search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாங்கண்ணி மாதா"

    • 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.
    • விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடக்கிறது.

    மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந்தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29-ந் தேதி கொடியேற்றம் தொடங்கி 10 நாட்கள் ஆரோக்கிய அன்னைக்கு திருவிழா நடைபெறும்.

    அதன்படி ஆகஸ்ட் 29-ந் தேதி மாலை 5.45 மணிக்கு தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்ப்ரோஸ், மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ் ஆகியோரால் புனித கொடி ஏற்றப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி இன்று நடக்கிறது. அன்னையின் பிறந்தநாள் விழா நாளை (8-ந்தேதி) நடைபெற உள்ளது. இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா திருத்தலப் பேராலயம், பண்பாட்டினாலும் ,மொழியினாலும் சமயத்தினாலும் வேறுபட்டிருக்கும் மக்களெல்லாம் சங்கமிக்கும் புண்ணியத் தலமாகத் திகழ்ந்து வருகிறது.

    கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி அனைத்து சமுதாய மக்களும் தங்களின் ஆரோக்கியத்திற்காக இங்கு அன்னையிடம் வந்து வேண்டிக்கொள்வார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, ஆங்கிலம்,கொங்குனி, இந்தி, என்று சிறப்பாக திருப்பலி நடைபெறும்.

    இன்று புனித ஆரோக்கிய மாதாவின் தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை வலம் வரும் அப்போது அனைத்து மக்களுக்கும் ஆசி வழங்கியபடியே அன்னை செல்வது சிறப்பு. மக்கள் வெள்ளத்தில் தேர் மெதுமெதுவாக வலம் வரும் அழகு மிகவும் சிறப்பு வாய்ந்தது.

    • கெபியில் முன்பு வேளாங்கண்ணி மாதா சிலை உடைக்கப்பட்டு கிடந்தது.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கெபியில் உள்ள அனை வேளாங்கண்ணி மாதா சிலையை சிலர் அவமரியாதை செய்தனர்.

    ஓட்டப்பிடாரம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ளது கொம்மாடி தளவாய்புரம் கிராமம். இங்குள்ள சாலையோரம் அன்னை வேளாங்கண்ணி மாதா உருவச்சிலை வைக்கப்பட்ட கெபி உள்ளது. இதனை அப்பகுதி கிறிஸ்தவர்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று காலை கெபியில் முன்பு வேளாங்கண்ணி மாதா சிலை உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக மணியாச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு டி.எஸ்.பி. லோகேஷ்வரன், இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் மாதா சிலையை உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    இதற்கிடையே இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதியினர் கெபியின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்போது அவர்கள் கூறும்போது, ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கெபியில் உள்ள அனை வேளாங்கண்ணி மாதா சிலையை சிலர் அவமரியாதை செய்தனர். இந்நிலையில் தற்போது 2-வது முறையாக நடந்துள்ளது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? போலீசார் விசாரணை நடத்தி அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஆண்டு விழா செப்டம்பர் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    • இந்த பேராலயம் கீழை நாடுகளின் ‘லூர்து’ நகர் என்று அழைக்கப்படுகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். பேராலயத்தின்எதிரே வங்கக்கடல் உள்ளதால் வேளாங்கண்ணி சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.

    இந்த பேராலயம் கீழை நாடுகளின் 'லூர்து' நகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த பேராலயத்தில் ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் 29-ந்தேதிஆண்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு திருவிழா அடுத்த மாதம் (ஆகஸ்டு) 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த விழா செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பேராலயத்தில் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பேராலயத்தின் முகப்பு பகுதியில் மரக்கட்டைகள் மூலம் சாரம் அமைத்து தொழிலாளர்கள் வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • புனித உத்திரிய மாதா தேரினை கிறிஸ்தவ மீனவப் பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.
    • வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கிறார்கள். இந்த ஆலயமானது கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயம் வங்கக் கடலோரம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

    இவ்வாறு பல்வேறு சிறப்புகளை கொண்ட வேளாங்கண்ணி பேராலயத்தில் உத்திரிய மாதா ஆலயம் தனியாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டு திருவிழா மும்பை வசாய் பகுதி மீனவர்கள் சார்பாக நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று இரவு நடைபெற்றது. அப்போது பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தேரை புனிதம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து பேராலயத்தில் இருந்து புனித உத்திரிய மாதா தேரினை மும்பை வசாய் கிறிஸ்தவ மீனவப் பெண்கள் பாரம்பரிய முறைப்படி சுமந்து வந்தனர்.

    தேரானது வேளாங்கண்ணி கடற்கரைசாலை, ஆரியநாட்டு தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக பவனி வந்தது. அப்போது சாலையின் இருபுறமும் நின்றிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் புனித உத்திரியமாதா, செபஸ்தியார், மிக்கேல் ஆண்டவர் ஆகிய தேர்கள் மீது மலர்களை தூவி தங்களுடைய பிரார்த்தனையை நிறைவேற்றினர்.

    தேர் நிலையை வந்தடைந்ததும் வசாய் கிறிஸ்தவ மீனவர்கள் உற்சாக நடனமாடி மகிழ்ந்தனர். வேளாங்கண்ணி புனித உத்திரிய மாதா கோவில் ஆண்டு திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கொங்கனி மொழியில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு கொடியிறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.

    தேர்பவனியில் உதவிபங்கு தந்தையர்கள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் அருள் சகோதரர்கள், சகோதரிகள் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்தனர்.

    • சிறுவர் முதல் பெரியவர் வரை கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.
    • வேளாங்கண்ணியில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இங்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் வேளாங்கண்ணி கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயமானது வங்கக்கடற்கரையோரம் அமைந்திருப்பது மேலும் சிறப்பம்சமாகும்.

    இங்கு உத்திரிய மாதா ஆலயம் தனியாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டு திருவிழா மும்பை வசாய் பகுதி மீனவர்கள் சார்பாக நடத்தப்படுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆரோக்கிய அன்னை ஆலயத்தின் (பெரிய ஆலயம்) திருவிழாவுக்கு அடுத்து, உத்திரிய மாதா ஆலய ஆண்டு திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பொதுமக்கள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகின்றனர். இதனால் வேளாங்கண்ணி பேராலய வளாகம், கடைத்தெரு, கடற்கரை உள்ளிட்ட இடங்களில் எங்கு பார்த்தாலும் கூட்டம் அலைமோதியது.

    வெளியூர்களில் இருந்து வந்த பக்தர்கள் நேர்த்திக்கடனாக தென்னங்கன்றுகளை வாங்கி மாதாவுக்கு சமர்ப்பித்தனர்.

    மேலும் உடல்நலம் பாதுகாக்கவும், படித்த மாணவர்கள் வேலை வாய்ப்பை பெறுவதற்காகவும், பல்வேறு குறைகள் தீர பேராலய பகுதியில் அமைந்துள்ள சிலுவை பாதையில் முட்டியிட்டு சென்று பழைய மாதா கோவிலில் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    அதேபோல வேண்டுதல் நிறைவேற வேண்டி 6 அடி உயர மெழுகுவர்த்தியையும் கடைகளில் வாங்கி அதனை ஆலயத்தில் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்.

    நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து இருந்ததால் பகல் முழுவதும் வேளாங்கண்ணியில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. சிறுவர் முதல் பெரியவர் வரை கடலில் ஆனந்த குளியல் போட்டனர்.

    • இந்த ஆலயத்தில் உத்திரிய மாதா ஆலயம் தனியாக அமைந்துள்ளது.
    • தேர்பவனி 15-ந்தேதி நடைபெறுகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்துக்கு வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்கும் வேளாங்கண்ணி கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.

    இந்தியாவில் கட்டப்பட்டுள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த ஆலயமானது வங்கக் கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

    இந்த ஆலயத்தில் உத்திரிய மாதா ஆலயம் தனியாக அமைந்துள்ளது. இங்கு ஆண்டு திருவிழா மும்பை வசாய் பகுதி மீனவர்கள் சார்பாக நடத்தபடுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கொடி பவனி நடந்தது. வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து புறப்பட்ட பவனி கடற்கரை சாலை, ஆரியநாட்டுசாலை வழியாக ஆலயத்தை அடைந்தது. பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் கொடி புனிதம் செய்யப்பட்டு கொடிக்கம்பத்தில் ஏற்றிவைக்கபட்டது.

    இதில் பங்குதந்தை அற்புதராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட்தனராஜ், ஆண்டோஜேசுராஜ், அருள் சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் திரளானோர் கலந்துகொண்டு மாதாவை தரிசனம் செய்தனர். இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    • இந்த ஆலயமானது கீழை நாடுகளின் லூர்து நகர் என்றும் அழைக்கப்படுகிறது.
    • இந்த ஆலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு.

    வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது. இந்த ஆலயமானது கீழை நாடுகளின் லூர்து நகர் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஆலயம் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் பசிலிக்கா என்னும் சிறப்பு அந்தஸ்தையும் பெற்று விளங்குகிறது.

    இந்த ஆலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பு. இந்த பேராலயத்தில் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் மே மாதம் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து கடந்த மாதம் 7-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதா குளத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர் நடைபெற்றது.

    இதன் முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி மாதாகுளத்தில் நடைபெற்றது. இதில் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் பூஜை மேடையில் இருந்து கிரீடத்தை பவனியாக எடுத்துவரப்பட்டு அருகே உள்ள தேரில் உள்ள மாதாவின் சொரூபத்திற்கு தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் கிரீடத்தை வைத்து முடி சூட்டினார்.

    பின்னர் தேரை புனிதம்செய்து பவனியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருட் சகோதரர்கள், சகோதரிகள் கலந்து கொண்டனர்.

    • கிறிஸ்தவர்களின் தவக்காலம் பிப்ரவரி 22-ந் தேதி தொடங்கியது.
    • நேற்று பெரிய வியாழன் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ஏசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. புனித வெள்ளி, பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது ஏசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்ததையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் நிகழ்வாகும்.

    கிறிஸ்தவ வழிபாட்டில் முக்கியமான புனித வெள்ளி நாள் ஏசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) கொண்டாட்டத்துக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது.

    ஏசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்த புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள உலகப்பிரசித்திப்பெற்ற புனித ஆரோக்கியமாதா பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு ஆராதனை நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) விமரிசையாக நடக்கிறது.

    கிறிஸ்தவர்களின் நோன்பு காலமாக கருதப்படும் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி தொடங்கியது. கிறிஸ்தவர்களால் பரிசுத்த வாரம் என்று அழைக்கப்படும் தவக்காலத்தின் இறுதி வாரம் கடந்த 2-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) குருத்தோலை ஞாயிறு பவனியுடன் தொடங்கியது.

    அதனைத்தொடர்ந்து நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் பெரிய வியாழன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேராலய அதிபர் இருதயராஜ் சீடர்களுக்கு புனித நீரால் பாதம் கழுவும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி என பல்வேறு மொழிகளில் திருப்பலி நடைபெற்றது.

    இன்று புனித வெள்ளியை முன்னிட்டு பேராலயத்தில் மாலை 5.30 மணிக்கு இறை வார்த்தை வழிபாடு, திருச்சிலுவை ஆராதனை, சிலுவையை முத்தி செய்தல், திவ்ய நற்கருணை, சிலுவை பாதை மற்றும் ஏசுவின் திருவுருவம் சிலுவையில் இருந்து இறக்கப்பட்டு பவனியாக எடுத்து செல்லுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    இதில் கலந்து கொள்வதற்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.

    • தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.
    • மழை பெய்ததால் பலர் குடைபிடித்தபடி சென்றனர்.

    கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக கடைபிடிக்கபடுகிறது.

    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு இறப்பதற்கு முன்னதாக ஜெருசலேம் நகரின் வீதிகளின் வழியாக அவரை ஒரு கழுதையின் மேல் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது வழி நெடுகிலும் மக்கள் ஒலிவ இலைகளை கையில் பிடித்து ஓசன்னா பாடல்களை பாடினர். இந்த நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் குருத்தோலை ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது.

    உலக புகழ் பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று காலை குருத்தோலை பவனியுடன் தொடங்கியது.

    இதையொட்டி பேராலயம் முன்பு சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து குருத்தோலைகளை கையில் ஏந்திய பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தனர்.

    அப்போது மழை பெய்ததால் பலர் குடைபிடித்தபடி சென்றனர்.

    இன்று முழுவதும் பேராலயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெற்றது. இதில் பங்குத்தந்தை அற்புதராஜ் பொருளாளர் உலகநாதன், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட் தனராஜ் , ஆண்டோஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பிப்ரவரி 22-ந் தேதி தவக்காலம் தொடங்கியது.
    • தவக்காலம் 4-வது வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் கீழை நாடுகளின் "லூர்து" நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது.

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.

    கடந்த மாதம்(பிப்ரவரி) 22-ந் தேதி தவக்காலம் தொடங்கியது. தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் ஆகும். இந்த தவக்காலத்தில் இறைச்சி உண்ணாமலும், அடுத்தவர்களிடம் அன்பாகவும் இருப்பார்கள்.

    தவக்காலம் 4-வது வாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் நேற்று முன்தினம் சிலுவைப்பாதை ஊர்வலம் நடந்தது. அப்போது ஏசு, சிலுவையில் அறையும்போது 14 நிலையில் பட்டபாடுகளை பாதிரியார்கள் எடுத்து கூறினர்.

    ஊர்வலம் பேராலய மேல் கோவிலில் இருந்து புறப்பட்டு மாதா குளம் அருகே நிறைவடைந்தது. இந்த ஊர்வலத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். பின்னர் பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    இதில் பங்குத் தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவிபங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் அருள் சகோதரர்கள், அருள் சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் ஆகும்.
    • திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாக சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக தலமாக விளங்குகிறது.

    இது கீழை நாடுகளின் "லூர்து " நகர் என்ற பெருமையுடன் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலய கட்டிட கலைக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய " பசிலிக்கா" என்ற பிரம்மாண்ட கட்டிட அமைப்பில் இந்தியாவில் கட்டப்பட்டுள்ள 5 கிறிஸ்தவ ஆலயங்களில் வேளாங்கண்ணி பேராலயமும் ஒன்று என்பது சிறப்பாகும். பேராலயத்தின் அருகிலேயே வங்கக்கடல் அமைந்துள்ளது மேலும் சிறப்பு சேர்ப்பதாக உள்ளது.

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவு கூரும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது.

    தவக்காலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் ஆகும். இந்த தவக்காலத்தின் போது புலால் உண்ணாமலும், அடுத்தவர்களிடம் அன்பாகவும் பிறருக்கு உதவி செய்வதன் மூலம் நல்ல பண்புகளை வளர்த்துக்கொண்டு நல்ல ஒழுக்கத்தை கடைபிடிக்க இந்த தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது.

    வேளாங்கண்ணி பேராலயத்தில் சாம்பல் புதனையொட்டி நேற்று காலை 6 மணிக்கு பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. திருப்பலியின் போது கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின்போது பயன்படுத்தப்பட்ட குருத்தோலைகளை எரித்து உருவாக்கப்பட்ட சாம்பலை கிறிஸ்தவர்கள் நெற்றியில் சிலுவை அடையாளமாக பங்கு தந்தையர்கள் பூசி ஆசிர்வாதம் செய்தனர்.

    அதனை தொடர்ந்து ஆலயத்தில் திருப்பலி நடைபெற்றது. இதில் ஆலய அதிபர் இருதயராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர் டேவிட் தன்ராஜ் மற்றும் உதவி பங்கு தந்தையர்கள், அருட்சகோதரிகள், கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

    • இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.
    • கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்திபெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருகை தருவார்கள்.

    இங்கு ஆண்டுதோறும் இயேசு பிறந்த தினமான கிறிஸ்துமஸ் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பேராலயம் சாா்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டை வரவேற்கும் வகையில் வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் பிரம்மாண்ட மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு வண்ண மின்விளக்கு அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    வேளாங்கண்ணி சுற்றுலா வந்த பயணிகள் மின்விளக்கு அலங்காரத்துடன் செல்பி எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு விழாவையொட்டி வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயத்துக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதால் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    ×