search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷம் குடித்த"

    • சரவணன் (வயது 40). இவர் சென்னை ஆர். கே. நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார்.
    • நேற்று கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் சென்னை ஆர். கே. நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சரவணன் 3 நாட்கள் விடுமுறையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சரவணன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சரவிஷம் குடித்த போலீஸ் ஏட்டுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    • மனமுடைந்த லட்சுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை, மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (53). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மகன் பந்தல் போடும் வேலைக்கு சென்று வருகிறார். மகள் 11-ம் வகுப்பு முடித்து விட்டு கபடி விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை லட்சுமி கபடி பயிற்சிக்கு சென்று வந்த மகளிடம் இனி கபடி பயிற்சிக்கு செல்லவேண்டாம் என கண்டித்ததாக தெரிகிறது.

    அதற்கு அவரது மகன் தன் தாய் லட்சுமியிடம், தங்கை விருப்பப்படி கபடி பயிற்சிக்கு போகட்டும் என கூறினார்.

    இதனால் மனமுடைந்த லட்சுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகம் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்துள்ளார்.
    • வீட்டின் பின்பகுதியில் திடீரென அவர் வாந்தி எடுத்து மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை கரண்டிபாளையம், பெரிய காடு பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவருக்கு செல்லம்மாள் என்ற மனைவியும், அரவிந்த் என்ற மகனும், ஹேமப்பிரியா என்ற மகளும் உள்ளனர்.

    மகன் அரவிந்த் திருமணமாகி கவுந்தப்பாடியில் உள்ள மாமனார் வீட்டில் உள்ளார். மகள் ஹேமப்பிரியா திருமணம் ஆகாமல் ஆறுமுகத்துடன் குடியிருந்து வருகிறார். ஆறுமுகமும் அவரது மனைவியும் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர்.

    ஆறுமுகம் கரண்டி பாளையம் பகுதியில் உள்ள ஒருவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு நீண்ட வருடங்களாக குடிப்பழக்கம் இருந்துள்ளது.

    தினமும் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வந்து குடும்பத்தாருடன் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

    சம்பவத்தன்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஆறுமுகம் வழக்கம்போல் குடித்துவிட்டு வந்துள்ளார். சிறிது நேரம் கழித்து வீட்டின் பின்பகுதியில் திடீரென அவர் வாந்தி எடுத்து மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு கொண்டிருந்தார்.

    உடனடியாக அவரது மனைவியும், மகளும் அவரை சென்று பார்த்த போது அங்கு செடிகளுக்கு அடிக்கும் பூச்சி மருந்தின் வாடை அடித்துள்ளது.

    மேலும் அவரது அருகில் பூச்சி மருந்து (விஷம்) பாட்டில் ஒன்று கிடந்தது. மயங்கி இருந்த அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆறுமுகம் இறந்து விட்டதாக ெதரிவித்தனர்.

    பின்னர் செல்லம்மாள் பெருந்துறை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிர–மணியம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    ×