூடி உள்ளனர். இந்த தொகுதியின் தற்போதைய எம்.பி.யாக பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுப்ரத் பதக் உள்ளார். இம்முறையும் இவர் மீண்டும் போட்டியிடுகிறார். 2014-ம் ஆண்டு தேர்தலில் இவரை டிம்பிள் யாதவ் 19,907 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இதற்கு பழி வாங்கும் வகையில் 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் டிம்பிள் யாதவைவிட 12,353 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று சுப்ரத் பதக் வெற்றி பெற்றார்.

    இம்முறை டிம்பிள் யாதவ் தொகுதி மாறி போட்டியிடுகிறார். அவரது இடத்தை நிரப்பும் வகையில் அவரது கணவர் களத்தில் குதித்துள்ளார்.

    இந்த முறை சமாஜ்வாடி கட்சி காங்கிரசுடன் கூட்டணி அமைத்து இந்தியா கூட்டணி சார்பில் அகிலேஷ் நிற்பதால் கண்டிப்பாக எங்களுக்கு தான் வெற்றி என அக்கட்சி தொண்டர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். அதே சமயம் பாரதிய ஜனதாவை பொறுத்தவரை இது ஒரு கவுரவ பிரச்சனை. எப்படியும் 2 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் அகிலேஷ் யாதவை வீழ்த்துவோம் என பாரதிய ஜனதாவினர் கூறி உள்ளனர். தனது ஆஸ்தான தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அகிலேஷ் யாதவ் களம் இறங்கி உள்ளதால் போட்டி கடுமையாகி உள்ளது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவது போன்ற சூழ்நிலை கண்ணூஜ் தொகுதியில் நிலவுவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

    இத்தொகுதியில் சுமார் 19 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 லட்சம் பேர் முஸ்லீம்கள், யாதவர்கள், பிராமணர்கள் தலா 2.5 லட்சம் பேர் உள்ளனர். கண்ணூஜ்ஜில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பதில் தலித் வாக்குகள் மிக முக்கியமாக உள்ளது. தலித்துகள் சுமார் 4 லட்சம் பேர் உள்ளனர். இவர்களை தவிர ராஜபுத்திரர்கள், வைசியர்கள், மற்றும் குர்மி சமூகத்தினர் கணிசமானவர்கள் வசித்து வருகின்றனர்.

    இத்தொகுதியில் போட்டியை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் முதல்-மந்திரியும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவருமான மாயாவதி தனது கட்சி சார்பில் இம்ரான் பின் ஜாபரை நிறுத்தி உள்ளார்.

    இவர் தலித் ஓட்டுகள் மட்டுமல்லாது முஸ்லீம் ஓட்டுகளையும் பிரிப்பார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. வாக்காளர்கள் மத்தியில் போதிய அளவு வேலை வாய்ப்பு இல்லை என்ற எண்ணம் உள்ளது. ஏராளமானவர்கள் படித்து விட்டு வேலை இல்லாமல் இருந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். இது இத்தேர்தலில் பெரும் சவாலை ஏற்படுத்தி இருக்கிறது. கண்ணூஜ் தொகுதியில் இம்முறை பாரதீயஜனதா- சமாஜ்வாடி, கட்சிகளுடன் ஓட்டு வங்கி வைத்துள்ள பகுஜன் சமாஜ் கட்சியும் பலப்பரீட்சையில் இறங்கி உள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியை பொறுத்த வரை இத்தொகுதியில் இதுவரை வென்றதாக வரலாறு இல்லை. இதனால் பதக்-யாதவ் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்தி 4-வது முறையாக அகிலேஷ் யாதவ் சாதிப்பாரா? அல்லது பாரதிய ஜனதா மீண்டும் தனது பலத்தை நிரூபிக்குமா? என்பது ஜூன் மாதம் 4-ந்தேதி ஓட்டு எண்ணிக்கையில் தெரிந்து விடும்.

    • பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது.
    • பிரதமரிடம் இருந்து வரும் இந்தக் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாகப் பார்க்க வேண்டும்.

    மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப. சிதம்பரம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

    பிரதமரின் குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கோருவது முற்றிலும் சரியானது. பிரதமர் மிகக் கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். இரண்டு முக்கிய தொழிலதிபர்களிடம் (அம்பானி மற்றும் அதானி) டெம்போ நிரப்பும் அளவு பணம் இருப்பதாகவும், அவை காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டதாகவும் பிரதமரிடம் இருந்து வரும் இந்தக் குற்றச்சாட்டை மிகவும் தீவிரமாகப் பார்க்க வேண்டும்.

    சிபிஐ அல்லது அமலாக்கத்துறை மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார் விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை முற்றிலும் நியாயமானது

    கடந்த 24 மணி நேரத்தில் பிரதமர் (சிபிஐ அமைச்சர்) அமைதி காத்தது ஏன்?

    விசாரணைக்கான கோரிக்கைக்கு நிதி அமைச்சர் (ED அமைச்சர்) ஏன் பதிலளிக்கவில்லை? அவர்களின் மௌனம் அபத்தமானது.

    இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    • கடந்த 10 ஆண்டுகளில் 22 பெரிய தொழிலதிபர்களுக்காக மோடி உழைத்தார்.
    • அங்கன்வாடி பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டம் நர்சாபூர் மற்றும் ஐதராபாத் சரூர் நகர் ஆகிய இடங்களில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது :-

    இந்திய அரசியலமைப்பு ஒரு புத்தகம் மட்டும் அல்ல. ஏழைகளின் இதய துடிப்பு. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டத்தை அதிரடியாக மாற்றுவோம்.

    இட ஒதுக்கீட்டை ஒழிப்போம் என்று பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ் கூறி வருகிறது. அம்பேத்கர், மகாத்மா காந்தி, நேரு ஆகியோர் அரசியல் சட்டத்திற்காக போராடினார்கள்.

    அவர்கள் உருவாக்கிய அரசியல் சட்டத்தை மாற்றி அவர்களின் தியாகத்தை வீணாக்குவது தான் பா.ஜ.க.வின் யோசனையாக தற்போது இருக்கிறது. அரசியல் சாசனத்தை காங்கிரஸ் முன் நின்று பாதுகாக்கும்.

    தற்போது இதற்காகத்தான் தேர்தல் போர் நடந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 10 ஆண்டுகளில் 22 பெரிய தொழிலதிபர்களுக்காக மோடி உழைத்தார். அவர்களின் ரூ.16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். இந்த நிதி மூலம் நாடு முழுவதும் 24 ஆண்டுகளுக்கு தேவையான வேலை உறுதி திட்டத்தை கொண்டு வந்திருக்கலாம்.

    காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் விவசாயிகளின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வோம். நெல் உள்ளிட்ட அனைத்து பயிர்களுக்கும் சட்டப்படி குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும். தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்த பட்ச ஊதியம் ரூ. 250-ல் இருந்து 400 ஆக உயர்த்தப்படும்.

    அங்கன்வாடி பணியாளர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்படும். கோடீஸ்வரர்களிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் ஏழைகளின் வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் மோடி அரசு கோடீஸ்வரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றியது.

    நாங்கள் ஏழைகளை கோடீஸ்வரர்களாக மாற்றுவோம். தொழிலதிபர்களின் லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன் தள்ளுபடிக்கு பதில் சொல்லாதவர்கள் ஏழைகளுக்கு நல்லது செய்வீர்களா என எங்களை பார்த்து கேள்வி கேட்கின்றனர். நாங்கள் எப்போதும் ஏழைகளின் பக்கம் தான் நிற்கிறோம். ஆகஸ்ட் 15-ந் தேதிக்குள் இந்தியா முழுவதும் 30 லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதனை தொடர்ந்து ராகுல் காந்தி மற்றும் தெலுங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி இருவரும் அரசு பஸ்சில் பயணம் செய்தனர்.

    ராகுல் காந்தி நின்றபடியே அரசு பஸ்சில் பயணம் செய்தார். அவர் பெண்களுக்கான இலவச பஸ் பயண வசதி குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள திட்டங்கள் குறித்து எடுத்து கூறினார். ராகுல் காந்தி பஸ் பயணத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • ஜூன் 4-ந்தேதி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்.
    • காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளை தொடங்குவோம்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ஒருவரான ராகுல் காந்தி இன்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

    அதில் "ஜூன் 4-ந்தேதி இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஆகஸ்ட் 15-ந்தேதிக்குள் காலியாக உள்ள 30 லட்சம் அரசுப் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைகளை தொடங்குவோம்.

    மோடியின் பொய் பிரச்சாரத்தை கண்டு மக்கள் ஏமாற வேண்டாம். வேலையை தேர்ந்தெடுங்கள் வெறுப்பை அல்ல. பதவி கைவிட்டுப் கோகும் பயத்தில் மோடி பல்வேறு நாடகங்களை நடத்தி வித்தை காட்டுகிறார்" இளைஞர்கள் உத்தரவாதம் குறித்து பேசியுள்ளார்.

    • பிரதமர் மோடி, இடஒதுக்கீடு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்டம் ரத்து மற்றும் செல்வத்தை மறுபங்கீடு செய்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு பல கேள்விகள் எழுப்பியுள்ளார்.
    • மல்லிகார்ஜுன கார்கே, அரசியலமைப்பை சிதைப்பது, தேர்தல் பத்திர திட்டம், சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக பல கேள்விகளை கேட்டுள்ளார்.

    உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகூர், உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏபி ஷா மற்றும் மூத்த பத்திரிகையாளர் என் ராம் ஆகியோர் பாராளுமன்ற தேர்தல் தோதான விவாதத்திற்கு பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்திக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

    அக்கடிதத்தில், "தேர்தல் பிரசாரத்தில் பாஜகவும் காங்கிரசும் நமது அரசியலமைப்பு ஜனநாயகத்தின் அடிப்படை தொடர்பான பல கேள்விகளை கேட்டுள்ளனர்.

    குறிப்பாக பிரதமர் மோடி அவர்கள் இடஒதுக்கீடு, ஜம்மு காஷ்மீரின் சிறப்பு சட்டம் ரத்து மற்றும் செல்வத்தை மறுபங்கீடு செய்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் அரசியலமைப்பை சிதைப்பது, தேர்தல் பத்திர திட்டம், சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக பல கேள்விகளை கேட்டுள்ளார். மேலும் பிரதமர் மோடியுடன் பொது விவாதம் நடத்த தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

    பொதுமக்கள் என்ற முறையில், நாங்கள் இரு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் மட்டுமே கேட்டோம், ஆனால் அர்த்தமுள்ள பதில்கள் எதையும் கேட்கவில்லை. ஆகவே மக்கள் உண்மையை தெரிந்து கொண்டு வாக்கு செலுத்துவதற்கு இந்த விவாதம் தேவைப்படுகிறது.

    ஆகவே முக்கிய தேர்தல் பிரச்சினைகள் குறித்த இந்த விவாதத்தில் பங்கேற்குமாறு மோடியையும் ராகுல் காந்தியையும் நாங்கள் கேட்டு கொள்கிறோம். அவர்கள் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் அவர்களின் தரப்பிலிருந்து ஒரு பிரதிநிதியை அவர்கள் பரிந்துரைக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது
    • இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார்.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் ஒரு அனிமேஷன் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

    அந்த அனிமேஷன் வீடியோவில், எஸ்.சி, எஸ்.டி மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) ஒரு கூடையில் "முட்டை" போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இது இட ஒதுக்கீட்டைக் குறிக்கிறது. இந்த இட ஒதுக்கீட்டுக் கூடையில் முஸ்லிம் சமூகத்தின் மற்றொரு "முட்டையை" ராகுல் காந்தி போடுகிறார். காங்கிரஸ் தலைவர்கள் எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசிக்களை விட முஸ்லிம் சமூகத்திற்கு ஆதரவாக அதிக நிதியை கொடுத்து, அவர்களின் இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு கொடுத்து விடுவதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

    கர்நாடகா பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் எஸ்சி/எஸ்டி மக்களுக்கு எதிராக பகை, வெறுப்பு மற்றும் மத மோதல்களை உருவாக்கும் நோக்கில் அனிமேஷன் வீடியோ வெளியிட்டதாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோருக்கு எதிராக, தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் புகார் அளித்தது.

    இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா, பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா ஆகியோர் மீது இரு பிரிவினர் இடையே மோதல், வெறுப்பை தூண்டுதல் போன்ற பிரிவுகளில் பெங்களூரு போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், எஸ்சி/எஸ்டி சமூகத்திற்கு எதிராக கர்நாடக பாஜக வெளியிட்ட வீடியோ தொடர்பாக பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா மற்றும் பாஜக சமூக ஊடகப் பொறுப்பாளர் அமித் மாளவியா ஆகியோரை 7 நாட்களுக்குள் பெங்களூரு ஹைகிரவுண்ட்ஸ் காவல்நிலையத்தில் ஆஜராகுமாறு கர்நாடக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    கர்நாடக பாஜகவின் எக்ஸ் பக்கத்தில் முஸ்லிம்கள் குறித்து வெளியான அனிமேஷன் வீடியோவை உடனடியாக நீக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டது. இதனையடுத்து எக்ஸ் நிறுவனம் அந்த வீடியோவை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.
    • அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.

    பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் பிரசாரம் செய்தார்.

    அப்போது பேசிய மோடி, "காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.

    ஒரே இரவில் அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? இதில் காங்கிரஸ் நாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தொடர்பாக ரேபரேலியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.

    பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், "பெரும் தொழிலதிபர்களுடன் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி தினமும் கூறுகிறார். நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார், ஆனால் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்

    அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களின் பெயரை கூட உச்சரிக்காத பிரதமர் மோடி, தேர்தலுக்காக இப்படி பேசுகிறார்" என்று தெரிவித்தார். 

    ×