என் மலர்tooltip icon

    மொபைல்ஸ்

    • மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என தகவல்.
    • 5500 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

    ஒன்பிளஸ் நிறுவனம் ஜூலை 16 ஆம் தேதி இத்தாலியில் நடத்தும் நிகழ்ச்சியில் தனது புதிய நார்ட் சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனின் ஸ்கெட்ச் அடங்கிய படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

    புதிய புகைப்படத்தின் படி ஒன்பிளஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனின் கேமரா பகுதியை தவிர மற்ற இடங்களில் மெட்டல் ஃபிரேம் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இதன் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் மெட்டல் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஒன்பிலஸ் நார்ட் 4 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், 6.74 இன்ச் 1.5K 2.8D கர்வ்டு AMOLED 120Hz ஸ்கிரீன், 50MP பிரைமரி கேமரா, OIS, 8MP அல்ட்ரா வைடு கேமரா, அலர்ட் ஸ்லைடர் மற்றும் 5500 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    • 5500 mAh பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் இருக்கும்.
    • சீனாவில் ஏஸ் 3வி பெயரில் வெளியானது. இது ஒன்பிளஸ் நோர்டு 4 என மறுபெயரிட்டு இந்தியாவில் வெளியாக வாய்ப்பு.

    சீனாவின் ஸ்மார்ட்போன் நிறுவனமான ஒன்பிளஸ் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒன்பிளஸ் நோர்டு 3 (OnePlus Nord 3) போனை அறிமுகம் செய்தது. இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்டு 4 (OnePlus Nord 4) செல்போனை அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கு விலை 31,999 ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 7+ ஜெனரேசன் 3 SoC பிராசசர் கொண்டதாகவும், 5500 mAh பேட்டரி, 100W பாஸ்ட் சார்ஜிங் கொண்டதாகவும் இருக்கும்.

    இந்த போன் உடன் ஒன்பிளஸ் பட்ஸ் 3 ப்ரோ, ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் ஆகியவையும் வெளியாக வாய்ப்புள்ளது.

    சீனாவில் கடந்த மார்ச் மாதம் ஒன்பிளஸ் ஏஸ் 3வி பெயரில் செல்போன் வெளியானது. இது ஒன்பிளஸ் நோர்டு 4 என மறுபெயரிட்டு இந்தியாவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    50 மெகாபிக்சல் பிரைமரி சென்சாருடன் டுயல் ரியர் கேமரா செட்டப் கொண்டதாகவும், 16 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டதாகவும் இருக்கும்.

    • பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
    • இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.

    ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்களது செல்போன் ரீசார்ஜ் சேவை கட்டணத்தை அதிரடியாக உயர்த்திய நிலையில், பிஎஸ்என்எல் ரீசார்ஜ் கட்டணத்தை குறைத்து புதிய பிளானை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, பிஎஸ்என்எல் ரூ.249க்கு புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது, ஜியோ, ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் கட்டண உயர்வுக்கு மத்தியில், பிஎஸ்என்எல் விலையை குறைத்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு நிவாரணமாக உள்ளது.

    அதன் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டி, வரம்பற்ற அழைப்பு மற்றும் தாராளமான டேட்டா அலவன்ஸ் ஆகியவற்றுடன், அதிக மதிப்பு மற்றும் குறைந்த செலவை எதிர்பார்க்கும் பயனர்களை ஈர்க்கும் வகையில் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

    தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் அதிகாரப்பூர்வமாக தங்கள் கட்டணங்களின் விலையை சுமார் 26 சதவீதம் உயர்த்தியுள்ளது. இது வரும் ஜூலை 3, 4ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    ஜியோ மற்றும் ஏர்டெல்: விலை உயர்வுகள் ஜூலை 3, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

    வோடபோன் ஐடியா: புதிய விலைகள் ஜூலை 4, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

    பிஎஸ்என்எல் திட்டத்தின் சலுகை பற்றிய விவரங்கள் இதோ:

    புதிய திட்டம் 45 நாட்களுக்கு நீடிக்கும். இது வழக்கமான திட்டங்களை விட நீண்டது.

    இந்தியாவில் உள்ள எந்த நெட்வொர்க்கிற்கும் வரம்பற்ற இலவச அழைப்பு.

    மொத்தம் 90ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 2ஜிபிக்கு சமம்.

    ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ்.

    இத்தகைய விரிவான திட்டத்தை குறைந்த விலையில் வழங்குவதற்கான பிஎஸ்என்எல்-ன் நடவடிக்கை சிறந்த மதிப்பை வழங்கும் அதே வேளையில், பயனர்கள் மீதான நிதிச்சுமையை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹானர் 200 16GB ரேம் வரையிலும், 512GB இன்டர்னர் ஸ்டோரேஜ் கொண்டதாகவும் வெளியாக உள்ளது.
    • ஹானர் 200 ப்ரோ 15GB ரேம் வரை சப்போர்ட் செய்வதாகவும், 1TB இன்டர்னெல் ஸ்டோரோக் கொண்டதாகவும் இருக்கும்.

    ஹானர் ஸ்மார்ட்போன் நிறுவனம் விரைவில் ஹானர் 200 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் வெளியிட இருக்கிறது. இதற்கான தகவல்களை அமேசான் ஆன்லைன் நிறுவன இணைய தளத்தில் வெளியாகியுள்ளது. ஆனால் ரிலீஸ் ஆகும் தேதி வெளியிடப்படவில்லை.

    ஹானர் 200 மற்றும் ஹானர் 200 ப்ரோ என இரண்டு சீரிஸில் வெளியாக உள்ளது. ஹானர் 200 ஸ்னாப்டிராகன் 5 ஜெனரேசன் 3 பிராசசரை கொண்டதாகவும், ஹானர் ப்ரோ ஸ்னாப்டிராகன் 5 ஜெனரேசன் 3 பிராசசரை கொண்டதாகவும் இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    6.7 இன்ச் Full HD+ கர்வ்டு OLED டிஸ்பிளே கொண்டதாகவும், ரிசொலுசன் 2664X1200 பிக்சல்ஸ் அண்டு ஸ்மூத் விசுவலுக்கான 120Hz ரெஃப்ரெஸ் ரேட் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரைட்நெஸ் 4 ஆயிரம் நிட்ஸ்க்கு அதிகமாக கொண்டதாகவும் இருக்கும் எனவும் தெரிகிறது.

    ஹானர் 200 16GB ரேம் வரையிலும், 512GB இன்டர்னர் ஸ்டோரேஜ் கொண்டதாகவும் வெளியாக உள்ளது.

    ஹானர் 200 ப்ரோ 15GB ரேம் வரை சப்போர்ட் செய்வதாகவும், 1TB இன்டர்னெல் ஸ்டோரோக் கொண்டதாகவும் இருக்கும்.

    5200 mAh பேட்டரி கொண்டதாக இருக்கும் நிலையில் 100W பார்ஸ்ட் சார்ஜிங் மற்றும் 66W வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான மேஜிக் OS 8.0-ஐ கொண்டது. இரண்டு சிம்கார்டு பயன்படுத்தலாம். 5ஜி வசதி கொண்டதாகும்.

    • ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது.
    • இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயரத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வகையில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களை தொடர்ந்து வோடபோன் ஐடியா நிறுவனமும் தனது செல்போன் ரீசார்ஜ் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

    வோடபோன் ஐடியா நிறுவனம் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 10% முதல் 21% வரை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஜூலை 4ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 299 -ல் இருந்து (தினம் 1.5 GB) ரூ. 349 -ஆக உயர்கிறது.

    365 நாள்களுக்கு ரூ.2,899 (தினம் 1.5 GB) என்ற வருடாந்திரக் கட்டணம் ரூ.3,449 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

     

    • ரெனோ 12 மற்றும் ரெனோ 12 ஜி என்ற சீரிஸ் கொண்ட போன்களை வெளியிட இருக்கிறது.
    • ஏஐ பெஸ்ட் பேஸ், ஏஐ எரேசர் 2.0, ஏஸ் ஸ்டூடியோ, ஏஐ கிளியர் வாய்ஸ் (Clear Voice) போன்ற ஏஐ அடிப்படையிலான கேமரா செயல்பாடுகளை கொண்டுள்ளது.

    ஒப்போ ஸ்மார்ட்போன் நிறுவனம் ஒப்போ ரெனோ 12 5ஜி செல்வோனை விரைவில் வெளியிட இருக்கிறது. இதற்காக இணையதள விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட், இதெற்கான ஒரு பகுதியை உருவாக்கி சீரிஸ்களை லிஸ்ட் செய்துள்ளது. இந்த சீரிஸ் வகை போன்கள் ஏய் பீச்சர்ஸ் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ரெனோ 12 மற்றும் ரெனோ 12 ஜி என்ற சீரிஸ் கொண்டதாக இருக்கும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஏஐ பெஸ்ட் பேஸ், ஏஐ எரேசர் 2.0, ஏஸ் ஸ்டூடியோ, ஏஐ கிளியர் வாய்ஸ் (Clear Voice) போன்ற ஏஐ அடிப்படையிலான கேமரா செயல்பாடுகளை கொண்டுள்ளது.

    இந்த போன்கள் கூகிள் ஜெமினி அடிப்படையிலான ஏஐ சம்மரி, ஏஐ ரெகார்டு, ஏஐ கிளியர் வாய்ஸ், ஏஐ ரைட்டர், ஏஐ ஸ்பீக் பீச்சர்ஸ்களை கொண்டதாகவும் இருக்கும்.

    ரெனோ 12 மீடியாடெக் டைமென்சிட்டி 8250 ஸ்டார் ஸ்பீட் எடிசன் பிராசசரை கொண்டதாகவும், ரெனோ 12 ப்ரோ மீடியாடெக் டைமென்சிட்டி 9200+ ஸ்டார் ஸ்பீட் எடிசன் பிராசசரை கொண்டாகவும் இருக்கும்.

    இரண்டு சீரிஸ் போன்களும் 50எம்பி மற்றும் 8எம்பி டுயல் கேமரா செட்டப் கொண்டதாகவும் இருக்கும். 50எம்பி செல்பி கேமராவை கொண்டுள்ளதாக இருக்கும்.

    5000mAh பேட்டரி, 80W சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்டதாகவும் இருக்கும். ஆண்ட்ராய்டு 14 அடிப்படையில் கலர்ஓஎஸ்-ல் செல்போன் இயங்கும்.

    ரெனோ 12 கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 பாதுகாப்புடன் கொண்ட 12 6.7 இன்ச் டிஸ்பிளே வசதி கொண்டது. 12GB ரேம் மற்றும் 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதி உள்ளது. எபோனி பிளாக், மில்லேனியம் சில்வர், சாஃப்ட் கலர்களில் கிடைக்கும்.

    • நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில் ஏர்டெல் நிறுவனமும் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
    • அடுத்த வாரம் முதல், ஏர்டெல் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதன் இணையதளத்தில் காண்பிக்கும்.

    இந்தியாவில் ஜூலை மாதம் முதல் டெலிகாம் சேவை கட்டணங்கள் உயரத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வந்தன. இந்த வகையில் நேற்று ஜியோ நிறுவனம் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியது. இதனை தொடர்ந்து தற்போது ஏர்டெல் நிறுவனமும் தனது ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.

    ஏர்டெல் பிரீபெயிட் மாதாந்திர சலுகை, இரண்டு மாதங்கள், மூன்று மாதங்கள் மற்றும் ஓராண்டு வேலிடிட்டி வழஹ்கும் பிரீபெயிட் சலுகைகளின் கட்டணங்களை ஏர்டெல் உயர்த்துகிறது. அடுத்த வாரம் புதிய விலை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கான புதிய கட்டணங்கள் ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் என்று ஏர்டெல் தெரிவித்து இருக்கிறது. அடுத்த வாரம் முதல், ஏர்டெல் நிறுவனம் திருத்தப்பட்ட புதிய பிரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதன் இணையதளத்தில் காண்பிக்கும்.

    இதேபோல், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் புதிய திட்டங்களின்படி மாதாந்திர கட்டணம் அதிகரிப்பதைக் காண முடியும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    அந்த வகையில் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 179-ல் இருந்து ரூ. 199-ஆக உயர்கிறது. 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 455-ல் இருந்து ரூ. 509 ஆக உயர்கிறது. அதிகபட்சமாக ஒரு வருட வேலிடிட்டி கொண்ட சலுகையின் விலை ரூ. 2999-ல் இருந்து ரூ. 3599-ஆக உயர்ந்துள்ளது.

    அதன் விவரம் பின்வருமாறு:-


    பழைய விலை

    புதிய விலை

    டேட்டா

    செல்லுபடியாகும் காலம் (நாட்கள்)

    179

    199

    2ஜிபி

    28

    455

    509

    6ஜிபி

    84

    1799

    1999

    24 ஜிபி

    365

    265

    299

    ஒரு நாளைக்கு 1ஜிபி

    28

    299

    349

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    28

    359

    409

    ஒரு நாளைக்கு 2.5 ஜிபி

    28

    399

    449

    ஒரு நாளைக்கு 3 ஜிபி

    28

    479

    579

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    56

    549

    649

    ஒரு நாளைக்கு 2 ஜிபி

    56

    719

    859

    ஒரு நாளைக்கு 1.5 ஜிபி

    84

    839

    979

    ஒரு நாளைக்கு 2 ஜிபி

    84

    2999

    3599

    ஒரு நாளைக்கு 2ஜிபி

    365


    • செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 12-25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.
    • ஜூலை 3ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன.

    நாடு முழுவதும் செல்போன் கட்டணத்தை அதிரடியாக உயர்த்தி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.

    மாதாந்திர ப்ளான், இரு மாதம், மும்மாதம் மற்றும் ஓராண்டு ப்ளான்களின் கட்டணங்களை உயர்த்தி ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.

    ஜியோ நிறுவனம் 19 பிளான்களுக்கு கட்டண உயர்வை அறிவித்துள்ளது. அவற்றில் 17 ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் இரண்டு போஸ்ட்பெய்ட் திட்டங்கள்.

    அதன்படி, செல்போன் ரீசார்ஜ் கட்டணம் 12-25% வரை உயர்த்தப்பட்டுள்ளது.

    ரூ.155ஆக இருந்த மாதாந்திர கட்டணத்தை ரூ.189ஆகவும், 28 நாள்களுக்கு ரூ.299 (2GB) என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.349ஆகவும், ரூ.399 என்ற மாதாந்திரக் கட்டணம் ரூ.449ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

    ஜியோவின் வரம்பற்ற 5ஜி திட்டம், வரும் ஜூலை 3ம் தேதி முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருகின்றன எனவும் ஜியோ அறிவித்துள்ளது.

    • விவோ T3 லைட் 5ஜி மாடல் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.

    விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது முற்றிலும் புதிய 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. விவோ T3 லைட் 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.56 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு இருக்கிறது. மீடியாடெக் டிமென்சிட்டி 6300 பிராசஸர் கொண்டுள்ள விவோ T3 லைட் 5ஜி மாடலில் அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், 6 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் உள்ளது.

    புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ், 8MP செல்பி கேமரா உள்ளது. இத்துடன் பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 14 கொண்டிருக்கிறது. இத்துடன் ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட், IP64 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.4 மற்றும் யுஎஸ்பி டைப் சி வழங்கப்பட்டு உள்ளது.

    இந்திய சந்தையில் விவோ T3 லைட் 5ஜி மாடல் வைப்ரண்ட் கிரீன் மற்றும் மஜெஸ்டிக் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 499 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 499 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

    • மோட்டோரோலா ரேசர் 50 மற்றும் ரேசர் 50 அல்ட்ரா ஆகிய மாடல்களுடன் புதிய மோட்டோ S50 நியோ மாடலும் அறிமுகமாக உள்ளது.
    • மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட போஸ்டரில் மோட்டோ S50 நியோ வாரண்டி பற்றி அறிவித்து இருந்தது.

    மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) ஸ்மார்ட்போனை 4 வருட உத்தரவாதத்துடன் (வாரண்டி) விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.

    உலகத்தில் முதல் முறையாக 4 வருட வாரண்டியை தரும் முதல் ஸ்மார்ட்போனாக மோட்டோ S50 நியோ (Moto S50 Neo) வெளிவர இருக்கிறது. இந்த போனின் மற்ற சிறப்பம்சம் மற்றும் விலை பற்றிய விபரங்களை விரிவாக பார்க்கலாம்.

    மோட்டோரோலா ரேசர் 50 மற்றும் ரேசர் 50 அல்ட்ரா ஆகிய மாடல்களுடன் புதிய மோட்டோ S50 நியோ மாடலும் அறிமுகமாக உள்ளது. இந்த போனுக்கு சீனாவில் 4 ஆண்டு வாரண்டி வழங்குவதாக மோட்டோ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. அந்த வகையில் நீண்ட கால உத்தரவாதத்துடன் வெளியாகும் உலகின் முதல் போனாக மோட்டோ S50 நியோ வெளியாக இருக்கிறது.

    மோட்டோரோலா நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட போஸ்டரில் மோட்டோ S50 நியோ வாரண்டி பற்றி அறிவித்து இருந்தது. போஸ்டரில் மோட்டோ S50 நியோ ஸ்மார்ட்போன் சாதனம் 4 வருட வாரண்டியை பெறும் என்று நிறுவனம் விளம்பரம் செய்தது. ஆச்சரியப்படும் விதமாக இதுவரை எந்தவொரு நிறுவனமும் வழங்காத ஒரு வாரண்டியை மோட்டோரோலா தற்போது வழங்கி உள்ளது.

    • இந்திய சந்தையில் ஜூன் 27-ந்தேதி முதல் அமேசான் இணைய தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
    • 8GP ரேம், 128GP ஸ்டோரேஜ், 8GP ரேம், 256GP ஸ்டோரேஜ் உடன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட் போன்களை வெளியிட்டுள்ளது.

    ஒன்பிளஸ் செல்போன் தயாரிப்பு நிறுவனம் நார்ட் சிஇ 4 லைட் 5ஜி (Nord CE 4 Lite 5G) ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் ஜூன் 27-ந்தேதி முதல் அமேசான் இணைய தளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    ஒன்பிளஸ் நிறுவனத்தின் 5ஜியின் குறைந்த விலை போன் இதுவாகும். 80வாட் சூப்பர்வூக் (SUPERVOOC) பாஸ்ட் சார்ஜிங் உடன் 5500mAh பேட்டரி வசதி கொண்டது.

    8GP ரேம், 128GP ஸ்டோரேஜ், 8GP ரேம், 256GP ஸ்டோரேஜ் உடன் இரண்டு ஸ்டோரேஜ் வேரியன்ட் போன்களை வெளியிட்டுள்ளது.

    8GP ரேம், 128GP ஸ்டோரேஜ் போன் 19,999 ரூபாய்க்கும், 8GP ரேம், 256GP ஸ்டோரேஜ் போன் 22,999 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    மெகா ப்ளூ, சூப்பர் சில்வர், அல்ட்ரா ஆரஞ்ச் (இந்தியா மட்டும்) ஆகிய கலர்களில் வெளியாக உள்ளது.

    அமேசான் இணையதளத்தில் ஜூன் 27-ந்தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. ஆயிரம் ரூபாய் வரை வங்கி தள்ளுபடியுடன் 3 மாதம் no-cost EMI வசதியுடன் வழங்குகிறது.

    • மத்தியில் பன்ச் ஹோல் டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.
    • ஸ்மார்ட்போனின் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்தில் உள்ளது.

    ஒப்போ நிறுவனம் உருவாக்கி வரும் புதிய A சீரிஸ் ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் ஆன்லைனில் வெளியாகி உள்ளது. இத்துடன் வெளியான புகைப்படங்களில் இந்த ஸ்மார்ட்போன் ஐபோனில் உள்ளதை போன்ற கேமரா மாட்யுல் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது.

    அதன்படி புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் ஐபோன் 12 மாடலில் உள்ளதை போன்ற கேமரா மாட்யுல்- இரண்டு சென்சார்கள் செங்குத்தாக பொருத்தப்பட்டு இருக்கிறது. இதை சுற்றி சதுரங்க வடிவம் கொண்ட கேமரா மாட்யுல் உள்ளது. கேமரா சென்சார்களின் அருகில் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்படுகிறது. தற்போதைய புகைப்படத்தின் படி இந்த ஸ்மார்ட்போன் நீல நிறத்தில் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

     


    புதிய ஒப்போ ஸ்மார்ட்போனின் வலதுபுறத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் வழங்கப்படுகிறது. கீழ்புறத்தில் யு.எஸ்.பி. டைப் சி போர்ட், மைக், 3.5mm ஆடியோ ஜாக் மற்றும் ஸ்பீக்கர் கிரில் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மா்ட்போன் ஃபிளாட் டிஸ்ப்ளே மற்றும் மத்தியில் பன்ச் ஹோல் டிசைன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது.

    அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் Full HD+ LCD ஸ்கிரீன் கொண்ட டிஸ்ப்ளே, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விவரங்கள் பி.ஐ.எஸ். வலைதளத்திலும் இடம்பெற்று இருக்கிறது. அந்த வகையில், இந்தியாவிலும் இந்த மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

    ×