search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குஷ்பு"

    • கடந்த மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற திமுக கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி ராதிகா சரத்குமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக சொல்லப்படுகிறது.
    • நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார்.

    சில மாதங்களுக்கு முன்பு திமுக கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி தமிழ்நாடு ஆளுநர் மற்றும் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்தார்.

    இதையடுத்து, சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

    பின்பு தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து மீண்டும் அவர் திமுகவில் சேர்க்கப்பட்டார்.

    கடந்த மாதம் 15 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது ராதிகா சரத்குமார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி பேசியதாக சொல்லப்படுகிறது.

    இந்நிலையில் அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராதிகா, சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டிருந்தார்.

    அதில், "ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்" என்று பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் அவர் டேக் செய்துள்ளார்.

    இந்நிலையில், திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி ராதிகா சரத்குமார் தரப்பில் அவரது மேலாளர் நடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

    அந்த புகார் மனுவில், தனது குடும்பம் பற்றியும் தனது கணவர் பற்றியும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிகவும் இழிவாக பேசியதாகவும் எந்தவொரு காரணமும் இன்று பொதுவெளியில் அவதூறு செய்திகளை மக்களிடையே பரப்பி அதன்மூலம் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி விளம்பரம் தேடுகிறார் என்றும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அண்மையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திமுக கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி தமிழ்நாடு ஆளுநர் மற்றும் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
    • சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

    சில மாதங்களுக்கு முன்பு திமுக கூட்டத்தில் பேசிய சிவாஜி கிருஷ்ண மூர்த்தி தமிழ்நாடு ஆளுநர் மற்றும் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். இதற்கு குஷ்பு கண்டனம் தெரிவித்தார்.

    இதையடுத்து, சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.

    பின்பு தனது பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்டதை தொடர்ந்து மீண்டும் அவர் திமுகவில் சேர்க்கப்பட்டார்.

    அண்மையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்தார். இது தொடர்பாக திமுக கூட்டத்தில் சிவாஜி கிருஷ்ண மூர்த்தி சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

    இந்நிலையில் அந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராதிகா, சிவாஜி கிருஷ்ண மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    அதில், "ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருந்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங்களே...அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்" என்று பதிவிட்டுள்ளார்.

    அந்த பதிவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினையும், அமைச்சர் உதயநிதியையும் அவர் டேக் செய்துள்ளார்.

    • இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன.
    • ஒரு படம் தயாராவது கூட்டு முயற்சியால் தான்.

    இசையமைப்பாளர் இளையராஜா பாடல் உரிமை தனக்கே சொந்தம் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது முதல் இசை பெரிதா? மொழி பெரிதா? என்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. இதில் திரையுலக பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நடிகை குஷ்பு இசை பெரிதா? மொழி பெரிதா என்ற கேள்விக்கு பதில் அளித்து கூறும்போது, "சினிமா துறையில் எல்லா விஷயங்களுமே கூட்டு முயற்சியால்தான் நடக்கிறது. எது பெரிது என்ற விஷயத்தை இயக்குனரும், இசையமைப்பாளரும் தான் பேச வேண்டும். இளையராஜாவுக்கும், வைரமுத்துக்கும் இடையே பிரச்சினை இருந்தால் அவர்கள்தான் பேச வேண்டும்'' என்றார்.

    தயாரிப்பாளர்கள் இசை எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறுவது குறித்து ஒரு தயாரிப்பாளரான உங்களின் கருத்து என்ன என்று கேட்டபோது, `மீண்டும் சொல்கிறேன். ஒரு படம் தயாராவது கூட்டு முயற்சியால் தான். இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை'' என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சி.எம்.ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
    • ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.

    திருப்பதி:

    பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தமிழக பாராளுமன்ற தேர்தலில் வேலூரில் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய மறுத்தார்.

    தற்போது தெலுங்கானா, ஆந்திர மாநிலத்தில் தீவிர பிரசாத்தில் ஈடுபட்டு வருகிறாார்.

    ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சி.எம்.ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    குஷ்புவின் தேர்தல் பிரசாரத்தின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட 50 பேர் கூட இல்லை. இதனால் குஷ்பு எதுவும் பேசாமல் கைகூப்பிய படி வாகனத்தில் சென்றார். ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.

    3 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள போதிலும் 50 பேர் கூட இல்லாததால் இதனை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.

    வீடியோவை பார்த்தவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்புவின் பிரசாரத்திற்கு 50 பேர் கூட இல்லை என கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.

    • தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரத்தில் குதித்துள்ளார்.
    • தேர்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்றபடி குஷ்பு உற்சாகமாக பேசினார்.

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.க கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் தொடங்கினார்.

    வேலூரில் பாஜக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏசி சண்முகத்தை ஆதரித்து நடிகர் குஷ்பூ பிரசாரம் செய்த அவர் திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி பிரசார களத்தில் இறங்கினார். வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு பிரசாரத்தில் குதித்துள்ளார். செகந்திராபாத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் கிஷன் ரெட்டியை ஆதரித்து நேற்று குஷ்பு பிரசாரம் செய்தார்.

    அவரை காண உள்ளூர் தலைவர்களுடன் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். தேர்தல் பிரசாரத்தில் திறந்த வேனில் நின்றபடி குஷ்பு உற்சாகமாக பேசினார். அவர் தனது ரசிகர்களை வாழ்த்தி உற்சாகப்படுத்தினார்.

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதியில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் நடிகை குஷ்பு நடித்து பிரபலமானார்.

    இதனால் குஷ்புவை பாஜக மேலிடம் பிரசார களத்தில் இறக்கி உள்ளது. தமிழகத்தில் பிரசாரத்திற்கு மறுத்த குஷ்பு தெலுங்கானா மாநிலத்தில் திறந்த வேனில் நின்றபடி பிரசாரம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியது.

    • படத்தின் டிரெயிலர் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுது
    • அரண்மனை 4 படம் வரும் மே 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    சுந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அரண்மனை 3'. இந்த படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்சி அகர்வால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு தயாரித்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    இந்நிலையில், இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் முந்தைய மூன்று பாகங்களில் நடித்துள்ள சுந்தர்.சி இந்த பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் இதில் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் 'அச்சச்சோ' என்ற முதல் பாடலும் வெளியாகின.

    படத்தின் டிரெயிலர் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுது. இதுவரை 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. ராஷி கண்ணாவும், தமன்னாவும் இணைந்து ஆடிய கவர்ச்சி நடனமான அச்சச்சோ பாடலும் ரசிகர்கலின் மனதை கவர்ந்தது. படம் வரும்  மே 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், நடிகை தமன்னா தனது எக்ஸ் பக்கத்தில் படப்பிடிப்பின்போது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோவை பகிந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அதனுடன் பகிர்ந்த பதிவில், அரண்மனை 4 படத்தில் நடிப்பது மிகவும் சவாலாக இருந்தது. ஆனாலும் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லா சண்டைகாட்சிகளிலும் நடித்தேன். இந்த படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் சந்தோஷம். இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்பொழுது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • டுவிட்டரில் #Vote4INDIA எனப் பதிவிட்டதால் விமர்சனம்.
    • தேசத்தின் வளர்ச்சியை பாஜக நம்புவதால்தான் இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறோம்- குஷ்பு

    பா.ஜனதா கட்சியை சேர்ந்த குஷ்பு இன்று காலை தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்தினார். பின்னர். வாக்கு செலுத்திவிட்டேன் என விரலை காண்பிக்கும் போட்டோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அத்துடன் #Vote4INDIA #VoteFor400Paar ஆகிய ஹேஸ்டேக்குகளை பதிவிட்டிருந்தார்.

    பா.ஜனதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. அந்த கூட்டணி இந்தியா (INDIA Alliance) எனப் பெயர் வைத்துள்ளது. இதனால் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது இந்தியா என்று அழைக்கமாட்டார். இண்டிக் (Indic) என அழைப்பார்.

    இந்த நிலையில் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க கூறியதற்கு நன்றி என காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும், முதல்கட்ட வாக்குப்பதியின் போது குஷ்பு தனது பக்கத்தை மாற்றுக்கொண்டார். உண்மையான பச்சொந்தி என விமர்சனம் செய்யப்பட்டது. மேலும், விமர்சனங்களுடன் டிரோல் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். அதில் "ஏன் உங்களை முட்டாளாக்கிக் கொள்ள வேண்டும்?. தேசத்தின் வளர்ச்சியை பாஜக நம்புவதால்தான் இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்று சொல்கிறோம். காங்கிரஸ் குடும்ப வளர்ச்சியில் நம்பிக்கை வைப்பதால் இது உங்களுக்குப் புதிது. #Votefor400Paar மற்றும் #ModiKaParivaar ஆகியவற்றைப் படிக்கிறீர்களா அல்லது நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட குருட்டுத்தன்மையால் பாதிக்கப்படுகிறீர்களா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.

    • மோகன் 'ஹரா' என்ற ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் 93 வயது சாருஹாசன் தாதா வேடத்தில் நடித்துள்ளார்

    'மூடுபனி' படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்.இந்த படத்தை தொடர்ந்து, கிளிஞ்சல்கள், பயணங்கள் முடிவதில்லை, கோபுரங்கள் சாய்வதில்லை, இதய கோவில், உதயகீதம், பிள்ளைநிலா, 100- வது நாள் என பல வெற்றிப்படங்களில் நடித்தார்.

    80- 90 ம் ஆண்டுகளில் புகழின் உச்சியில் இருந்த இவர் ராதா, நதியா, ராதிகா, அமலா, ரேவதி, நளினி உள்ளிட்ட நடிகைகளுடன் பல படங்களில் நடித்தார். ரேவதியுடன் நடித்த 'மெளன ராகம்' படத்தின் பாடல்கள் மோகனுக்கு பெரும் பெயர் பெற்று தந்தது.

    தற்போது விஜய்யின் 'கோட்' படத்தில் மோகன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.




    இந்நிலையில் நீண்ட காலமாக சினிமாவில் ஒதுங்கி இருந்த மோகன் தற்போது 'ஹரா' என்ற ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில்,குஷ்பு, யோகி பாபு, சாருஹாசன், மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இப்படத்துக்கு லியாண்டர் லீ மார்டி இசையமைத்துள்ளார். இந்த படத்தை, கோயம்புத்தூர் மோகன் ராஜ் , ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து தயாரிக்கின்றனர்.இப்படத்தை விஜய் ஸ்ரீஜி இயக்கி வருகிறார்.




    'ஹரா' படத்தின் 'டீசர்' வெளியீட்டு விழா நடந்தது. இதில் பேசிய தயாரிப்பாளர் மோகன் ராஜ் பேசியபோது "இது நாங்கள் தயாரிக்கும் 2- வது திரைப்படமாகும். இப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் படமாக்கப்படுகிறது. இந்த படம் மீண்டும் மோகனுக்கு வெற்றியை பெற்று தரும்.

    இப்படத்தில் 93 வயது சாருஹாசன் சிறப்பாக நடித்துள்ளார். டான் என்றாலே எதிர்மறை எண்ணம் வருவது இயல்பு. ஆனால் இப்படத்தில் சமுதாயத்திற்கு நல்லது செய்யும் தாதா வேடத்தில் அவர் நடித்துள்ளார்" என்றார்


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.
    • பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர்.

    வேலூர்:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    உடல் நிலை பாதிப்பு காரணமாக நீண்ட நேரம் நிற்க முடியவில்லை. டாக்டர்கள் பிரசாரம் செய்ய வேண்டாம் என கூறியதால் பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகுவதாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார்.

    எனது சமூக வலை தளங்கள் மூலம் பா.ஜனதாவின் கொள்கைகளையும், திட்டங்களையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வேன் என அவர் கூறினார்.


    இந்த நிலையில் குஷ்புவுக்கு பதிலாக அவரது கணவர் நடிகரும் இயக்குனருமான சுந்தர்.சி பிரசார களத்தில் இறங்கி உள்ளார்.

    கடந்த சில நாட்களாக அவர் வேலூர் தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். சுந்தர்.சியின் பேச்சுக்கள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

    பிரசாரத்தின் நடுவில் சுந்தர்.சியிடம் அரண்மனை 4 படம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் சுவாரசியமாக பதில் அளித்தார்.

    • தமிழகத்தில் இன்னமும் பழைய கலாசாரம் கட்டி காக்கப்பட்டு வருகிறது.
    • மருந்து உற்பத்தியில் 138 சதவீதம் இந்தியா வளர்ச்சி பெற்று உள்ளது.

    அரியலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கட்சி மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சிதம்பரம், கரூர் , விருதுநகர் தொகுதிகளில் இன்று பிரசாரம் செய்தார். இதற்காக நேற்று இரவு அவர் விமானம் மூலம் திருச்சிக்கு வந்தார். 3 தொகுதிகளுக்கும் அவர் ஹெலிகாப்டரில் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட அரியலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஜே.பி.நட்டா கலந்துகொண்டார்.

    தமிழகத்தில் இன்னமும் பழைய கலாசாரம் கட்டி காக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பண்பாடு, சனாதன தர்மம் காப்பாற்றப்பட்டு வருகிறது. ஆனால் எதிரணியில் உள்ள தி.மு.க.வினர் சனாதனத்தையும், கலாசாரத்தையும் எப்படி ஒழிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலை பார்த்து வருகிறார்கள்.

    பாராளுமன்றத்தில் மோடி தமிழகத்திற்கு திட்டங்களை கொண்டு வர நினைக்கும் போதெல்லாம் தி.மு.க.வும், காங்கிரசாரும், அவரை பேசவிடாமல் செய்து விடுகிறார்கள். ஆகவே தமிழக கலாசாரம், பண்பாடு, மொழியை பாதுகாக்க பா.ஜ.க. பாடுபட்டு கொண்டிருக்கிறது.

    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு 2019-ம் ஆண்டு பொருளாதாரத்தில் உலக அளவில் 11-வது இடத்தில் இந்தியா இருந்தது. கொரோனா காலகட்டத்தில் அனைத்து நாடுகளும் பொருளாதாரத்தில் தோற்றுபோனாலும் கூட, மோடி அவர்கள் நிர்வாகத்தை திறமையாக கையாண்டதினால், இந்தியா பொருளாதாரத்தில் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று இந்தியா 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

    2024-ம் ஆண்டு பா.ஜ.க. வெற்றி பெற்று, 3-வது முறையாக மோடி பிரதமரானால் பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடத்திற்கு முன்னேறும் என்பதில் சந்தேகம் இல்லை. பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியா பொருளாதாரத்தில் 6 மடங்கு வளர்ச்சி பெற்று உள்ளது. 2014-ல் இந்தியாவில் பயன்பாட்டில் இருந்த செல்போன்களில் 97 சதவீதம் சீனாவில் தயாரிக்கப்பட்டதாக இருந்தது.

    ஆனால் தற்போது 97 சதவீதம் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மேட் இன் இந்தியா செல்போன்களே பயன்பாடடில் உள்ளது. அதற்கு காரணம் பா.ஜ.க.வின் தெளிவான பொருளாதார கொள்கைதான். கார் உற்பத்தியில் ஜப்பான் முதலிடத்திலும், அமெரிக்கா 2வது இடத்திலும் இருந்தது. தற்போது இந்தியா 2வது இடத்திற்கு வந்து விட்டது.

    இதற்கு முன்பாக வெளிநாடுகளில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்பட்டு கொண்டிருந்தது. தற்போது தரமான மருந்து உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வருகிறோம். மருந்து உற்பத்தியில் 138 சதவீதம் இந்தியா வளர்ச்சி பெற்று உள்ளது. பெட்ரோலிய துறையிலும் 106 சதவீதம் வளர்ச்சி பெற்றுள்ளோம். மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து துறையிலும் நாடு முன்னேறும்.

    ஏழை மக்களின் வளர்ச்சி, பெண்களுக்கு அதிகாரம், படித்த இளைஞர்களின் உயர்வு, விவசாயிகளின் பாதுகாப்பு, பட்டியலின மக்களின் வாழ்க்கை தரம் உயர்வு ஆகியவற்றில் அதிக கவனம் எடுத்த மோடி செயல்பட்டு வருகிறார். ஏழ்மையை அகற்றி வலிமையான இந்தியாவாக உருவாக்க அவர் பாடுபட்டு கொண்டிருக்கிறார்.

    80 கோடி மக்களுக்கு 5 கிலோ அரிசி, அல்லது 5 கிலோ கோதுமை, ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியாவில் 25 சதவீத மக்கள் வறுமை கோட்டிற்கு மேல் வந்து விட்டனர் என்று உலக வங்கி கூறுகிறது.

    நாடு முழுவதும் 11.78 கோடி விவசாயிகளுக்கும், அதில் தமிழகத்தில் 30 லட்சம் விவசாயிகளுக்கு வருடத்திற்கு கவுரவ நிதியாக 6 ஆயிரம் ரூபாய் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. சிதம்பரம் தொகுதியில் மட்டும் 2.5 லட்சம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    10 கோடி பெண்களுக்கு இந்தியாவில் இலவச கேஸ் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் தமிழகத்தில் 40 லட்சம் பேருக்கும், சிதம்பரம் தொகுதியில் 2.5 லட்சம் இலவச கேஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 4 கோடி வீடுகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் 16 லட்சம் தமிழகத்திலும், 43 ஆயிரம் வீடுகள் சிதம்பரம் தொகுதியிலும் கட்டப்பட்டு உள்ளது.

    ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் இந்தியாவில் 11.4 கோடி குடிநீர் இணைப்பும், இதில் தமிழகத்தில் 80 லட்சம், சிதம்பரத்தில் 4 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்தின் மீது பிரதமர் மோடிக்கு தனி கவனம் உள்ளது. அதற்கு உதாரணம் தமிழகத்தின் வருவாய் 3 மடங்காக உயர்ந்துள்ளது.

    மத்திய அரசு நிதியானது 4 மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது. சுகாதாரத்துறைக்கு ரூ.1650 கோடி வழங்கப்பட்டு உள்ளது. கிராமபுற சாலை திட்டங்களுக்கு ரூ.630 கோடி வழங்கப்பட்டு உள்ளது. ஜல் ஜீவன் திட்டத்திற்காக ரூ.822 கோடி தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. கிராம வளர்ச்சிக்காக ரூ.10,800 கோடி வழங்கப்பட்டு உள்ளது.

    ரெயில்வே திட்டங்களுக் 7 மடங்கு அதிகமாக தமிழகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை, திருச்சி, ஓசூர், கோவை, சேலம் உள்ளது. இதன் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்துள்ளோம், 11 ஸ்மார் சிட்டி தமிழகத்திற்கு மோடி தந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் மீது மோடிக்கு மிகப்பெரிய பாசம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    ஊழலை ஒழிப்பேன் என்று மோடி சபதம் ஏற்று உள்ளார். இந்தியா கூட்டணியோ ஊழல்வாதிகளை காப்பாற்ற வேண்டும் என்று சபதமேற்று வேலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

    வாரிசு அரசியல், பணம் கொள்ளை யடித்தல், கட்டப்பஞ்சாயத்து என்று தி.மு.க. குடும்ப ஆட்சியின் கூடாரமாக இருந்து வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக கூட்டத்தில் பங்கேற்பதற்காக திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் அருகே தாமரைக்குளம் கிராமத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலை மைதானத்துக்கு வந்தார். பின்பு அங்கிருந்து கார் மூலமாக செந்துறை ரோடு அமீனாபாத், இறைவன் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்ட மேடைக்கு வந்தார்.

    இந்த பிரசார கூட்டத்தில் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா, ஐ.ஜே.கே., அ.ம.மு.க. உட்பட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர். பாஜக தேசிய தலைவர் நட்டா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • பாஜக சார்பில் குஷ்பு பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வந்தார்.
    • பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவிற்கு, குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.

    சென்னை:

    பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கடந்த சில தினங்களாக பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் திடீரென்று பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக பா.ஜனதா தலைவர் நட்டாவுக்கு கடிதம் மூலம் தகவல் தெரிவித்து உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2019-ம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட விபத்தில் எனக்கு கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த 5 ஆண்டுகளாக என்னை கஷ்டப்படுத்துகிறது. தொடர்ந்து சிகிச்சை பெற்றும் குணமாக வில்லை. பிரசாரம் செய்ய வேண்டாம் என்று மருத்துவர்கள் கூறிய நிலையில் என்னால் முடிந்தவரை பிரசாரம் செய்தேன். எதிர்பார்த்தபடியே உடல் நிலை மோசமாகி உள்ளது.

    நீண்டநேரம் நிற்கவும், உட்காரவும் சிரமமாக உள்ளது. எனவே எனது பிரசாரத்தில் இருந்து கனத்த இதயத்துடன் விலகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. எனது சமூக வலை தளங்கள் மூலம் பா.ஜனதாவின் கொள்கைகளையும், திட்டங்களையும் தொடர்ந்து மக்களிடம் கொண்டு செல்வேன்.

    நமது பிரதமர் தொடர்ந்து 3-வது முறையாக பதவி ஏற்பதை நான் எங்கிருந்தாலும் உரத்த குரலில் ஆரவாரம் செய்வதையும் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    குஷ்பு நாளை மும்பை செல்கிறார். அங்கு டாக்டர்கள் சொல்லும் ஆலோசனையை பொறுத்து லண்டன் சென்று சிகிச்சை பெற உள்ளதாக கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அருணாச்சல பிரதேசத்தில் பல நிறுவனங்களில் சீன மக்கள் பணியாற்றி வருகின்றனர்.
    • நாட்டில் நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரசின் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தான்.

    வேலூர்:

    வேலூரில் இன்று நடிகை குஷ்பு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்தது தி.மு.க.வும் காங்கிரசும் தான். தற்போது இலங்கை துறைமுகத்தில் சீனாவுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலை உள்ளது.

    இந்த சூழ்நிலைக்கு காங்கிரசும் தி.மு.க.வும் தான் காரணம். ஆனால் தேர்தலுக்காக மறைத்து நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.

    அருணாச்சல பிரதேசத்தில் சில பகுதிகளை சீனா ஆக்கிரமித்து உள்ளதாக தி.மு.க.வினர் கூறி வருகின்றனர். உண்மைக்கு புறம்பான தகவல்களை அவர்கள் பரப்பி வருகின்றனர்.

    அருணாச்சல பிரதேசத்தில் பல நிறுவனங்களில் சீன மக்கள் பணியாற்றி வருகின்றனர். எனவே அவர்களுக்கு புரியும் வகையில் சீனா மொழியில் பெயர் பலகை வைத்துள்ளனர். இது ஆக்கிரமிப்பு என்று கூற முடியாது.

    உத்தர பிரதேசம் பீகாருக்கு அதிக நிதி வழங்குவதாக கூறுகின்றனர். ஆனால் தமிழகத்திற்கும் ரூ.2 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் மக்களுக்கு என்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும்.

    நாட்டில் நீட் தேர்வு கொண்டு வந்தது காங்கிரசின் தி.மு.க. கூட்டணி ஆட்சியில் தான்.

    சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் இந்த தேர்வினை யாராலும் நீக்க முடியாது. இதனை காங்கிரஸ் சிதம்பரத்தின் மனைவி வக்கீல் நளினி சிதம்பரமே கோர்ட்டு முன்பு தெரிவித்துவிட்டார்.

    தற்போது தேர்தலை ஒட்டி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தி.மு.க.வும், மாநில அரசு விரும்பினால் அதிலிருந்து விலக்கு அளித்துக் கொள்ளலாம் என்று காங்கிரசும் தெரிவித்து இருப்பது மக்களை ஏமாற்றும் பிரசாரம். இதனை மக்கள் நம்பமாட்டார்கள். பா.ஜ.க. மேல் மக்களுக்கு நம்பிக்கை உள்ளது.

    பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகிற 10-ந்தேதி வேலூருக்கு பிரசாரம் செய்ய வருகிறார்.

    காலை 10.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×