என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "election campaign"
- 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
- வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது.
வாரணாசி:
பாராளுமன்றத்துக்கு நடத்தப்பட்டு வரும் 7 கட்ட தேர்தல்களில் இதுவரை 3 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. 4-வது கட்ட தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
5-வது, 6-வது கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தற்போது வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஜூன் 1-ந்தேதி இறுதி 7-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
7-வது கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. வருகிற 14-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும். பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில் 7-வது கட்ட தேர்தல் நடத்தப்பட இருக்கிறது.
வாரணாசி தொகுதியில் கடந்த 2014 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் 2-வது தடவை வெற்றி பெற்றுள்ள பிரதமர் மோடி தற்போது 3-வது முறையாக களம் இறங்கி உள்ளார். முந்தைய தேர்தல்களை விட இந்த தடவை வாரணாசி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
இதற்காக பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் தேர்தல் பணிக்குழுக்களை ஏற்படுத்தி இருக்கிறார். அவர்கள் வீடு வீடாக சென்று பிரதமர் மோடிக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி வருகிற 13, 14-ந்தேதிகளில் வாரணாசியில் தங்கி வேட்புமனு தாக்கல் செய்யவும், பிரசாரம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார்.
பிரதமரின் இந்த 2 நாள் பயணம் தொடர்பாக பா.ஜ.க. தலைவர்கள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள். 13, 14-ந்தேதிகளில் பிரதமர் மோடியை வாரணாசியில் எந்தெந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க செய்வது என்று கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
இன்று பிரதமரின் வாரணாசி பயண திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கப்படுகிறது.
நாளை மறுநாள் (13-ந்தேதி) மதியம் வாரணாசி செல்லும் பிரதமர் மோடி முதலில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மதன்மோகன் மாள்வியா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.
அதன் பிறகு அங்கிருந்து அவர் ரோடு ஷோ நடத்துகிறார். அந்த ரோடு ஷோ வாரணாசியின் முக்கிய சாலைகள் வழியாக நடைபெற உள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் பிரதமர் மோடி ரோடு ஷோ நடத்தி தனக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரியவந்துள்ளது.
அந்த ரோடு ஷோவில் பிரதமருடன் அமித்ஷா, நட்டா, ராஜ்நாத்சிங் உள்பட பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் பங்கேற்க உள்ளனர். ரோடு ஷோவின் போது வழிநெடுக பிரதமர் மோடிக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
6 கிலோ மீட்டர் தூர ரோடு ஷோவில் பிரதமர் மோடி 12-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத்தை நிறுத்தி மக்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொள்வார். அப்போது மக்களுடன் மோடி கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை கருத்தில் கொண்டு மோடியின் வாகன பேரணி நடக்கும் 6 கிலோ மீட்டர் தொலைவிலும் சாலையின் இருபுறமும் லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
இதையொட்டி வாரணாசியில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை உத்தரபிரதேச மாநில அரசு செய்து வருகிறது. மோடியின் ரோடு ஷோ வாரணாசியில் கங்கை கரையில் உள்ள தசப்வம்தே காட் என்ற இடத்தில் நிறைவு பெறுகிறது.
அங்கு கங்கை கரையில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்ய உள்ளார். அவருடன் ஏராளமான பா.ஜ.க. நிர்வாகிகள் ஆரத்தியில் ஈடுபட உள்ளனர்.
அதன் பிறகு அன்று இரவு பிரதமர் மோடி வாரணாசியில் தங்குகிறார். அன்று இரவு வாரணாசி தொகுதி பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகள் பிரதமர் மோடியை சந்தித்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மறுநாள் (14-ந்தேதி) செவ்வாய்க்கிழமை காலை பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்துக்கு செல்கிறார். அங்கு அவர் சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆலய தரிசனம் முடிந்ததும் வாரணாசியில் நடக்கும் பா.ஜ.க. ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார்.
அந்த ஆலோசனை கூட்டத்தில் வாரணாசி தொகுதி பா.ஜ.க. பூத் கமிட்டி உறுப்பினர்கள், நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்கிறார்கள். அவர்கள் மத்தியில் தேர்தல் பணி தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டுவது தொடர்பாக அப்போது பிரதமர் மோடி அறிவுரை வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு பிரதமர் மோடி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய புறப்படுகிறார். மதியம் குறிப்பிட்ட நேரத்தில் அவர் மனுதாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு மீண்டும் வாரணாசியில் ஆதரவு திரட்ட உள்ளார். அன்று டெல்லி திரும்பும் அவர் மீண்டும் வாரணாசி தொகுதிக்கு சென்று பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.
- எதிர்க்கட்சியாக இருப்பதற்குத் தேவையான இடங்களை காங்கிரஸ் பெற மாட்டார்கள் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்பதை காங்கிரசார் எழுதி வைத்து கொள்ளுங்கள்.
- 26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வாஜ்பாய் அரசால் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையானது, உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது.
புவனேஸ்வர்:
பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு தற்போதுவரை மூன்று கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது.
பிரதமர் மோடி, பாரதிய ஜனதா தலைவர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தலில் பா.ஜனதா கூட்டணி 400 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என்று பிரதமர் மோடி தெரிவித்து வருகிறார்.
ஆனால் பா.ஜனதா 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது என்று ராகுல் காந்தி தெரிவித்தார். இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றிப்பெறாது என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
பிரதமர் மோடி இன்று ஒடிசா மாநிலம் கந்தமாலில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
பாராளுமன்றத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை தாண்டும் என்று நாடு முடிவு செய்து விட்டது. எதிர்க்கட்சியாக இருப்பதற்குத் தேவையான இடங்களை காங்கிரஸ் பெற மாட்டார்கள் என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர் என்பதை காங்கிரசார் எழுதி வைத்து கொள்ளுங்கள்.
காங்கிரஸ் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது. தேர்தலுக்குப் பிறகு எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறாது. காங்கிரஸ் மீண்டும் மீண்டும் தனது சொந்த நாட்டை பயமுறுத்த முயற்சிக்கிறது. பாகிஸ்தானிடம் மென்மையாக நடந்து கொள்கிறது. பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது. கவனமாக இருங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறுகிறார்.
அவர்கள் பாகிஸ்தானின் வெடிகுண்டு பற்றி பேசுகிறார்கள். ஆனால் பாகிஸ்தானின் நிலையை பார்த்தால் அதை எப்படி வைத்திருப்பது என்று தெரியாமல், தங்கள் வெடிகுண்டுகளை விற்க ஆட்களை தேடுகிறார்கள்.
ஆனால் தரம் பற்றி மக்களுக்குத் தெரியும் என்பதால் யாரும் அவற்றை வாங்க விரும்பவில்லை. மும்பை தாக்குதலுக்கு காங்கிரஸ் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை.
26 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் வாஜ்பாய் அரசால் நடத்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனையானது, உலகம் முழுவதும் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டியதன் மூலம் மக்களின் 500 ஆண்டுகால காத்திருப்புக்கு பா.ஜனதா முடிவு கட்டியது. ஒடிசாவில் முதன்முறையாக இரட்டை என்ஜின் ஆட்சி அமைக்கப்படும். ஒடியா மொழி, கலாச்சாரம் தெரிந்த மண்ணின் மகனோ அல்லது மகளோ ஒடிசாவில் பா.ஜனதா அரசின் முதல்வராக வருவார்.
ஒடிசா முதல்-மந்திரியாக இருக்கும் நவீன் பட் நாயக்குக்கு சவால் விட விரும்புகிறேன். ஒடிசா மாவட்டங்கள் மற்றும் அந்தந்த தலைநகரங்களை காகிதத்தில் பார்க்காமல் அவரை எழுத சொல்லுங்கள். மாநிலத்தின் மாவட்டங்களின் பெயரை முதல்-மந்திரி சொல்ல முடியாவிட்டால், உங்களது வலி அவருக்கு எப்படி தெரியும்?.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
கூட்ட மேடையில் பத்மஸ்ரீ விருது பெற்ற பூர்ணமாசி ஜானி என்ற மூதாட்டிக்கு சால்வை அணிவித்து கவுரவப்படுத்திய மோடி, அவரது பாதங்களை தொட்டு வணங்கினார்.
#WATCH | While addressing a public meeting in Odisha's Kandhamal, PM Narendra Modi says, "...I want to challenge 'Naveen Babu' as he has been the CM for such long, ask 'Naveen Babu' to name the districts of Odisha and their respective capitals without seeing on a paper. If the CM… pic.twitter.com/om5whU39ho
— ANI (@ANI) May 11, 2024
- மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் போது, உங்கள் உரிமைகளை பறிக்க முடியுமா?
- போலி சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் என்னை உயிருடன் புதைக்கப் பேசுகிறார்கள்.
மும்பை:
பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நந்தூர்பாரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-
என்னைப் பொறுத்தவரை, பழங்குடியினருக்கு சேவை செய்வது எனது குடும்பத்திற்கு சேவை செய்வது போன்றதாகும். ஆதிவாசிகளின் நலன் குறித்து காங்கிரஸ் ஒருபோதும் கவலைப்படவில்லை.
மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு அம்பேத்கரின் கொள்கைக்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கியவர்களின் முதுகில் குத்துவது போன்றதாகும். இது அளவிட முடியாத பாவம். இடஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது காங்கிரஸ் பொய்களைப் பரப்புகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு ஒரே இரவில் அனைத்து முஸ்லிம்களையும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது.
உங்களது ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்குவதே காங்கிரஸின் மறைக்கப்பட்ட செயல்திட்டம். நான் உயிருடன் இருக்கும் வரை தலித்துகள், ஆதிவாசிகள், இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க அனுமதிக்க மாட்டேன்.
மதத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு சலுகைகளை வழங்குவது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதிப்புகள், கொள்கைகளுக்கு எதிரானது. கடந்த 17 நாட்களாக காங்கிரசுக்கு நான் சவால் விடுத்து வருகிறேன். எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி இடஒதுக்கீட்டை துண்டு துண்டாக வெட்டி முஸ்லிம்களுக்கு ஒரு துண்டாக கொடுக்க மாட்டோம் என்று எழுத்துப்பூர்வமாகத் தருமாறு கேட்டுக்கொண்டேன்.
ஆனால் அவர்கள் பதில் சொல்லவில்லை. நான் தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகளுக்கு காவலன். மோடி போன்ற வாட்ச்மேன் இருக்கும் போது, உங்கள் உரிமைகளை பறிக்க முடியுமா?
வளர்ச்சியில் மோடியுடன் போட்டியிட முடியாது என்பது காங்கிரசுக்கு தெரியும். எனவே இந்த தேர்தலில் பொய்களின் தொழிற்சாலையை அவர்கள் திறந்துள்ளனர். இந்து நம்பிக்கையை ஒழிக்க காங்கிரஸ் சதியில் ஈடுபட்டுள்ளது. ராமர் கோவில் கட்டுவது இந்தியாவின் கருத்துக்கு எதிரானது என்று காங்கிரஸ் இளவரசரின் (ராகுல்காந்தி) குரு சாம் பிட்ரோடா அமெரிக்காவிடம் கூறியுள்ளார்.
போலி சிவசேனாவைச் சேர்ந்தவர்கள் என்னை உயிருடன் புதைக்கப் பேசுகிறார்கள். இது காங்கிரசுடன் இணைவதற்கு போலி தேசியவாத காங்கிரசும், சிவசேனாவும் முடிவெடுத்திருப்பதற்கான அறிகுறி ஆகும்.
இவ்வாறு மோடி பேசினார்.
#WATCH | Addressing a public meeting in Maharashtra's Nandurbar, PM Narendra Modi says, "After elections in Baramati, a big leader of Maharashtra has been so worried that he has given a statement and I think he must have consulted with many people before that statement. He is so… pic.twitter.com/4PCsFyHEpH
— ANI (@ANI) May 10, 2024
- தனது மகன் இன்பநிதியுடன் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னை திரும்புவார் என்று தகவல்.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராளுமன்ற தேர்தலின் போது 24 நாட்களாக பிரசாரம் மேற்கொண்டார்.
பின்னர், தேர்தலின் போது தேனாம்பேட்டையில் உள்ள எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் மனைவியுடன் வந்து அவர் வாக்களித்தார்.
தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் முழுமையாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கு கொள்ள முடியாத நிலை உள்ளது.
இதன் காரணமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 10 நாள் பயணமாக லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
சென்னையில் இருந்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காலை 9.50 மணிக்கு விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து லண்டன் சென்றார்.
அப்போது, விமானத்தில் பயணத்தின்போது தனது மகளுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படத்தின் கேப்சனில் ரியல் ரவுடி என்று அவர் பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில், தனது மகன் இன்பநிதியுடன் இருக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். சமீபகாலமாக மலையாள படமான ஆவேஷம் படத்தில் பகத் பாசில் வீடியோ போன்று உதயநிதியுடம், இன்பநிதியும் ரீல்ஸ் செய்தனர்.
இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உதயநிதி ஸ்டாலின் நாளை சென்னை திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
- நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார்.
- அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்.
பிரதமர் மோடி தெலுங்கானா மாநிலம் கரீம்நகரில் பிரசாரம் செய்தார்.
அப்போது பேசிய மோடி, "காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார்.
ஒரே இரவில் அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? இதில் காங்கிரஸ் நாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும்" என்று பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டு தொடர்பாக ரேபரேலியில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி பதிலடி கொடுத்துள்ளார்.
பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், "பெரும் தொழிலதிபர்களுடன் நரேந்திர மோடிக்கு தொடர்பு இருப்பதாக ராகுல் காந்தி தினமும் கூறுகிறார். நரேந்திர மோடி தனது நண்பர்களான கோடீஸ்வரர்களின் ₹16 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்தார், ஆனால் விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை. இதற்கு நரேந்திர மோடி பதிலளிக்க வேண்டும்
அதானி, அம்பானி பற்றி ராகுல் காந்தி தினமும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார். அவர்களின் பெயரை கூட உச்சரிக்காத பிரதமர் மோடி, தேர்தலுக்காக இப்படி பேசுகிறார்" என்று தெரிவித்தார்.
- விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம்
- இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்
மத்தியபிரதேச மாநிலம் தார் பகுதியில் நேற்று பிரதமர் மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "விளையாட்டிலும் சிறுபான்மையினருக்கு முன்னுரிமை அளிப்பதே காங்கிரஸ் கட்சியின் நோக்கம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்திய கிரிக்கெட் அணியில் யார் இருக்க வேண்டும் என்பதை மத அடிப்படையில் முடிவு செய்வார்கள்.
1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த போது காங்கிரஸ் ஏன் அதை 3 துண்டுகளாக பிரித்தார்கள். அவர்கள் அப்போதே முழு நாட்டையும் பாகிஸ்தானாக மாற்றி இந்தியாவின் தடயங்களை அழித்திருக்க வேண்டும்.
மோடி உயிருடன் இருக்கும் வரை போலி மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்தியாவை அழிக்க விட மாட்டேன். ராமர் கோயில் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய காங்கிரஸ் விரும்புகிறது.
பாஜக 400 இடங்களில் வெல்ல வேண்டும். இல்லையென்றால் 'பாபரின் பெயரில்' ராமர் கோவிலுக்கு காங்கிரஸ் பூட்டு போட்டுவிடும் மற்றும் ஜம்மு காஷ்மீரின் 370 சட்டப்பிரிவை காங்கிரஸ் மீண்டும் கொண்டுவரும்" என்று தெரிவித்தார்.
- மக்களின் ஆசியுடன் பா.ஜனதாவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றியை நோக்கி நகர்கின்றன.
- பா.ஜனதா எப்போதும் தேசம்தான் முதல் என்ற கொள்கையில் செயல்படுகிறது.
ஐதராபாத்:
பிரதமர் மோடி இன்று தெலுங்கானா மாநிலத்தில் பிரசாரம் செய்தார். அவர் இன்று காலை கரீம்நகர் மாவட்டம் வெமுலவாடாவில் உள்ள ராஜராஜேஸ்வர சாமி கோவிலில் தரிசனம் செய்தார். அப்போது அவரது நெற்றியில் அர்ச்சகர்கள் திலகமிட்டனர்.
பின்னர் பிரதமர் மோடி, கரீம்நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:-
நேற்று 3-ம் கட்ட தேர்தல் நடந்து முடிந்தது. அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் 3-வது முயற்சியும் முடக்கப்பட்டது. இன்னும் நான்கு கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. மக்களின் ஆசியுடன் பா.ஜனதாவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் வெற்றியை நோக்கி நகர்கின்றன.
பா.ஜனதா எப்போதும் தேசம்தான் முதல் என்ற கொள்கையில் செயல்படுகிறது. ஆனால் காங்கிரசும், பி.ஆர்.எஸ். கட்சியும் குடும்பமே முதலில் என்ற கொள்கையில் செயல்படுகின்றன. அவர்களின் அரசியல் கட்சிகள் 'குடும்பத்தால், குடும்பத்திற்காக, குடும்பத்திற்கானது என்பது போன்று செயல்படுகின்றன. குடும்பமே முதலில் என்ற கொள்கையால் பி.வி.நரசிம்மராவை காங்கிரஸ் அவமரியாதை செய்தது.
அவர் இறந்த பிறகும் அவரது உடலை காங்கிரஸ் அலுவலகத்தில் நுழைய மறுத்துவிட்டது. பி.வி. நரசிம்மராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதன் மூலம் பா.ஜனதா-தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மரியாதை செலுத்தியது.
காங்கிரசும், பி.ஆர்.எஸ். கட்சியும் வேறுபட்டவை அல்ல. ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் பூஜ்ஜிய ஆட்சி ஆகியவை இந்த இரு கட்சிகளையும் இணைக்கிறது. இரு கட்சிகள் இடையே ஊழல் பொதுவான காரணியாக உள்ளது.
காங்கிரசின் இளவரசர் (ராகுல்காந்தி) ரபேல் விவகாரத்தில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக 5 தொழிலதிபர்கள் பற்றியே பேச ஆரம்பித்தார்.
பின்னர் அவர் அம்பானி, அதானி பற்றி பேசினார். ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திவிட்டார். ஒரே இரவில் அம்பானி-அதானியை வசைபாடுவதை நிறுத்திய நீங்கள் என்ன ஒப்பந்தம் செய்தீர்கள்? இதில் காங்கிரஸ் நாட்டுக்கு பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
#WATCH | In his address to a public meeting in Telangana's Karimnagar, PM Narendra Modi says, "'Shehzada' of Congress, since his issue of Rafale grounded, he started talking about '5 industrialists' all the time in the last five years...later he started saying 'Ambani-Adani', but… pic.twitter.com/lIbSURkY1C
— ANI (@ANI) May 8, 2024
- பிரதமர் மோடி 14-ந்தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.
- தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்றத்துக்கு ஏப்ரல் 19, 26, மே 7, 12, 20 25, மற்றும் ஜூன் 1-ந்தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணை யம் அறிவித்தது.
அதன்படி கடந்த மாதம் 19 மற்றும் 26-ந்தேதிகளில் முதல் 2 கட்ட தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. இன்று (மே 7-ந்தேதி) 3-வது கட்ட தேர்தல் 93 தொகுதிகளில் நடந்து வருகிறது.
அடுத்து 4-வது கட்ட தேர்தல் வருகிற 13-ந்தேதி நடைபெற உள்ளது. 96 தொகுதிகளில் 4-வது கட்ட தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
வருகிற சனிக்கிழமை 96 தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் ஓய உள்ளது. இந்த நிலையில் 5-வது, 6-வது கட்டங்களுக்கான தொகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த நிலையில் இறுதி 7-வது கட்ட தேர்தலுக்கான அறிவிக்கையை இன்று (செவ்வாய்க்கிழமை) தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதன் காரணமாக 57 தொகுதிகளில் 7-வது கட்ட தேர்தல் ஜூன் 1-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
7-வது கட்ட தேர்தல் நடக்கும் 57 தொகுதிகளில் பீகாரில் 8 தொகுதிகள், இமாச்சல பிரதேசத்தில் 4 தொகுதிகள், ஜார்க்கண்ட் டில் 3 தொகுதிகள், ஒடிசா வில் 6 தொகுதிகள், பஞ்சாப் பில் 13 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 13 தொகுதிகள், மேற்கு வங்காளத்தில் 9 தொகுதிகள், சண்டிகரில் ஒரு தொகுதி இடம் பெற்று உள்ளன.
இந்த 8 மாநிலங்களில் பஞ்சாப்பில் 13 தொகுதி களுக்கும், இமாச்சல பிரதே சத்தில் 4 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 8 மாநிலங்களிலும் ஓட்டுப்பதிவுக்கு இப்போதே பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 7-வது கட்ட தேர்தலுக்கான 57 தொகுதிகளிலும் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மனுதாக்கல் செய்ய 14-ந்தேதி கடைசி நாளாகும். 15-ந்தேதி மனுக்கள் மீதான பரிசீலனையும், 17-ந்தேதி இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும்.
பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி 7-வது கட்ட ஓட்டுப்பதிவில் இடம் பெற்றுள்ளது. அங்கு இன்று சில சுயேட்சைகள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பிரதமர் மோடி மனுதாக்கலுக்கு கடைசி நாளான 14-ந்தேதி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார். அதன் பிறகு 18 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெறும்.
- தேர்தல் முடிந்து களநிலவரம் பா.ஜ.க.வுக்கு பாதகமாக இருக்கிறது.
- விரக்தியில் வாய்க்கு வந்த அவதூறுகளை மோடி அள்ளி வீசி வருகிறார்.
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாததை இட்டுக்கட்டி பட்டியலின, பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படுகிற இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் கட்சி முயற்சி செய்கிறது என்ற கோயபல்ஸ் பிரச்சாரத்தை பிரதமர் மோடி தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்த பிரசாரத்தை செய்வதற்கு காரணம் உளவுத்துறை மூலம் கிடைத்த தகவலின்படி பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்ற ரகசிய அறிக்கை தான். அதன் காரணமாகவே மத நல்லிணக்கத்தை சீர்குலைத்து சிறுபான்மையினருக்கு எதிராக துவேஷ பிரசாரத்தை மிக மிக கீழ்த்தரமாக இழிவான முறையில் பிரதமர் மோடி செய்து வருகிறார்.
காங்கிரசின் 60 ஆண்டு கால ஆட்சி வெறும் ஆட்சியே. ஆனால், தமது 10 ஆண்டுகால ஆட்சி தேசத்திற்கான சேவை என்கிறார். கடந்த 2019 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவை 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு உயர்த்தி உலக அரங்கில் ஏழாவது நாடாக கொண்டு வருவேன் என்று பிரதமர் மோடி பேசினார்.
ஆனால், கடந்த 2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி அமைந்த போது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 50 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. 2014-ல் 100 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதன்மூலம் டாக்டர் மன்மோ கன்சிங் ஆட்சியில் இருமடங்கு வளர்ச்சி எட்டப்பட்டது.
ஆனால், 2014 முதல் 2024 வரை 10 ஆண்டுகளில் ரூபாய் 200 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை அடைந்திருக்க வேண்டும்.
ஆனால், 2024-ல் அடைந்ததோ ரூபாய் 173 லட்சம் கோடி தான். மோடி கொடுத்த அறிவிப்பின்படி இருமடங்கு வளர்ச்சி எட்டப்படவில்லை.
5 லட்சம் டிரில்லியன் டாலர் என்று சொன்னால் ரூபாய் 390 லட்சம் கோடி மொத்த உள்நாட்டு உற்பத்தியை 2024 இல் பெற்றிருக்க வேண்டும். ஆனால், மோடி ஆட்சி பெற்றதோ ரூபாய் 173 லட்சம் கோடி தான்.
இதன்மூலம் கொடுத்த வாக்குறுதியின்படி மொத்த உள்நாட்டு உற்பத்தியின் மூலம் வளர்ச்சியை காட்டி, மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த முடியாத பிரதமர் மோடியின் பொருளாதார தோல்வி இன்றைக்கு அம்பலமாகியிருக்கிறது.
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்று பேசிய பிரதமர் மோடி, நாள்தோறும் காங்கிரஸ் கட்சியை பற்றி பேச வேண்டிய நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகியிருக்கிறார். பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையில் பேசுவதற்கு எதுவும் இல்லாத நிலையில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பேசி, பேசி நாட்டு மக்களிடையே பேசு பொருளாக மாற்றி விட்டார்.
கடந்த காலத்தில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்ற பேச்சு சமீப காலமாக பேசப்படுவதில்லை. ஏனெனில் இரண்டு கட்ட தேர்தல் முடிந்து களநிலவரம் பா.ஜ.க.வுக்கு பாதகமாக இருக்கிறது.
இதையெல்லாம் அறிந்த பிரதமர் மோடி, அச்சம், பீதியினால் மிகுந்த பதற்றத்துடன் எதை பேசுகிறோம் என்ற சிந்தனை இல்லாமல் நினைவிழந்து விரக்தியில் வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசி வருகிறார்.
இத்தகைய பேச்சுகள் பா.ஜ.க.வின் தோல்வியை நாளுக்கு நாள் உறுதிபடுத்தி வருகிறது. இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையப்போவது காலத்தின் கட்டாயமாகும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரி மனு.
- டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது.
மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது சமூக வலைதளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை தடுப்பது தொடர்பாக, தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்திடம் இதுதொடர்பாக அளிக்கப்பட்ட கோரிக்கை மனு மீது உரிய நேரத்தில் தீர்வு காணப்பட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டீப் பேஃக் வீடியோக்களை யார் வேண்டுமானாலும் உருவாக்க முடியும். சமூக வலைதளங்களில் டீப் ஃபேக் வீடியோக்கள் பரவுவதை எந்தவொரு தொழில்நுட்பத்தாலும் தடுக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
- விசாரணையில் இருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிப்பது என்பது சட்டத்துக்கு முரணானது.
- கோர்ட்டு சட்ட முறைப்படியே செயல்படும்.
புதுடெல்லி:
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிற நிலையில், சிறையில் இருக்கும் அரசியல் தலைவர்கள் காணொலி வாயிலாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட வழிவகை செய்ய வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டில் சில தினங்களுக்கு முன்பு வழக்கறிஞர் மாணவர் அமர்ஜித் குப்தா மனு தாக்கல் செய்தார்.
கைது செய்யப்பட்டிருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிப்பது என்பது சட்டத்துக்கு முரணானது என்று கூறி இம்மனுவை நேற்று டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இது குறித்து நீதிபதிகள் மேலும் கூறுகையில், "தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு அரசியல் தலைவர்களை கைது செய்யக்கூடாது என்று கூறினால் வன்புணர்வு, கொலை உள்ளிட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், அரசியல் கட்சித் தொடங்க ஆரம்பித்து விடுவார்கள். இது கேலிக்கூத்தாகிவிடும்.
விசாரணையில் இருக்கும் அரசியல் தலைவர்களை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட அனுமதிப்பது என்பது சட்டத்துக்கு முரணானது. தவிர, இது கொள்கை முடிவு சார்ந்த விவகாரம். இதில் ஐகோர்ட் தலையிட முடியாது. ஏன் கோர்ட்டை அரசியலுக்குள் இழுக்கிறீர்கள்? ஒருவர் அவரை (அரவிந்த் கெஜ்ரிவாலை? விடுவிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்கிறார். இன்னொருவர், அவரை விடுவிக்கக் கூடாது என்று மனுதாக்கல் செய்கிறார். கோர்ட்டு சட்ட முறைப்படியே செயல்படும். நாங்கள் அரசியலில் இருந்து விலகி இருக்க விரும்புகிறோம்" என்று தெரிவித்தனர்.
- ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சி.எம்.ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
- ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
திருப்பதி:
பா.ஜ.க தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு தமிழக பாராளுமன்ற தேர்தலில் வேலூரில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பிரசாரம் செய்ய மறுத்தார்.
தற்போது தெலுங்கானா, ஆந்திர மாநிலத்தில் தீவிர பிரசாத்தில் ஈடுபட்டு வருகிறாார்.
ஆந்திர மாநிலம் அனக்காபள்ளி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சி.எம்.ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
குஷ்புவின் தேர்தல் பிரசாரத்தின் போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட 50 பேர் கூட இல்லை. இதனால் குஷ்பு எதுவும் பேசாமல் கைகூப்பிய படி வாகனத்தில் சென்றார். ஆந்திராவில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பா.ஜ.க. மெகா கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன.
3 கட்சிகள் கூட்டணி அமைத்துள்ள போதிலும் 50 பேர் கூட இல்லாததால் இதனை வீடியோ எடுத்து சிலர் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர்.
வீடியோவை பார்த்தவர்கள் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்புவின் பிரசாரத்திற்கு 50 பேர் கூட இல்லை என கேலி, கிண்டல் செய்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்