என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • விவோ ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
    • விவோ ஸ்மாரட்போன் மாடல் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய T3 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனினை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை அறிமுக சலுகைகளுடன் துவங்கியுள்ளது.

    இந்தியாவில் விவோ T3 ப்ரோ 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 24 ஆயிரத்து 999 என்றும் டாப் என்ட் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    தற்போது இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், விவோ இந்தியா இ ஸ்டோர் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை மையங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.

    புதிய விவோ ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஹெச்டிஎப்சி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 3 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆறு மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்டுகிறது.

     


    அம்சங்களை பொருத்தவரை விவோ T3 ப்ரோ 5ஜி மாடலில் 6.77 இன்ச் 2392x1080 பிக்சல் FHD AMOLED ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர், அட்ரினோ 720 GPU, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓஎஸ் 14 வழங்கப்பட்டு இருக்கிறது.

    டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள விவோ T3 ப்ரோ மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், 16MP செல்பி கேமரா, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், யுஎஸ்பி டை் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட், 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6, 5500எம்ஏஹெச் பேட்டரி, 80W பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • ரியல்மி நோட் 60 ஆனது ஆன்டிராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ-இல் இயங்குகிறது.
    • ரியல்மி நோட் 60 ஆனது 5,000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் பொருத்தப்பட்டுள்ளது.

    ரியல்மி நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் ரியல்மி நோட் 60 இந்தோனேசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.

    ரியல்மி நோட் 60 யூனிசாக் T612 சிப்செட்டில் இயங்குகிறது. ரியல்மி நோட் 60 2 வண்ணம் மற்றும் 3 வகையான ரேம் மற்றும் ஸ்டோரேஜில் அதிகபட்சமாக 8 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜுடன் கிடைக்கிறது.

    ரியல்மி நோட் 60 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது மற்றும் ரியல்மி மினி கேப்சூல் 2.0 அம்சத்தைக் கொண்டுள்ளது. ரியல்மி நோட் 60 கடந்த ஆண்டு ரியல்மி நோட் 50 உடன் பல அம்சங்களை கொண்டுள்ளது.

    ரியல்மி நோட் 60 4GB RAM + 64GB ஸ்டோரேஜ் விலை இந்திய விலையில் தோராயமாக ரூ. 7,500. 6 ஜிபி + 128 ஜிபி மற்றும் 8 ஜிபி + 256 ஜிபி ரேம் மற்றும் சேமிப்பக ஸ்டோரேஜ் விலை முறையே இந்திய விலையில் தோராயமாக ரூ. 8,500 மற்றும் இந்திய விலையில் தோராயமாக ரூ. 10,000 ஆகும். இது மார்பிள் பிளாக் மற்றும் வோயேஜ் ப்ளூ வண்ணங்களில் கிடைக்கிறது.

    ரியல்மி நோட் 60 ஆனது ஆன்டிராய்டு 14 அடிப்படையிலான ரியல்மி யுஐ-இல் இயங்குகிறது.

    செல்பி கேமரா சுற்றி சில அறிவிப்புகளை காட்டும் மினி கேப்சூல் அம்சத்தை பெற்றுள்ளது. இது 6.74 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே, 90Hz புதுப்பிப்பு வீதம், 180Hz தொடு மாதிரி வீதம் மற்றும் 560நிட்ஸ் பீக் வெளிச்சம் ஆகியவற்றை கொண்டுள்ளது.

    இது ஆக்டா கோர் யூனிசாக் T612 சிப்செட்டில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்டது. விர்ச்சுவல் ரேம் அம்சத்துடன், பயன்படுத்தப்படாத ஸ்டோரேஜை பயன்படுத்தி உள் ரேமை 16 ஜிபி வரை விரிவாக்க முடியும்.

    புதிய ரியல்மி நோட் 60-ல் உள்ள இணைப்பு விருப்பங்களில் வைபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவை அடங்கும். இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP64-மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது ரெயின்வாட்டர் ஸ்மார்ட் டச் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதனால் பயனர்கள் மழைக்காலங்களில் அல்லது கைகள் ஈரமாக இருக்கும்போது கூட ஸ்கிரீனை தொடர்பு கொள்ள முடியும்.

    ரியல்மி நோட் 60 ஆனது 5,000mAh பேட்டரி மற்றும் 10W சார்ஜிங் பொருத்தப்பட்டுள்ளது. இது 7.84 மிமீ தடிமன் மற்றும் 187 கிராம் எடை கொண்டது.

    • டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு விஸ்ட்ரான் நிறுவனத்தை வாங்கியது.
    • ஐபோன் தயாரிப்பதற்கான 6 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம்.

    டாடா எலாக்ட்ரானிக்ஸ் நிறுவனம் உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் உடன் இணைந்து இந்தியாவில் ஐபோன் தயாரிக்க இருக்கிறது. இதற்காக சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு செய்துள்ளது டாடா குழுமம். தமிழ்நாட்டில் உள்ள ஓசூரில் தொழிற்சாலை தயாராகி வருகிறது.

    இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதத்தில் இருந்து செல்போன் உற்பத்தி இந்த தொழிற்சாலையில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    உதிரி பாகங்கள் இறக்குமதி செய்யப்பட்டு இங்கு ஐபோன் உருவாக்கப்படும் (Assembly). இதற்காக 250 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் 50 ஆயிரம் பேர் வேலைப் பார்க்கும் வகையில் வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. பெரும்பாலும் பெண்கள்தான் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆப்பிள் நிறுவனம் ஐபோன் உற்பத்தியை இந்தியாவில் கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கியது. பாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் ஐ-போன் செல்போன்களை உற்பத்தி (Assembly) செய்கிறது. பாக்ஸ்கான், விஸ்ட்ரான், பெகட்ரான் ஆகிய நிறுவனங்கள் ஐ-போன் தயாரித்து ஏற்றுமதி செய்கிறது. விஸ்ட்ரான் நிறுவனத்தை டாடா குழுமம் 125 மில்லியன் டாலருக்கு கடந்த வருடம் அக்டோபர் மாதம் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • மீடியாடெக் 6300 பிராசசர், 50 மெகா பிச்சல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் போர்ட்ரைட் கேமரா, 32 மொகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதிகளும் கொண்டது.
    • 45W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியுடன் இயங்கக் கூடியதாகும்.

    Oppo ஸ்மார்ட்போன் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் எஃப் சீரிஸ் போன்கனை இந்தியாவில் வெளியிட்டது. இந்த நிலையில் நாளை F27 போன் விற்பனைக்கு வரவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    8GB ரேம், 256GB ரேம் ஸ்டோரேஜ் கொண்ட போன் 24,999 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 8GB ரேம், 128GB ஸ்டோரேஜ் கொண்ட போன் 22,999 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.

    கலர்ஓஎஸ் (ColoreOS) 14 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 கொண்டதாகவும், 120HZ ரெப்ரெஷ் மற்றும் 2100 நிட்ஸ் பீக் பிரைட்னெஸ் 6.67 இன்ச், Full-HD+ OLED டிஸ்பிளே வசதி கொண்டதாகவும் இருக்கலாம்.

    மீடியாடெக் 6300 பிராசசர், 50 மெகா பிச்சல் பிரைமரி கேமரா, 2 மெகா பிக்சல் போர்ட்ரைட் கேமரா, 32 மொகாபிக்சல் செல்பி ஷூட்டர் வசதிகளும் கொண்டது.

    ஏஐ ஸ்டூடியொ, ஏஐ எரேசர் 2.0, ஏஐ ஸ்மார்ட் இமேஜ் மேட்டிங் 2.0 ஆகிய ஏஐ பீச்சர்ஸ் அம்சங்களையும் கொண்டுள்ளதாக இருக்கும் எனத் தெரிகிறது. 45W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் உடன் 5,000mAh பேட்டரியுடன் இயங்கக் கூடியதாகும். ஆம்பர் ஆரஞ்ச், எமரால்டு க்ரீன் ஆகிய கலர்களில் வர இருக்கிறது.

    • ஐடெல் ஸ்மார்ட்போன்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன.
    • ஐடெல் A50 சீரிஸ் மாடல்களுக்கு ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது.

    ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் A50 மற்றும் A50C என இரண்டு புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் ஐடெல் A50 மற்றும் A50C மாடல்களில் 6.6 இன்ச் HD+ IPS டிஸ்ப்ளே, யுனிசாக் டி603 ஆக்டா கோர் பிராசஸர், 8MP ஏஐ டூயல் கேமரா சென்சார்கள், 5MP செல்பி கேமரா, 3 ஜிபி, 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய ஐடெல் A50C மாடலில் மட்டும் ரேம் மற்றும் ஸ்டோரேஜ் மாற்றப்பட்டு இருக்கிறது. இதில் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மற்றும் 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. ஐடெல் A50 மாடலில் 5000 எம்ஏஹெச் பேட்டரி உள்ளது. இவற்றுடன் யுஎஸ்பி டைப் சி சார்ஜிங் வழங்கப்பட்டுள்ளது.

     


    இரு மாடல்களிலும் ஆண்ட்ராய்டு 14 கோ எடிஷன் ஓஎஸ் உள்ளது. கனெக்டிவிட்டிக்கு 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களுக்கும் இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக் கொள்ளும் வசதி மற்றும் ஒரு வருட வாரண்டி வழங்கப்படுகிறது.

    ஐடெல் A50C ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, கோல்டன் மற்றும் கிரீன் என நான்குவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 5 ஆயிரத்து 599 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஐடெல் A50 ஸ்மார்ட்போன் பிளாக், புளூ, கோல்டன் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6,499 ஆகும். இரு மாடல்களின் விற்பனை அமேசான் தளத்தில் நடைபெற உள்ளது.

    • ஐடெல் A50 ஸ்மார்ட்போன் நான்கு நிறங்களில் கிடைக்கலாம்.
    • ஐடெல் A50 ஸ்மார்ட்போன் இரட்டை கேமரா சென்சார் கொண்டிருக்கும்.

    ஐடெல் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அடுத்த ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ஐடெல் A50 என்ற பெயரில் உருவாகிறது. இது அந்நிறுவனத்தின் ஐடெல் A70 மாடலைத் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    புதிய ஐடெல் A50 ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் HD+ டிஸ்ப்ளே, மெல்லிய டிசைன் டூயல் கேமரா சென்சார்கள், ஃபிளாஷ் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போனின் பெரும்பாலான அம்சங்கள் ஐடெல் A70 மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என கூறப்படுகிறது.

    இந்த ஸ்மார்ட்போன் கோல்டு, பிளாக், சில்வர் மற்றும் கிரீன் என நான்குவித நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் வரிசையில், புதிய ஐடெல் மாடலும் இணைந்து கொள்ளும். புதிய ஐடெல் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு இலவசமாக ஸ்கிரீனை மாற்றிக் கொடுக்கும் வசதி வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த சலுகை பயனர்கள் ஸ்மார்ட்போனை வாங்கிய முதல் 100 நாட்களுக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. புதிய ஐடெல் A50 ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 

    • ஜனவரி மாதம் வெளியாகும்போது இதன் விலை 74,999 ரூபாய் ஆகும்.
    • அமேசானில் 26 சதவீதம் தள்ளுபடியுடன் 55 ரூபாய்க்கு கிடைக்கிறது.

    அமேசான் சுதந்திர தினத்தை முன்னிட்டு கிரேட் ஃப்ரீடம் ஃபெஸ்டிவெல் (Great Freedom Festival) விற்பனையை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 6-ந்தேதி தொடங்கி ஆகஸ்ட் 11-ந்தேதி (நாளை) வரை நடைபெறுகிறது. இந்த காலக்கட்டத்தில் ஸ்டார்ட்போன்களுக்கு மிகப்பெரிய அளவில் தள்ளுபடி வழங்குகிறது.

    அதன்படி சாம்சங் கேலக்ஸி S24 ஸ்மார்ட்போனுக்கு 26 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. இதனால் 55 ஆயிரம் ரூபாய்க்கு இந்த போனை வாங்கலாம்.

    சாம்சங் கேலக்ஸி S24 சீரிஸ் கடநத் ஜனவரி மாதம் இந்தியாவில் வெளியானது. சுமார் 7 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இந்த ஆஃபரை வழங்குகிறது. அறிமுகம் ஆனபோது இதன் விலை 74,999 ரூபாயாக இருந்தது.

    எஸ்பிஐ கிரெடிட் கார்டுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்குகிறது. சாம்சங் கேலக்ஸி S24 உயர்செயல்பாட்டுடன் கூடிய Exynos 2400 பிராசசர் கொண்டதாகும். 8ஜிபி ரேம், 512ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்டது. 6.2-inch FHD+ Dynamic AMOLED 2X டிஸ்பிளே கொண்டது. ரெப்ரேஷ் ரேட் 120Hz வரை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும்.

    50எம்பி மெயின் கேமரா, 12 எம்பி அல்ட்ரா-வைடு கேமரா, 10எம்பி டெலிபோட்டோ கேமரா உடன் 12எம்பி செல்பி கேமரா கொண்டதாகும். 25W வேக சார்ஜிங் சப்போர்ட் உடன் 4,000 mAh பேட்டரி கொண்டது. wireless சார்ஜிங் வசதியும் உண்டு. 

    • ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.
    • ஐபோன் 16 ப்ரோ சீரிசில் ஆப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறும்.

    ஆப்பிள் அடுத்த மாதம் ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸை அறிமுகப்படுத்த உள்ளது. இவை டிஸ்ப்ளே, செயல்திறன் மற்றும் கேமரா அமைப்புகளில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டிருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஆப்பிளின் அடுத்த பெரிய வெளியீட்டை நெருங்க நெருங்க, தொழில்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் ஆப்பிள் ரசிகர்களிடையே புதிய ஐபோன் 16 சீரிசின் எதிர்பார்ப்பும் அதிகரித்து வருகிறது.

    புது ஐபோன் மாடல்கள் ஆப்பிள் வழக்கப்படி செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். புதிய ஐபோன் சீரிஸ் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களைக் கொண்டுவரும் என்று தெரிகிறது.

    ஐபோன் 16 ப்ரோ மாடல் அளவில் பெரிய மற்றும் பிரகாசமான ஸ்கிரீன், சமீபத்திய A18 ப்ரோ சிப், மேம்படுத்தப்பட்ட கேமரா சென்சார்கள், பெரிய பேட்டரி மற்றும் மேம்படுத்தப்பட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை கொண்டிருக்கும்.

    ஐபோன் 16 ப்ரோ சீரிசின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று பெரிய OLED டிஸ்ப்ளேக்கள் இருக்கும் என்று தெரிகிறது. ஐபோன் 15 ப்ரோவில் காணப்படும் 6.1 இன்ச் டிஸ்ப்ளேவை விட, ஐபோன் 16 ப்ரோ 6.3 இன்ச் ஸ்க்ரீனை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 6.9 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இது ஐபோன் 15 ப்ரோ மேக்ஸின் 6.7 இன்ச் திரையில் இருந்து அதிகரித்துள்ளது. கூடுதலாக, இரண்டு மாடல்களும் மெலிதான பெசல்களைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. ஐபோன் 16 ப்ரோவின் பெசல்கள் வெறும் 1.2 மிமீ அளவிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் 1.15 மிமீ அளவிலும் உள்ளது.

    ஐபோன் 16 ப்ரோ சீரிசில் ஆப்பிளின் சமீபத்திய A18 ப்ரோ சிப் இடம்பெறும். இது முந்தைய மாடல்களில் பயன்படுத்தப்பட்ட A17 ப்ரோ சிப்பை விட கணிசமான செயல்திறன் மேம்பாடுகளை உறுதியளிக்கும்.

    கூடுதலாக, ஆப்பிள் பயனர்களுக்கு ஏஐ திறன்களை மேலும் வழங்குவதற்கும் சாதனங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் (Apple Intelligence) உடன் தனிப்பட்ட ஏஐ சேவைகளையும் இந்த பிராசஸர் கொண்டு வரும்.

    ஐபோன் 16 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இன் கேமரா சென்சார்கள் பெரிய மேம்படுத்தல்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு மாடல்களும் 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமராவைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கனெக்டிவிட்டியை பொறுத்தவரை, ஐபோன் 16 ப்ரோ சீரிஸ் சமீபத்திய வைபை 7 தரநிலையை ஆதரிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இது வேகமான மற்றும் நம்பகமான இணைய இணைப்புகளை வழங்குகிறது.

    விலையைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்கள் இருந்தபோதிலும், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ்-க்கான ஆரம்ப விலைகள் அவற்றின் முந்தைய வெர்ஷன்களைப் போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

    • ரியல்மி 13 ப்ரோ+ ஆனது முதல் முறையாக OIS உடன் Sony LYT-701 சென்சார் கொண்ட 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது.
    • ரியல்மி 13 ப்ரோ 50MP LYT-600 சென்சார் கொண்டுள்ளது.

    ரியல்மி (Realme) இந்தியாவில் ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. அறிமுகத்தை தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் முன்பதிவு துவங்கியது. முன்பதிவு ரியல்மி மற்றும் ப்ளிப்கார்ட் வலைதளங்களில் நடைபெற்றது.

    அந்த வகையில் புதிய ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G ஸ்மார்ட்போன்களை வாங்க 6 மணி நேரத்தில் அனைத்து தளங்களிலும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்டர் செய்துள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. இது நம்பர் சீரிஸ் வரலாற்றில் ரியல்மிக்கு ஒரு புதிய சாதனை ஆகும்.

     

    ரியல்மி 13 ப்ரோ சீரிஸ் 5G 6.7-இன்ச் FHD+ 120Hz வளைந்த AMOLED டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 7s Gen 2 பிராசஸர், 12 GB வரை ரேம் மற்றும் 5200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது.

    ரியல்மி 13 ப்ரோ+ ஆனது முதல் முறையாக OIS உடன் Sony LYT-701 சென்சார் கொண்ட 50MP பின்புற கேமராவைக் கொண்டுள்ளது. இத்துடன் 50MP Sony LYT-600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவைக் கொண்டுள்ளது.

    ரியல்மி 13 ப்ரோ 50MP LYT-600 சென்சார் கொண்டுள்ளது. இரண்டு போன்களும் 8MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 32MP முன் கேமராவைக் கொண்டுள்ளது.

    ரியல்மி 13 ப்ரோ 8GB + 12GB மாடலின் விலை ரூ.26,999 என்றும், 8GB + 256GB விலை ரூ.28,999 என்றும் 12GB + 512GB மாடலின் விலை ரூ.31,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ரியல்மி 13 ப்ரோ பிளஸ் 8GB + 256GB மாடலின் விலை ரூ.32,999 என்றும், 12GB + 256GB மாடலின் விலை ரூ.34,999 என்றும் 12GB + 512GB மாடல் விலை ரூ.36,999 என நிர்ணிக்கப்பட்டு இருக்கிறது.

    • இந்தத் சீரிஸ் மாடல்கள்- டார்க் க்ரே, லைட் க்ரே, ஆஃப்-வொயிட் மற்றும் பிங்க் என நான்கு புதிய வண்ணங்களில் கிடைக்கும்.
    • பிக்சல் 9 சீரிஸ் ஜெமினி AI அம்சங்களுடன் பெரிதும் ஒருங்கிணைக்கப்படும் என்று கூகுள் சுட்டிக்காட்டியுள்ளது.

    கூகுள் பிக்சல் 9 சீரிஸ் ஆகஸ்ட் 14-ந்தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. கூகுள் அதன் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் உட்பட ஒன்றல்ல, நான்கு பிக்சல் சாதனங்களை அறிமுகப்படுத்த உள்ளது.

    கூகுள் பிக்சல் 9 சீரிசில் பிக்சல் 9, பிக்சல் 9 ப்ரோ, பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஆகியவை அடங்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் ஆகஸ்ட் 14-ந் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இவை பிளிப்கார்ட்டில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன்களின் உலகளாவிய வெளியீடு ஆகஸ்ட் 13 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக நடைபெறுகிறது.

    இந்தத் சீரிஸ் மாடல்கள்- டார்க் க்ரே, லைட் க்ரே, ஆஃப்-வொயிட் மற்றும் பிங்க் என நான்கு புதிய வண்ணங்களில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் பளபளப்பான பிரேம்களை மேட்-டெக்சர்டு பேனல்களைக் கொண்டிருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

    இந்த ஸ்மார்ட்போனில் கேமரா ஒரு தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருக்கும். ப்ரோ மாடல்களில் மூன்று லென்ஸ்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் வழக்கமான பிக்சலில் இரண்டு லென்ஸ்கள் இருக்கும். பிக்சல் 9 ப்ரோ ஃபோல்டில் உள்ள கேமரா பம்ப் செவ்வக வடிவில் வட்டமான மூலைகளுடன் உள்ளது. அதேசமயம் பிக்சல் 9 ஆனது நீள்வட்ட வடிவ கேமரா பம்ப் கொண்டிருக்கும்.

    பிக்சல் 9 சீரிஸ் ஜெமினி AI அம்சங்களுடன் பெரிதும் ஒருங்கிணைக்கப்படும் என்று கூகுள் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சாதனங்கள் AI திறன்களை உள்ளடக்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் என்பது கூகுளின் 2-வது மடிக்கக்கூடிய ஸ்மார்போனாகவும், இந்தியாவிற்கு வரும் கூகுளின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்போனாகவும் இருக்கும். இந்த புதிய ஸ்மார்போன் அதன் முந்தைய கூகுள் ஃபோல்டுடன் ஒப்பிடும்போது மிகப் பெரிய டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    • விவோ வி40 முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் கேமரா அமைப்பு ஆகும்.
    • விவோ வி40 வடிவமைப்பை பொறுத்தவரை, நேர்த்தியான மற்றும் நவீனமானது.

    விவோ வி30 சீரிசை அறிமுகப்படுத்திய சில மாதங்களுக்குப் பிறகு விவோ அதன் சமீபத்திய ஸ்மார்ட்போன் விவோ வி40 சீரிசை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.

    இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின்படி, விவோ வி40 மற்றும் விவோ வி40 ப்ரோ வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விவோ வி40 மாடல் 8ஜிபி ரேம் மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 பிராசஸர் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இது ஸ்மார்ட்போனில் மல்டி டாஸ்கிங் மற்றும் கேமிங் பயன்பாடுகளுக்கு ஏற்றதாக மாற்றுகிறது.

    இந்த மாடலில் 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளே 1260x2800 பிக்சல் டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இத்துடன் 120Hz ரிப்ரெஷ் வழங்கப்படுவதால் மென்மையான ஸ்க்ரோலிங் மற்றும் கேம்பிளேவுக்கு உதவுகிறது.

    விவோ வி40 முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று அதன் கேமரா அமைப்பு ஆகும். இதில் இரு 50 எம்பி பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது. ஒரு வைட் ஆங்கிள் மற்றும் ஒரு அல்ட்ராவைட் அடங்கும். இதன் முன்புறம் 50 எம்பி கேமரா உள்ளது. இது உயர்தர செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு ஏற்றது.

    முன் மற்றும் பின்புற கேமராக்கள் இரண்டும் 4K வீடியோ தெளிவான வீடியோக்களை உறுதி செய்கின்றன. விவோ வி40 5500 mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் நாள் முழுவதும் நீடிக்கும். கூடுதலாக, 80W வேகமான சார்ஜிங் மூலம், தேவைப்படும்போது விரைவாக பேட்டரியை ரீசார்ஜ் செய்யலாம்.

    விவோ வி40 வடிவமைப்பை பொறுத்தவரை, நேர்த்தியான மற்றும் நவீனமானது. இந்த போனின் பின்புறம் மினரில் கிளாஸ் பேக் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்டெல்லார் சில்வர் மற்றும் நெபுளா பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

    இந்த போன் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்கிறது. கனெக்டிவிட்டிக்கு 5ஜி, வைபை 5, ப்ளூடூத் v5.4, என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி ஆகியவை வழங்கப்படுகின்றன. விவோ வி40 மாடலில் பாதுகாப்பிற்காக திரையில் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

    • செல்பி கேமரா 50 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கும்.
    • 8GB ரேம், 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம், 256GB ஸ்டோரேஜ் கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்.

    "Nothing Phone 2a Plus" இந்தியா உள்பட உலகளவில் வருகிற 31-ந்தேதி ரிலீஸ் ஆகும் என நத்திங் (Nothing) நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் புதிக சிறப்பம்சங்கள் இருக்கும் என துணை-நிறுவனர் கார்ல் பெய் உறுதி அளித்துள்ளார்.

    செல்பி கேமரா 50 மெகா பிக்சல் கொண்டதாக இருக்கும். முன்னதாக 32 மெகா பிக்சல் கொண்டதாக இருந்தது. இந்த பிளஸ் மாடல் 50W சற்று கூடுதல் சார்ஜிங் ஸ்பீடு கொண்டதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    மீடியாடெக் டைமென்சிட்டி 7350 சிப்செட்டால் (MediaTek Dimensity 7350 chipset) இயக்கப்படும். 12GB ரேம் வரை ஒத்துழைக்கக் கூடி கட்டமைப்பு கொண்டதாக இருக்கும்

    8GB ரேம், 256GB ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம், 256GB ஸ்டோரேஜ் கட்டமைப்புடன் கருப்பு மற்றம் கிரே கலரில் கிடைக்கும்.

    ×