search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடுகள் அகற்றம்"

    • 4 வீடுகள் நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது.
    • வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருகின்றனர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வேட்டைகாரன் கோவில் வாய்க்கால் மேடு பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    அதேபோன்று அதன் அருகிலேயே 50 ஆண்டுகளுக்கும் மேலாக 4 வீடுகள் நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தது. ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை காலி செய்வதோடு, 2 ஏக்கர் நிலத்தை மீட்கவும் கடந்த சில ஆண்டுகளாக நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் கடுமையான முயற்சி எடுத்து வந்தனர்.

    இந்நிலையில் நீர்வழி நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, வருவாய்த்துறையினர் உதவியுடன் நிலம் அளவீடு செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்பட்டது.

    வீடுகளை காலி செய்து கொள்ள பல முறை நோட்டீஸ் அனுப்பியும், வீடுகளை காலி செய்து கொள்ள முன்வராத நிலையில் கோபி தாசில்தார் உத்தரசாமி முன்னிலையில் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் போலீசார் பாதுகாப்புடன் 4 வீடுகளிலும் இருந்த பொருட்களை வெளியேற்றி விட்டு, மின் இணைப்பை துண்டித்து விட்டு பொக்லைன் எந்திரம் உதவியுடன் 4 வீடுகளையும் இடித்து அகற்றினர்.

    அதே போன்று 2 ஏக்கர் நிலத்தையும் அளவீடு செய்து, அங்கும் பொக்லைன் மூலமாக ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்டனர். மேலும் கோபி பகுதியில் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு வருகின்றனர்.

    • வீடுகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
    • 2 பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை இடிக்க தொடங்கினர்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் குப்பன் குளம் பகுதியில் மாநகராட்சி சாலையை ஆக்கிரமித்து 7 வீடுகள் கட்டப்பட்டு இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்த நிலையில் ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகளை அகற்ற வேண்டும் என மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணை யாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நகரமைப்பு அலுவலர் முரளி, நகரமைப்பு ஆய்வாளர் அருள் செல்வன் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கு முன்னதாக அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க ஏராளமான போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனை தொடர்ந்து 2 பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு செய்த வீடுகளை இடிக்க தொடங்கினர். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு முன்னதாக 7 வீடுகளில் இருந்த அனைத்து பொருட்களையும் அதன் உரிமையாளர்கள் பாதுகாப்பாக எடுத்துச் சென்று இருந்தனர்.

    இந்த நிலையில் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட வீடுகளை எடுக்கிறோம் என திட்டவட்டமாக தெரிவித்து தங்கள் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து காலை முதல் வீடுகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. ஏராளமான பொதுமக்கள் மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் திரண்டு இருந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

    • ஈரோடு மரப்பாலம் பகுதியில் நீர் வழி பாதையில் ஓடை அருகே 17 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்தன.
    • இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மரப்பாலம் பகுதியில் நீர் வழி பாதையில் ஓடை அருகே 17 வீடுகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்தன. இந்த ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிடப்பட்டது.

    இதற்காக மாநகராட்சி சார்பில் சம்பந்தப்பட்ட வீடுகளை சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் இன்று ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணி நடந்தது. மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார், உதவி செயற்பொறியாளர் சண்முகவடிவு, இளநிலை பொறியாளர் செந்தாமரை ஆகியோர் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வீடுகளை இடிப்பதற்கு முன் வீடுகளை சேர்ந்தவர்கள் தங்களது உடைமைகளை எடுத்து சென்றனர். 5 பொக்லைன் எந்திரன் மூலம் வீடுகளை அகற்றும் பணி நடந்து வருகிறது.

    • போலீசார் பாதுகாப்பு அளிக்க மனு
    • கலெக்டர், எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, தாசில்தார் நேரில் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் கோட்டை பின்புறம் உள்ள கன்சால்பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெரு பகுதிகளில் கால்வாய் சாலை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் மழைக்காலங்களில் நிக்கல்சன் கால்வாயில் பெருக்கெடுத்து வரும் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்படுகிறது.

    இதனால் பொதுமக்கள் ஆண்டுதோறும் அவதி அடைந்து வருகின்றனர். இதனை தடுக்க வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.

    மாநகராட்சி பகுதிகளில் கால்வாய் ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

    கன்சால் பேட்டையில் 46 குடும்பத்தினர் சாலை ஆக்கிரமிப்பில் வீடு கட்டி இருப்பது தெரியவந்தது. அவர்களுக்கு அப்துல்லாபுரத்தில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து கன்சால்ப்பேட்டை பகுதியில் குடியிருந்து வருகின்றனர்.

    கடந்த மாதம் வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ, மேயர் சுஜாதா, உதவி கலெக்டர் பூங்கொடி, தாசில்தார் செந்தில் ஆகியோர் கன்சால் பேட்டையில் வெள்ளம் பாதிக்கப்படும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    அப்போது அங்குள்ள 46 குடும்பத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.

    இந்த நிலையில் நாளை கன்சால்பேட்டையில் உள்ள 46 வீடுகளையும் இடித்து அகற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி சார்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

    நாளை காலை 10 மணிக்கு கன்சால் பேட்டையில் உள்ள 46 வீடுகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மேல்மலையனூர் அருகே ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் அகற்றப்பட்டதால் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • உடனடியாக அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருகே செவலபுரை கிராமத்தில் அரசுக்கு சொந்தமான குளத்துக்கு அருகில் இருந்த இடங்களில் 83 வீடுகள் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாகவும், இதை உடனடியாக அகற்றவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதை விசாரித்த உயர்நீதிமன்றம் உடனடியாக ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிட்டது. அதன்படி கடந்த மே மாதம் 5-ந் தேதி வருவாய் மற்றும் ஊரக உள்ளாட்சி ஆகிய துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்தனர். அப்போது 10 வீடுகள் இடிக்கப்பட்ட நிலையில் தங்கள் குழந்தைகளுக்கு தேர்வு நெருங்கி வருவதால் அதுவரையில் தங்களுக்கு கால அவகாசம் வழங்கும்படி கேட்டுக் கொண்டனர். அதன்படி காலஅவகாசம் வழங்கப்பட்டது.

    இந்த கால அவகாசம் மு டிவடைந்துவிட்டதால் தாசில்தார் கோவர்த்தனன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுப்பிரமணியன், சிலம்புச் செல்வன் ஆகியோர் பொதுமக்களிடம் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தினர். ஆனால் அவர்கள் மறுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் முருகன் தலைமையில் 10 மணிக்கு சாலைமறியல் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த திண்டிவனம் சப்-கலெக்டர் அமீத் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் உயர்நீதிமன்ற தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்.எனவே ஆக்கிரமிப்புகளை நீங்களாகவே அகற்றிக்கொள்ளுங்கள். உங்கள் நிலை குறித்து மேலிடத்தில் தெரிவிக்கிறேன் என்று கூறியவுடன் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பின்பு வீடுகளிருந்த பொருட்களை அதன் உரிமையாளர்கள் எடுத்தவுடன் பொக்லைன் எந்திரம் மூலம் வீடுகள் கடைகள் என 77ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க 100-க்கும் மேற்பட்ட போலீசார், 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    ×