என் மலர்tooltip icon

    தொழில்நுட்பச் செய்திகள்

    தமிழ் நாட்டை சேர்ந்த 49,19,668 பேரின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    தமிழ் நாட்டின் பொது வினியோக திட்ட விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன. இந்த தகவல்களை பெங்களூரை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டெக்னிசன்ட் தெரிவித்துள்ளது. 

     கோப்புப்படம்

    இணையத்தில் லீக் ஆன விவரங்களில் ஆதார் நம்பர், குடும்ப விவரங்கள், மொபைல் நம்பர் என பொது மக்களின் மிகமுக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பயனர் விவரங்கள் லீக் ஆன விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. 

    தமிழகத்தை சேர்ந்த 49,19,668 பேரின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் 3,59,485 பேரின் மொபைல் எண்கள், மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் நம்பர்கள் வெளியாகி இருக்கின்றன. இத்துடன் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், உறவு முறை போன்ற தகவல்களும் இடம்பெற்றுள்ளன. 
    நத்திங் நிறுவனத்தின் புதிய இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூலை மாத இறுதியில் அறிமுகமாகிறது.


    லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூலை 27 ஆம் தேதி அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. நத்திங் நிறுவனத்தின் முதல் இயர்பட்ஸ் சர்வதேச சந்தையில் அறிமுகமாகும் போதே இந்தியாவிலும் அறிமுகமாகிறது. 

    இந்தியாவில் நத்திங் இயர் 1 ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் வட்டியில்லா மாத தவணை முறை வசதியுடன் விற்பனை செய்யப்படும் என ப்ளிப்கார்ட் தெரிவித்துள்ளது. முன்னதாக இந்த இயர்பட்ஸ் ஜூன் மாதத்திலேயே அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், இதன் வெளியீடு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

     நத்திங் இயர் 1

    சுவாரஸ்யமான நீண்ட பயணத்தின் சிறுதுவக்கம் தான் இயர் 1 என நத்திங் நிறுவனர் கால் பெய் தெரிவித்து இருக்கிறார். புது இயர்போன் டிசைன் எப்படி இருக்கும் என்ற விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், இது தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என நத்திங் தெரிவித்துள்ளது.

    நத்திங் இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஜூலை 27 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புது இயர்பட்ஸ் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.  
    ஆப்பிள் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு புது பேண்ட் மற்றும் வாட்ச் பேஸ்களை அறிமுகம் செய்துள்ளது.


    ஆப்பிள் நிறுவனம் புது வாட்ச் பேண்ட்கள் மற்றும் வாட்ச் பேஸ்களை அவ்வப்போது அறிமுகம் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளது. சமீபத்தில் பிரைட் பேண்ட் மற்றும் பிரைட் வாட்ச் பேஸ்களை ஆப்பிள் அறிமுகம் செய்தது. அந்த வரிசையில் தற்போது 22 புதிய பேண்ட்கள் அடங்கிய தொகுப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நாட்டின் கொடியை சார்ந்து உருவாகி இருக்கின்றன.

     ஆப்பிள் வாட்ச்

    ஒவ்வொரு பேண்ட்களும் அந்தந்த நாட்டு விளையாட்டு வீவர்களின் போட்டி மனப்பாண்மையை போற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. புது பேண்ட்களுடன் ஸ்டிரைப்கள் அடங்கிய ஆப்பிள் வாட்ச் பேஸ்களும் வழங்கப்படுகின்றன. வாட்ச் பேஸ்களை பயனர்கள் ஆப்பிள் க்ளிப் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

    புதிய பேண்ட்கள் International Collection Solo Loop என அழைக்கப்படுகின்றன. இவை 40mm மற்றும் 44mm அளவுகளில் கிடைக்கின்றன. ஆப்பிள் ஸ்டோரில் புது பேண்ட்களின் விலை ரூ. 3900 ஆகும். இவை ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4, ஆப்பிள் வாட்ச் SE மற்றும் அதன்பின் வெளியான மாடல்களுக்கு கிடைக்கின்றன.
    சாம்சங் நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 778 5ஜி பிராசஸருடன் உருவாகி வருகிறது.


    சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்51 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்போது கேலக்ஸி எம்52 ஸ்மார்ட்போனினை உருவாக்கும் பணிகளில் சாம்சங் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

    புதிய சாம்சங் எம் சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 778 5ஜி பிராசஸர் வழங்கப்படுகிறது. சாம்சங் நிறுவனத்தின் எந்த ஸ்மார்ட்போனிலும் இதுவரை இந்த பிராசஸர் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஹானர் 50 சீரிஸ் மாடல்களில் இந்த பிராசஸர் முதல்முறையாக வழங்கப்பட்டது.

     சாம்சங் கேலக்ஸி எம்51

    பின் ரியல்மி, ஐகூ, மோட்டோரோலா, ஒப்போ மற்றும் சியோமி என பல்வேறு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன் மாடல்களிலும் ஸ்னாப்டிராகன் 778 5ஜி பிராசஸர் வழங்கப்பட இருப்பதாக அந்தந்த நிறுவனங்கள் அறிவித்து இருக்கின்றன. 

    முந்தைய தகவல்களின்படி புது சாம்சங் ஸ்மார்ட்போன் 64 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என கூறப்பட்டது. இத்துடன் 12 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 5 எம்பி மேக்ரோ கேமரா வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கேலக்ஸி எம்51 மாடலை போன்றே புதிய எம்52 5ஜி மாடலிலும் 32 எம்பி செல்பி கேமரா வழங்கப்படலாம். 
    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புது சலுகையை அறிவித்து இருக்கிறது.


    ரிலையன்ஸ் ஜியோ ரூ. 3499 பிரீபெயிட் சலுகை அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை ஒரு வருடத்திற்கான வேலிடிட்டி வழங்குகிறது. இது ரிலையன்ஸ் ஜியோவின் விலை உயர்ந்த பிரீபெயிட் சலுகை ஆகும். 

    ஜியோ ரூ. 3499 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. புதிய பிரீபெயிட் சலுகை அந்நிறுவன வலைதளம் மற்றும் மைஜியோ செயலியில் அப்டேட் செய்யப்பட்டுவிட்டது. 

     கோப்புப்படம்

    இதில் பயனர்களுக்கு 365 நாட்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகையில் மொத்தம் 1095 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 

    இத்துடன் ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோநியூஸ், ஜியோசெக்யூரிட்டி மற்றும் ஜியோகிளவுட் போன்ற செயலிகளுக்கான சந்தா வழங்கப்படுகிறது. எனினும், நெட்ப்ளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ5 போன்ற ஒடிடி தளங்களுக்கான சந்தா எதுவும் இந்த சலுகையில் வழங்கப்படவில்லை. 
    விவோ நிறுவனம் Y51A ஸ்மார்ட்போனின் புது வேரியண்டை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் Y51A ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. விவோ Y51A மாடலில் ஹாலோ புல்வியூ டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இது 8 ஜிபி + 128 ஜிபி என ஒற்றை வேரியண்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை ரூ. 17,990 ஆகும். 

    தற்போது விவோ Y51A 6 ஜிபி + 128 ஜிபி மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. இதன் விலை ரூ. 16,990 ஆகும். புது மெமரி ஆப்ஷன் தவிர மற்ற அம்சங்களில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

     விவோ Y51A

    விவோ Y51A அம்சங்கள் 

    - 6.58 இன்ச் 2408×1080 பிக்சல் FHD+ LCD 20:9 ஸ்கிரீன்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 665 பிராசஸர்
    - அட்ரினோ 610 GPU
    - 6 ஜிபி , 8 ஜிபி LPDDR4X ரேம் 
    - 128 ஜிபி UFS 2.1 மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 11 சார்ந்த பன்டச் ஒஎஸ் 11
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 48 எம்பி பிரைமரி கேமரா, f/1.79, LED பிளாஷ், EIS
    - 8 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், f/2.2
    - 2 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4
    - 16 எம்பி செல்பி கேமரா, f/2.0
    - பக்கவாட்டில் கைரேகை சென்சார்
    - 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5
    - யுஎஸ்பி டைப் சி
    - 5000 எம்ஏஹெச் பேட்டரி
    - 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் 

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி வாட்ச் 4 அந்நிறுவன வலைதளங்களில் பட்டியலிடப்பட்டு இருக்கிறது.


    சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 மாடலுக்கான வலைபக்கம் சாம்சங் இந்தியா, ரஷ்யா மற்றும் கரீபியன் பகுதிகளுக்கான தளங்களில் துவங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்வாட்ச் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. கேலக்ஸி வாட்ச் 4 குறித்து சாம்சங் இதுவரை எந்த தகவலையும் வெளியிடவில்லை.

     சாம்சங் கேலக்ஸி வாட்ச்

    எனினும், புது ஸ்மார்ட்வாட்ச் மாடலை சாம்சங் விரைவில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறி டீசரை வெளியிட்டு இருந்தது. ஸ்மார்ட்வாட்ச் மட்டுமின்றி கேலக்ஸி பட்ஸ் 2 ரென்டர்களும் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின்படி கேலக்ஸி வாட்ச் 4 மாடல் வட்ட வடிவ தோற்றம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அம்சங்களை பொருத்தவரை BIA சென்சார், இதய துடிப்பு சென்சார், SpO2 டிராக்கிங், 5ATM தர வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 40mm மற்றும் 44mm அளவுகளில் கிடைக்கும் என கூறப்படுகிறது.
    இன்பினிக்ஸ் நிறுவனம் 160 வாட் அல்ட்ரா பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது.


    இன்பினிக்ஸ் நிறுவனம் ஸ்மார்ட்போனினை பத்தே நிமிடங்களில் முழு சார்ஜ் செய்யும் 160 வாட் அல்ட்ரா பிளாஷ் சார்ஜ் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தது. இந்த தொழில்நுட்பத்தை இன்பினிக்ஸ் தனது கான்செப்ட் போன் 2021 மாடலில் வழங்கி இருக்கிறது. புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போனினை பத்தே நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்துவிடும். 



    புதிய பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை இயக்கும் போதும் ஸ்மார்ட்போனின் வெப்ப அளவு 40 டிகிரியை கடக்கவில்லை என இன்பினிக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் வெப்ப அளவை கணக்கிட 20 சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. சோதனைகளின் போது ஸ்மார்ட்போனின் வெப்ப அளவு 37.3 டிகிரியாகவே இருந்தது.

    மற்ற அம்சங்களை பொருத்தவரை இன்பினிக்ஸ் கான்செப்ட் போன் 2021 மாடலில் 6.67 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், 88ºC வளைந்த வடிவமைப்பு கொண்டுள்ளது. இதனால் ஸ்மார்ட்போனில் பட்டன்கள் எதுவும் இடம்பெறவில்லை. மேலும் இதில் 8 எம்பி பெரிஸ்கோப் கேமரா, 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.  
    இந்தியாவில் மலிவு விலையில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிடும் திட்டம் பற்றி ரியல்மி நிறுவன தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் பதில் அளித்துள்ளார்.
    ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு புது 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் ரியல்மி நார்சோ 30 5ஜி ஸ்மார்ட்போனினை ரூ. 15,999 விலையில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் பற்றிய கேள்விக்கு ரியல்மி தலைமை செயல் அதிகாரி மாதவ் சேத் பதில் அளித்துள்ளார்.

    ``இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் ரூ. 7 ஆயிரம் பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போனினை வெளியிடும் திட்டம் உள்ளது. `புதிய 5ஜி ஸ்மார்ட்போனிற்கான ஆரம்பகால பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது," என மாதவ் சேத் தெரிவித்தார்.

    கோப்புப்படம்

    5ஜி ஸ்மார்ட்போனின் பெயர், அம்சங்கள், வெளியீட்டு விவரம் என எதுவும் இதுவரை நிர்ணயம் செய்யப்படவில்லை. தற்போது ரியல்மி நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக ரியல்மி 8 5ஜி இருக்கிறது. இந்தியாவில் ரியல்மி 8 5ஜி மாடல் விலை ரூ. 13,999 முதல் துவங்குகிறது. 
    போக்கோ நிறுவனத்தின் புதிய F3 GT ஸ்மார்ட்போன் பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.


    சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பிஐஎஸ் வலைதளத்தில் சான்று பெற்று இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் M2104K10I எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது. புதிய சியோமி ஸ்மார்ட்போன் போக்கோ F3 GT மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. பிஐஎஸ் சான்று பெற்று இருப்பதால், விரைவில் இது அறிமுகம் செய்யப்படும் என தெரிகிறது.

     ரெட்மி கே40 கேமிங் எடிஷன்

    முன்னதாக M2104K10C எனும் மாடல் நம்பர் கொண்ட ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ரெட்மி கே40 கேமிங் எடிஷன் எனும் பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில் சீனாவில் அறிமுகமாகி இருக்கும் ஸ்மார்ட்போனே இந்திய சந்தையில் போக்கோ F3 GT பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    போக்கோ F3 GT மாடலில் 6.67 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு 11 சார்ந்த எம்ஐயுஐ 12.5, 16 எம்பி செல்பி கேமரா, 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ், 2 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படலாம்.
    நத்திங் நிறுவனத்தின் முதல் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    லண்டனை சேர்ந்த நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனமான நத்திங் தனது இயர் 1 ட்ரூ வயர்லெஸ் இயர்போனினை ப்ளிப்கார்ட் தளத்தில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது இயர்பட்ஸ் மாடலை ப்ளிப்கார்ட் வட்டியில்லா மாத தவணை முறை வசதியுடன் வழங்க இருக்கிறது. 

     நத்திங் இயர் 1 டீசர்

    சுவாரஸ்யமான நீண்ட பயணத்தின் சிறுதுவக்கம் தான் இயர் 1 என நத்திங் நிறுவனர் கால் பெய் தெரிவித்தார். புது இயர்போன் டிசைன் இதுவரை அறிமுகமாகவில்லை. எனினும், இது தலைசிறந்த அம்சங்களை கொண்டிருக்கும் என நத்திங் தெரிவித்துள்ளது.

    சர்வதேச வெளியீட்டின் போதே நத்திங் இயர் 1 இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக லண்டனில் இயர்பட்ஸ்-ஐ விற்பனை செய்ய நத்திங் நிறுவனம் ஸ்மார்ட்-டெக் மற்றும் செல்-ப்ரிட்ஜஸ் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்தது.
    கார்மின் நிறுவனத்தின் புதிய போர்-ரன்னர் 55 ஸ்மார்ட்வாட்ச் இரண்டு வாரங்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்குகிறது.


    கார்மின் நிறுவனம் எளிமையாக பயன்படுத்தக்கூடிய ஜிபிஎஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புது ஸ்மார்ட்வாட்ச் போர்-ரன்னர் 55 என அழைக்கப்படுகிறது. இதில் கார்மின் பேஸ் ப்ரோ, பில்ட்-இன் ஜிபிஎஸ், ஏராளமான ஆரோக்கியம் மற்றும் உடல் நலன் சார்ந்த அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    கார்மின் போர்-ரன்னர் 55 குறைந்த எடை, மிக மெல்லிய டிசைன் கொண்டிருக்கிறது. இது உடல் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கண்டறிந்து கொள்ள உதவும் ஏராளமான சென்சார்களை கொண்டிருக்கிறது. இதை கொண்டு மன உளைச்சல் அளவுகளை கண்டறிய முடியும். இதுபோன்று மேலும் பல்வேறு உடல்நல விவரங்களை இந்த ஸ்மார்ட்வாட்ச் மூலம் அறிந்து கொள்ளலம்.

     கார்மின் ஸ்மார்ட்வாட்ச்

    புதிய கார்மின் போர்-ரன்னர் 55 ஸ்மார்ட்வாட்ச் 2 வாரங்களுக்கு தேவையான பேக்கப் வழங்கும் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. ஜிபிஎஸ் மோடில் இயக்கும் போது இந்த ஸ்மார்ட்வாட்ச் 20 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.

    கார்மின் போர்-ரன்னர் 55 ஸ்மார்ட்வாட்ச் பிளாக், அக்வா மற்றும் மான்டெரா கிரே நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் விலை ரூ. 20,990 ஆகும்.
    ×