என் மலர்
செய்திகள்
- தனது வாகனத்தின் பேட்டரி மைலேஜ் தராதது குறித்து பலமுறை ஷோரூமில் புகார் அளித்துள்ளார்.
- அவர் ஆத்திரத்துடன் கத்துவதும், தீயை அணைக்க முயன்றவர்களிடம் வாக்குவாதம் செய்வதும் பதிவாகியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில், தனது மின்சார ஆட்டோவின் மைலேஜ் மற்றும் பேட்டரி பிரச்சினையால் ஆத்திரமடைந்த ஓட்டுநர் ஒருவர் ஷோரூம் வாசலிலேயே அதற்கு தீ வைத்த வீடியோ வைரலாகி வருகிறது.
மோகன் என்ற அந்த முன்சார ஆட்டோ ஓட்டுநர், தனது வாகனத்தின் பேட்டரி, மைலேஜ் தராதது குறித்து பலமுறை ஷோரூமில் புகார் அளித்துள்ளார்.
ஆனால், பலமுறை அலைந்தும் தீர்வு கிடைக்காததால் விரக்தியடைந்த அவர் கடந்த திங்கள்கிழமை, ஜோத்ப்பூரில் உள்ள ஷோரூம் முன் தனது வாகனத்தின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார்.
அங்கிருந்தவர்கள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
- ஈரானின் முன்னாள் நிதியமைச்சர் அப்துல்நாசர் ஹெம்மாட்டி புதிய மத்திய வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஈரானின் நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மத்திய வங்கி கவர்னர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஈரானிய நாணயமான 'ரியால்', அமெரிக்க டாலருக்கு எதிராக மிக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்தது. டிசம்பர் 28 அன்று, ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ரியால் மதிப்பு 1.42 மில்லியனாக வீழ்ந்தது.
பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வால் ஆத்திரமடைந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் இறங்கிப் போராடினர்.
போராட்டக்காரர்களைக் கலைக்கப் போலீஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
நிலைமை மோசமடைந்ததையடுத்து, மத்திய வங்கி ஆளுநராக இருந்த முகமது ரெசா ஃபர்சின் ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன் ஏற்றுக்கொண்டார்.
அவருக்குப் பதிலாக, ஈரானின் முன்னாள் நிதியமைச்சர் அப்துல்நாசர் ஹெம்மாட்டி புதிய மத்திய வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள், பணவீக்கம் மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பெட்ரோல் விலை மாற்றம் போன்றவை இந்த நெருக்கடிக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
- ஏற்கனவே ஜனநாயகன் உடன் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி படம் மோதுகிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9-ந்தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது. விஜய் நடிப்பில் வெளியாக உள்ள 'ஜன நாயகன்' தான் விஜயின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடந்து முடிந்தது. ஏற்கனவே ஜனநாயகன் உடன் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்த பராசக்தி படம் மோதுகிறது.
இந்த சூழலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் மங்காத்தா படத்தை ஜனநாயகனுக்கு போட்டியாக ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித்தின் 50வது படமான மங்காத்தா 2011 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தின் வீடியோவை வெளியிட்டுள்ள சன் பிக்சர்ஸ் stay tuned என தெரிவித்துள்ளது. இதனால் மங்காத்தா ஜனநாயகனுக்கு போட்டியாக ரீரிலீஸ் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம். எனவே குட் பேட் அக்லிக்கு பின் வறட்சியில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே அஜித்தின் அட்டகாசம் படம் அண்மையில் ரீ ரிலீஸ் ஆனது. அதேபோல அமர்க்களம் படமும் பிப்ரவரியில் ரீ ரிலீஸ் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
- அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார்.
மாஸ்கோ அருகே உள்ள அதிபர் புதினின் அரசு இல்லத்தை குறிவைத்து 91 டிரோன்களை ஏவி உக்ரைன் தாக்குதல் நடத்தியதாகவும், அதை தங்கள் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாகவும் ரஷியா நேற்று தெரிவித்தது.
ஆனால் அமைதி பேச்சுவார்த்தையை குலைக்க ரஷியாவால் புனையப்பட்ட பொய் இதுவென உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதவிட்ட பிரதமர் மோடி, "ரஷிய அதிபரின் இல்லத்தைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த செய்திகள் மிகுந்த கவலையளிக்கின்றன.
போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட தூதரக ரீதியிலான முயற்சிகளே சரியான வழி" என்று தெரிவித்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் பாதிக்கும் வகையிலான இத்தகைய செயல்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அனைத்துத் தரப்பினரையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப், புதின் தன்னுடன் தொலைபேசியில் பேசியபோது இந்தத் தாக்குதல் குறித்துக் கூறி கோபப்பட்டதாகத் தெரிவித்தார். அதே சமயம் விரைவில் அமைதி உடன்படிக்கை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- குடும்ப வறுமைக்காகப் பிழைப்பு தேடி வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குள் தாக்கப்படுவதுஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கொடுமை.
- கஞ்சா விற்பனையின் தலைநகராக தமிழ்நாடு மாறியுள்ளது.
திருத்தணி ரெயில் நிலையம் அருகே இளைஞர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கையில்,
"திருத்தணியில் புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான போதை சிறார்களின் கொலைவெறித் தாக்குதல் ஒட்டுமொத்த தமிழினத்திற்கான தலைகுனிவு.
திருத்தணி சென்ற சென்னை புறநகர் ரயிலில் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி தம்பி சிராஜ் மீது, போதைப் பழக்கத்திற்கு அடிமையான நான்கு இளம் சிறார்கள் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ள கொடூர காட்சிகள் நெஞ்சை உலுக்குகிறது.
திராவிட மாடல் ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கம், தமிழிளம் தலைமுறையை எந்த அளவிற்கு மிக மோசமாகச் சீரழித்துள்ளது என்பதையே புலம்பெயர் தொழிலாளி சிராஜ் மீதான கொடுந்தாக்குதல் காட்டுகிறது.
அத்தனை சமூக அவலங்களுக்கும் அடிப்படையாக இருக்கும் போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுத்து நிறுத்தாது வேடிக்கை பார்க்கும் திமுக அரசின் கையாலாகாத்தனம் வன்மையான கண்டனத்துக்குரியது.
வட மாநிலத் தொழிலாளர்களால் தமிழ் மக்கள் கொடூரமாகத் தாக்கப்படுவது, கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுவது எந்த அளவிற்கு ஏற்றுக்கொள்ள முடியாத கொடுங்குற்றமோ அதே அளவிற்கு, குடும்ப வறுமைக்காகப் பிழைப்பு தேடி வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குள் தாக்கப்படுவதும் ஏற்றுக்கொள்ள முடியாத பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாட்டில் அரசே நடத்தும் மலிவுவிலை மதுக்கடைகளால் சட்டம்-ஒழுங்கு முற்றாகச் சீரழிந்து கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் வேகமாகப் பெருகிவருகின்றன.
சொந்த இரத்த உறவுகள் கூடச் சிறு சிறு முன்பகைக்காக தங்களுக்குள் ஒருவருக்கொருவர் வெட்டிக்கொண்டு சாகும் சமூகப்பேரவலம் நிகழ்வதற்கு அரசு விற்கும் மதுதான் அடிப்படை காரணமாகிறது.
அதுமட்டுமின்றி திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கஞ்சா விற்பனை கட்டுக்கடங்காத அளவிற்கு வளர்ந்து கஞ்சா விற்பனையின் தலைநகராக தமிழ்நாடு மாறியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் படுகொலைகள், பாலியல் வன்கொடுமைகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் மது மற்றும் கஞ்சா போதையில்தான் நடைபெறுகிறது.
எனவே அரசு மது விற்பனையைத் தடைசெய்தாலே தமிழ்நாட்டில் நடைபெறும் 95% கொடுங்குற்றங்கள் நடைபெறாமலேயே தடுத்து நிறுத்த முடியும். அனைத்து சமூகக் குற்றங்களுக்கும் காரணமாகத் திகழும் மது விற்பனையைத் தடை செய்வதில் திமுக அரசிற்கு என்ன தயக்கம்?
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கினை நடைமுறைப்படுத்த போராடிய திமுக, தமது ஆட்சிக்காலத்தில் அதனை நடைமுறைப்படுத்த மறுப்பது ஏன்?
அதிமுக ஆட்சியில் குட்காவுக்கு எதிராக சட்டமன்றம் வரை பேசிய திமுக, தன்னுடைய ஆட்சியில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கஞ்சா விற்பனை குறித்து வாய் திறவாதது ஏன்?
'போதையின் பாதையில் இளைஞர்கள் செல்ல வேண்டாம்' என்று காணொளி பேசினால் மட்டும் போதைப்பொருட்கள் புழக்கம் ஒழிந்துவிடுமா? அல்லது தமிழ்நாட்டு இளைஞர்கள் அதைப் பயன்படுத்தாமல் தடுத்திடத்தான் முடியுமா?
இளம் சிறார்கள் போதையில் கொடூர ஆயுதங்களுடன் தாக்கிய காணொளிக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது? மது, கஞ்சா போதையைக் கட்டுப்படுத்தாது இன்னும் எத்தனை உயிர்களை திமுக அரசு பலி கொடுக்கப்போகிறது?
பட்டப்பகலில் படுகொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நடைபெறாத நாட்களே இல்லை என்னும் அளவுக்கு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு போதைப்பொருட்கள் புழக்கத்தால் முற்று முழுதாகச் சீரழிந்துள்ள நிலையில், திமுக அரசு கஞ்சா விற்பனையைத் தடுக்காததும், மது விலக்கை நடைமுறைப்படுத்த மறுப்பதும் ஏன்?
மக்களின் நலனைவிட மதுவினால் வரும் வருமானம்தான் திமுக அரசிற்கு முதன்மையானதா? இதற்குப் பெயர்தான் திராவிட மடலா? வெட்கக்கேடு?
ஆகவே, வடமாநில தொழிலாளி தம்பி சிராஜ் மீதான கொலைவெறித் தாக்குதல்போல இனி ஒரு கொடூர நிகழ்வு நடந்திடாமல் தடுத்திடவும், சீரழியும் தமிழிளம் தலைமுறையைக் காத்திடவும், மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்தி டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுவதோடு, கஞ்சா விற்பனையை முற்று முழுதாக தடுக்க போர்க்கால அடிப்படையில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
- 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
- கேப்டன் சமாரி அட்டப்பட்டு (2), நிலக்ஷிகா சில்வா (3), கவிஷா தில்ஹாரி (3) என முக்கிய வீராங்கனைகள் சொதப்பினர்.
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 4-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 77 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தத்தளித்தது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 68 ரன்கள் குவித்தார். அமன்ஜோத் கவுர் 21 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் அருந்ததி ரெட்டி அதிரடியில் மிரட்டி 11 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் சமாரி கவிஷா திஹாரி, ராஷ்மிகா, சமாரி அட்டபட்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
இலங்கை வீராங்கனை ஹசினி பெரேரா அதிகபட்சமாக 42 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். இமேஷா துலானி 39 பந்தில் அரை சதம் அடித்து அவுட் ஆனார்.
ஹாசினி பெரேரா 42 பந்தில் 8 பவுண்டரி, 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்தனர்.
கேப்டன் சமாரி அட்டப்பட்டு (2), நிலக்ஷிகா சில்வா (3), கவிஷா தில்ஹாரி (3) என முக்கிய வீராங்கனைகள் சொதப்பினர்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இலங்கை அணி 7 விக்கெட் இழந்து 160 ரன்கள் மட்டுமே எடுத்து 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இதன் மூலம் 5 டி20 போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்துள்ளது.
- அவரின் அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் மயங்கி விழுந்தார்.
- சிறுணியம் மயங்கி விழுந்ததை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை தொடர்ந்தார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கவரைப்பேட்டையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தனது பரப்புரை வாகனத்தில் நின்று எடப்பாடி பழனிசாமி பேசிக் கொண்டிருந்தபோது வாகனத்தில் அவரின் அருகில் நின்றிருந்த திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் உடல்நலக்குறைவு காரணமாக திடீரென மயங்கி விழுந்தார்.
மயங்கிய மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமனை அருகில் நின்றிருந்த முன்னாள் அமைச்சர் ரமணா கைத்தாங்கலாக எழுப்பி பேருந்திற்குள் அனுப்பி வைத்தார். சிறுணியம் மயங்கி விழுந்ததை பொருட்படுத்தாமல் எடப்பாடி பழனிச்சாமி தனது பேச்சை தொடர்ந்தார்.
சிறிது நேரம் பேருந்தில் ஓய்வெடுத்த சிறுணியம், உரையை முடித்து புறப்படும் போது எடப்பாடி பழனிசாமிக்கு சால்வை அணிவித்து வீர வாள் பரிசளித்தார். மணியம் மயங்கி விழுந்ததும், பழனிச்சாமி பொருட்படுத்தாமல் பேச்சை தொடர்ந்ததும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
- இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் கொல்கத்தாவில் நடந்தது.
- இந்த டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்தியாவை 30 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது.
துபாய்:
தென்னாப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளுக்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.
கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டின் மூன்றாவது நாளில் இந்திய அணியை 30 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்தது.
இந்தப் போட்டி மூன்று நாளில் முடிவுக்கு வந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்தப் போட்டியில் மொத்தம் 8 விக்கெட் வீழ்த்திய தென் ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் ஹார்மர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் பலரின் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில், ஈடன் கார்டன் மைதானம் 'திருப்திகரமானது' (Satisfactory) என ஐசிசி மதிப்பிட்டுள்ளது. இதனால் இந்த மைதானத்திற்கு அபராதம் விதிக்கப்படவில்லை.
- பிரிவினைவாதிகளுக்கு கப்பலில் ஆயுதங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
- துறைமுகம் மீது சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தின.
ஏமனில் பல ஆண்டுகளாக உள்நாட்டு சண்டை நடைபெற்று வருகிறது. வடக்குப் பகுதிகளை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். தெற்குப் பகுதியை பெரும்பாலான உலக நாடுகள் அங்கீகரித்த அரசால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. தெற்குப் பகுதியில் பிரிவினைவாதிகள் அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன. இந்த படைகளுக்கு ஐக்கிய அரபு அமீரகம் உதவி செய்து வருகிறது. அதேவேளையில் அரசுக்கு ஆதரவாக சவுதி கூட்டுப்படகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்தான் ஐக்கிய அரபு அமீரகம் ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற கப்பல் ஏமனில் உள்ள துறைமுகத்தில் காணப்பட்டதாக கூறி, சவுதி கூட்டுப்படைகள் கப்பல் மீது வான் தாக்குதல் நடத்தியது. இன்று காலை நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்து இரு தரப்பிலும் முழுமையான விவரங்களை குறிப்பிடவில்லை.
இந்த நிலையில், ஏமனில் உள்ள மீதமுள்ள படைகளை திரும்பப் பெறுவதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. ஆனால் எப்போது திரும்ப பெறப்படும் என தெரிவிக்கப்படவில்லை.
- வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா இன்று காலமானார்.
- அவரது மறைவுக்கு அவாமி லீக் கட்சி தலைவரான ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்தார்.
புதுடெல்லி:
வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா (80), இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக டாக்காவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த மாதம் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இதற்கிடையே, கலிதா ஜியா சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். கலிதா ஜியா கடந்த 1991-96 மற்றும் 2001-06 என இரு முறை வங்கதேச பிரதமராக இருந்தவர். கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கு டாக்காவில் நாளை நடைபெற உள்ளது.
இந்நிலையில், கலிதா ஜியாவின் இறுதிச்சடங்கில் இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்கிறார். இதற்காக ஜெய்சங்கர் நாளை வங்கதேச தலைநகர் டாக்கா செல்கிறார்.
வங்கதேசம் உடனான உறவில் விரிசல் நிலவி வரும் சூழ்நிலையில், வெளியுறவுத்துறை மந்திரியின் இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
- டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 175 ரன்கள் எடுத்தது.
திருவனந்தபுரம்:
இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. நான்கு போட்டிகள் முடிவில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 தொடரில் 4-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகள் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. முன்னணி வீராங்கனைகள் விரைவில் அவுட்டாகினர். 77 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து இந்திய அணி தத்தளித்தது.
கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 43 பந்தில் 68 ரன்கள் குவித்தார். அமன்ஜோத் கவுர் 21 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் அருந்ததி ரெட்டி அதிரடியில் மிரட்டி 11 பந்தில் 27 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் சமாரி கவிஷா திஹாரி, ராஷ்மிகா, சமாரி அட்டபட்டு ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.
- தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து அங்கு வன்முறை தீவிரமடைந்தது.
- வங்கதேசத்தில் ஒரே மாதத்தில் 3 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
டாக்கா:
வங்கதேசத்தில் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து வன்முறைகள் தீவிரமடைந்துள்ளன. மாணவர் போராட்டத்தை நடத்திய இந்திய எதிர்ப்பாளர் ஓஸ்மான் ஹாதி, இந்து இளைஞர் தீபு சந்திர தாஸ் ஆகியோர் கொல்லப்பட்டனர். ராஜ்பாரி மாவட்டத்தைச் சேர்ந்த அம்ரித் மண்டல் என்ற இந்து இளைஞரை அப்பகுதியைச் சேர்ந்த கும்பல் கடுமையாக தாக்கிக் கொன்றனர்.
இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார்.
விசாரணையில், கொல்லப்பட்டவர் ஆடை தொழிற்சாலை காவலாளியான பிஜேந்திர பிஸ்வாஸ் என்பதும், இச்சம்பவம் மைமன்சிங்கில் உள்ள பாலுகா உபாசிலா என்ற இடத்தில் நடந்ததும் உறுதிசெய்யப்பட்டது. அவரை சுட்டுக் கொன்றவர் சக ஊழியர் நோமன் மியா என அடையாளம் காணப்பட்டதுடன், அவரிடம் இருந்து சிறிய ரக துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
வங்கதேசத்தில் ஒரே மாதத்தில் 3 இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






