என் மலர்
மொபைல்ஸ்
- அசுஸ் ரோக் 6 மாடல் பேண்டம் பிளாக் மற்றும் ஸ்டார்ம் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
- அதேபோல் ரோக் 6 ப்ரோ மாடல் ஸ்டார்ம் ஒயிட் நிறத்தில் மட்டும் அறிமுகமாகி உள்ளது.
அசுஸ் நிறுவனத்தின் ரோக் 6 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகமானது. இதில் அசுஸ் ரோக் 6 மற்றும் அசுஸ் ரோக் 6 ப்ரோ ஆகிய இரு மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த இரண்டு மாடல்களுக்கும் சிறிய வித்தியாசம் தான். அதுவும் பேக் கவர் டிஸ்ப்ளே பேனல் மற்றும் ரேம் ஸ்டோரேஜ் ஆகியவை மட்டும் தான் மாறுமாம், மற்றபடி இரண்டும் ஒரே அம்சங்களை கொண்டுள்ளது.
இது 6.78 இன்ச் ஃபுல் ஹெச்.டி ப்ளஸ் OLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி பிக்சல் ஒர்க்ஸ் ஐ6 புராசஸரும் இதில் இடம்பெற்று உள்ளது. இதன் ஸ்கிரீன் 165 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இதுதவிர இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், ஏர் டிரிகர் 6-க்கான அல்ட்ராசோனிக் சென்சார், கிரிப் பிரெஸ் டிடெக்ஷன், ஸ்கிரீனை பாதுகாக்கும் 2.5டி கொரில்லா கிளாஸ் என எண்ணற்ற அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.

அசுஸ் ரோக் 6 ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஆகிய இரு மெமரி வேரியண்ட்களில் வருகிறது. அதேபோல் அசுஸ் ரோக் 6 ப்ரோ 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 18ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி வேரியண்டை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு 3,000 எம்.ஏ.ஹெச் பேட்டரிகள் இடம்பெற்றுள்ளன. ட்ரிபிள் கேமரா செட் அப் உடன் வந்துள்ளது.
அசுஸ் ரோக் 6 மாடல் பேண்டம் பிளாக் மற்றும் ஸ்டார்ம் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் 12ஜிபி ரேம் + 256ஜிபி வேரியண்ட் விலை ரூ.71 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் ரோக் 6 ப்ரோ மாடல் ஸ்டார்ம் ஒயிட் நிறத்தில் மட்டும் அறிமுகமாகி உள்ளது. இதன் 18ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி வேரியண்ட் விலை ரூ.89 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சாம்சங் நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளது.
- அதற்கு போட்டியாகத் தான் ஒப்போ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களை கொண்டுவருவதாக கூறப்படுகிறது.
ஒப்போ நிறுவனம் விரைவில் மடிக்கக்கூடிய போன்களை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்நிறுவனம் தற்போது புதிதாக இரண்டு மடிக்கக்கூடிய மாடல் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன்கள் சாம்சங்கின் Z பிளிப் மாடல்களை போன்று இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த இரண்டில் ஒன்று கிளாம்ஷெல் ஃபோல்டபிள் டிசைனையும், மற்றொன்று புத்தகத்தை போன்று மடிக்கக்கூடிய டிசைனையும் கொண்டுள்ளது. மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் சாம்சங் நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளது. தற்போது அதற்கு போட்டியாகத் தான் ஒப்போ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன்களை கொண்டுவருவதாக கூறப்படுகிறது.

மற்றபடி விரைவில் ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை 18-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
- மோட்டோ G42 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு-HD+ OLED டிஸ்ப்ளே உடன் வந்துள்ளது.
- ப்ளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மோட்டோரோலா நிறுவனம் கடந்த மாத தொடக்கத்தில் அதன் புதிய ஜி-சீரிஸ் போன்களான மோட்டோ ஜி62 மற்றும் மோட்டோ ஜி42 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில் இந்நிறுவனம் இன்று இந்தியாவில் மோட்டோ G42 ஸ்மார்ட்போனை லான்ச் செய்து உள்ள. மோட்டோ G52, மோட்டோ G82 5G, மோட்டோ G71 5G போன்ற G-சீரிஸ் ஃபோன்கள் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக G42 மாடல் வந்துள்ளது.
ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், இன்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. மோட்டோ G42 ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் எஸ்.பி.ஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக ரூ.1000 தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது. மோட்டோ G42 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு-HD+ OLED டிஸ்ப்ளே, பஞ்ச்-ஹோல் கட்அவுட் மற்றும் கண் பாதுகாப்பிற்காக நைட் மோட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வருகிறது.

இதுதவிர கிராபிக்ஸிற்காக Adreno 610 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி உடன் வந்துள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயகுங்தளம், 20W வேகமான சார்ஜிங், 5000mAh பேட்டரி என எண்ணற்ற அம்சங்கள் இதில் உள்ளது. மோட்டோ G42-வில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட்/டெப்த் ஹைப்ரிட் லென்ஸ் மற்றும் 2MP மைக்ரோ ஷூட்டர் ஆகியவை அடங்கிய டிரிபிள் கேமரா செட்டப்பைக் கொண்டுள்ளது.
செல்ஃபி மற்றும் வீடியோ கால் செய்ய முன்புறத்தில் 16MP ஸ்னாப்பர் கேமரா உள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் C மற்றும் NFC. டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் சிம் ஆதரவுடன் வருகிறது. பாதுகாப்புக்காக பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டு உள்ளது. ப்ளிப்கார்டில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை மாதம் 18-ந் தேதி இந்தியாவில் அறிமுகமாகக்கூடும் என கூறப்பட்டு வந்தது.
- ஆனால் தற்போது அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மே மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை மாதம் 18-ந் தேதி இந்தியாவில் அறிமுகமாகக்கூடும் என கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை மாதம் 21-ந் தேதி நடைபெற உள்ள லான்ச் ஈவண்டில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஒப்போ ரெனோ 8 மற்றும் ரெனோ 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதில் ரெனோ 8 மாடல் 6.43-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவையும், ரெனோ 8 ப்ரோ மாடல் 6.62 இன்ச் டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் புராசஸரை பொருத்தவரை ரெனோ 8 மாடல் மீடியாடெக் டைமென்சிட்டி 1300 SoC புராசஸரையும், ரெனோ 8 ப்ரோ மாடல் ஸ்நாப்டிராகன் 7 Gen 1 புராசஸரையும் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதர விவரங்கள் அடுத்தடுத்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சூப்பர் பாஸ்ட் 180W தண்டர் சார்ஜ் டெக்னாலஜியை இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.
- விரைவில் அறிமுகமாக உள்ள இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் போன்களில் இந்த சார்ஜிங் அம்சம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன்களும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. காலை முதல் இரவு தூங்கும் வரை யாராலும் அதனை பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்கிற நிலை தான் தற்போது உள்ளது. ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பெரும் தலைவழியாக இருப்பது அதில் உள்ள பேட்டரி தான். அதிகம் பயன்படுத்தினால் சூடாகிவிடும், அதுமட்டுமின்றி சார்ஜும் வேகமாக குறைந்துவிடும்.
இத்தகைய பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காணும் விதமாக இன்பினிக்ஸ் நிறுவனம் அதன் புதிய ஃபிளாக்ஷிப் போன்களில் அசத்தல் அம்சங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி சூப்பர் பாஸ்ட் 180W தண்டர் சார்ஜ் டெக்னாலஜியை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்மூலம் இன்பினிக்ஸின் புதிய ஃபிளாக்ஷிப் போன்கள் 4 நிமிடத்தில் 50 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வளவு வேகமாக சார்ஜ் செய்யப்படுவதனால் அதில் சில ஆபத்துகளும் நேர வாய்ப்பு இருக்கும் என நீங்கள் எண்ணலாம், ஆனால் அப்படி நேர வாய்ப்பே இல்லை என அந்நிறுவனம் கூறுகிறது. இதில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களும் உள்ளதாம். இவ்வளவு வேகமாக சார்ஜ் ஏறினாலும் இதன் பேட்டரி சூடாகாதாம். சூடாவதை தடுக்க யுஎஸ்பி போர்ட், சார்ஜிங் சிப், பேட்டரி உள்பட 10 இடங்களில் டெம்பரேச்சர் சென்சார் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் அறிமுகமாக உள்ள இன்பினிக்ஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் போன்களில் இந்த சார்ஜிங் அம்சம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- சாம்சங் கேலக்ஸி F13 ஸ்மார்ட்போன் 15W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது.
- பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் வாயிலாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாம்சங் நிறுவனம் அதன் புதிய கேலக்ஸி F சீரிஸ் ஸ்மார்ட்போனை சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. சாம்சங் கேலக்ஸி F13 என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் நேற்று முதல் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. டிசைனைப் பொருத்தவரை சாம்சங் கேலக்ஸி M13 மாடலைப் போன்றே F13 மாடலும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பிங்க், புளூ, கிரீன்ஆகிய மூன்று நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி F13 முழு ஹெச்டி + எல்சிடி பேனலுடன் கூடிய 6.6-இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது 15W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 6,000mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. கேமராவை பொருத்தவரை பின்புறத்தில் டிரிபிள் கேமரா அமைப்பும், முன்புறத்தில் வாட்டர் டிராப் நாட்ச் செல்ஃபி கேமராவும் உள்ளது.

சாம்சங் எக்சினாஸ் 850 புராசஸருடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வாட்டர்ஃபால் புளூ, நைட்ஸ்கை கிரீன், சன்ரைஸ் காப்பர் பெயிண்ட் ஜாப்ஸ் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போனின் 64ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.11,999 ஆகவும், 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.12,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அறிமுக ஆஃபராக இந்த இரு வேரியண்ட்களின் விலையும் தலா ரூ.1000 குறைக்கப்பட்டு உள்ளது. பிளிப்கார்ட் மற்றும் சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் வாயிலாக இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- நத்திங் போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன.
- நத்திங் போன் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
நத்திங் நிறுவனம் அதன் முதல் ஸ்மார்ட்போனை வருகிற ஜூலை 12-ந் தேதி லண்டனில் நடைபெற உள்ள ஈவண்ட்டில் வெளியிட உள்ளது. வெளியீட்டுக்கு இன்னும் 2 வாரங்களுக்கு மேல் இருந்தாலும், அந்த போன் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக அந்த போனை மக்களிடையே பிரபலமாக்க அந்நிறுவனம் பல்வேறு வியாபார யுக்திகளை பயன்படுத்தி வருகிறது.
அந்த வரிசையில், நத்திங் போனின் இந்திய விலை விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி உள்ளன. அதன் படி இந்திய சந்தையில் புதிய நத்திங் ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 128GB மெமரி வேரியண்ட் ரூ. 31 ஆயிரத்திற்கும், 8GB ரேம் + 256GB மெமரி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ. 32 ஆயிரமாகவும், 12GB ரேம் + 256GB மெமரி வேரியண்ட் ரூ. 36 ஆயிரத்திற்கும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

நத்திங் போன் பிளாக் மற்றும் ஒயிட் ஆகிய இரு நிறங்களில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. நத்திங் போன் (1) மாடல் ரிலையன்ஸ் டிஜிட்டல் ஸ்டோர்கள் மூலம் ஆப்லைனில் விற்பனை செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் ஆன்லைனில் பிளிப்கார்ட் தளம் வாயிலாக வாங்க முடியும்.
- மோட்டோ G52, மோட்டோ G82 5G, மோட்டோ G71 5G போன்ற G-சீரிஸ் ஃபோன்கள் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக G42 மாடல் வருகிறது.
- மோட்டோ G42 ஸ்மார்ட்போன் டிரிபிள் கேமரா செட்டப் உடன் வருகிறது.
மோட்டோரோலா நிறுவனம் இந்த மாத தொடக்கத்தில் புதிய ஜி-சீரிஸ் போன்களான மோட்டோ ஜி62 மற்றும் மோட்டோ ஜி42 ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இப்போது, இந்த நிறுவனம் விரைவில் இந்தியாவில் மோட்டோ G42 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாகத் தெரிகிறது. மோட்டோ G52, மோட்டோ G82 5G, மோட்டோ G71 5G போன்ற G-சீரிஸ் ஃபோன்கள் இதுவரை அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக G42 மாடல் வருகிறது.
ஏற்கனவே சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போன், வருகிற ஜூலை முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. மோட்டோ G42 ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் ரூ.15 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மோட்டோ G42 ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் முழு-HD+ OLED டிஸ்ப்ளே, பஞ்ச்-ஹோல் கட்அவுட் மற்றும் கண் பாதுகாப்பிற்காக நைட் மோட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வருகிறது. இதுதவிர கிராபிக்ஸிற்காக Adreno 610 GPU உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 இயகுங்தளம், 20W வேகமான சார்ஜிங், 5000mAh பேட்டரி என எண்ணற்ற அம்சங்கள் இதில் உள்ளது.
மோட்டோ G42-வில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா-வைட்/டெப்த் ஹைப்ரிட் லென்ஸ் மற்றும் 2MP மைக்ரோ ஷூட்டர் ஆகியவை அடங்கிய டிரிபிள் கேமரா செட்டப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால் செய்ய முன்புறத்தில் 16MP ஸ்னாப்பர் கேமரா உள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்தவரை புளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் C மற்றும் NFC. டால்பி அட்மோஸ், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டூயல் சிம் ஆதரவுடன் வருகிறது. பாதுகாப்புக்காக பக்கவாட்டில் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டு உள்ளது.
- ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடலில் ஆக்சிஜன் 12.1 இயங்குதளம் இடம்பெற்றுள்ளது.
- இது மீடியாடெக் டைமென்சிட்டி 1300 புராசசரை கொண்டுள்ளது.
ஒன்பிளசின் நார்டு 2T 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ளது. அதன் வெளியிட்டு விவரம் லீக் ஆகி உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜூலை 1ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டு, ஜூலை 5ந் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விலை விவரமும் லீக் ஆகி உள்ளது.
அதன்படி இதன் 8ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.28 ஆயிரத்து 999 ஆகவும், 12ஜிபி + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட்டின் விலை ரூ.33 ஆயிரத்து 999 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒன்பிளஸ் நார்டு 2T 5ஜி மாடலில் ஆக்சிஜன் 12.1 இயங்குதளம், 6.43 இன்ச் புல் ஹெச்.டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் டைமென்சிட்டி 1300 புராசசரை கொண்டுள்ளது. டிரிபிள் கேமரா செட் அப் உடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன், 4500 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது.
- ரெனோ 8 ப்ரோ பிளஸ் மாடல் இந்தியாவில் ரெனோ 8 ப்ரோ என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
- ரெனோ 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை இடம்பெற்றுள்ளன.
ஒப்போ நிறுவனம் அதன் ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த மாதம் சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த 8 சீரிஸில் வெண்ணிலா ரெனோ 8, ரெனோ 8 ப்ரோ மற்றும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் ஆகிய மாடல்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்கள் இந்த மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை.
சமீபத்திய தகவல் படி ரெனோ 8 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் வருகிற ஜூலை மாதம் 2-வது வாரத்தில் இந்தியாவில் அறிமுகமாகக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ரெனோ 8 ப்ரோ பிளஸ் மாடல் இந்தியாவில் ரெனோ 8 ப்ரோ என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெண்ணிலா ரெனோ 8 ஸ்மார்ட்போன், 6.43-இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் டைமென்சிட்டி 1300 SoC புராசசரைக் கொண்டுள்ளது. 80W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 4,500mAh பேட்டரியையும் கொண்டுள்ளது. பின்புறத்தில் 50MP + 2MP + 2MP என டிரிபிள் கேமரா அமைப்பையும் முன்பக்கத்தில் 32MP கேமராவையும் கொண்டுள்ளது.
- பிரைட் பிளாக், கிரிஸ்டல் மற்றும் டார்க் புளூ ஆகிய மூன்று நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
- சைடு மவுண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார் இதில் உள்ளது.
ஜியோனி நிறுவனம் அதன் புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. ஜியோனி P50 ப்ரோ என பெயரிடப்பட்டுள்ள அந்த மாடல் அச்சு அசல் ஐபோன் 13 போன்றே முன்புற தோற்றத்தை கொண்டுள்ளது. பிரைட் பிளாக், கிரிஸ்டல் மற்றும் டார்க் புளூ ஆகிய மூன்று நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் 13 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது.
விலையை பொருத்தவரை இதன் 4ஜிபி + 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ. 7,600க்கும், 4ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.8,600க்கும், 6ஜிபி + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.8,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டூயல் சிம் வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.

பின்புறத்தில் கேப்சியுல் மாதிரியான கேமரா அமைப்பை கொண்டுள்ளது. ஹெச்டி நைட் ஷாட், மேக்ரோ ஷாட் மற்றும் போர்ட்ரேட் பியூட்டி லென்ஸ் ஆகியவை அதில் இடம்பெற்று உள்ளன. இதுதவிர 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவை முன்புறத்தில் கொண்டுள்ளது. சைடு மவுண்டட் பிங்கர் பிரிண்ட் சென்சார் இதில் உள்ளது. அதுமட்டுமின்றி பேஸ் அன்லாக் வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கிரீன் ஆகிய இரு நிறங்களில் வந்துள்ளது.
- இது 5,000 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது.
ரியல்மி நிறுவனம் தனது புதிய மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ரியல்மி நார்ஸோ 50i பிரைம் எனும் பெயர்கொண்ட இந்த ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் கிரீன் ஆகிய இரு நிறங்களில் வந்துள்ளது. மலிவு விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் இதன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.7 ஆயிரத்து 800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ. 8,604 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறம் சிங்கிள் கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் லைட் உடன் வருகிறது. அதேபோல் இது 5,000 mAh பேட்டரி பேக் அப் உடன் வருகிறது. இந்த போனின் வலது பக்கத்தில் வால்யூம் பட்டன் மற்றும் பவர் பட்டன் இடம்பெற்று உள்ளது. அதேபோல் இடதுபக்கத்தில் சிம் டிரே இருக்கிறது.

டூயல் சிம் சப்போர்ட் உடன் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போன் BLP877 என்கிற மாடல் நம்பரை கொண்டுள்ளது. ரியல்மி நார்ஸோ 50i பிரைம் ஸ்மார்ட்போன் இந்தியாவில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. வருகிற ஜூன் 27-ந் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் உலக சந்தைகளில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.






