search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விஷம் குடித்த பெண் சாவு
    X

    விஷம் குடித்த பெண் சாவு

    • மனமுடைந்த லட்சுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள எலவமலை, மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி (53). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    மகன் பந்தல் போடும் வேலைக்கு சென்று வருகிறார். மகள் 11-ம் வகுப்பு முடித்து விட்டு கபடி விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை லட்சுமி கபடி பயிற்சிக்கு சென்று வந்த மகளிடம் இனி கபடி பயிற்சிக்கு செல்லவேண்டாம் என கண்டித்ததாக தெரிகிறது.

    அதற்கு அவரது மகன் தன் தாய் லட்சுமியிடம், தங்கை விருப்பப்படி கபடி பயிற்சிக்கு போகட்டும் என கூறினார்.

    இதனால் மனமுடைந்த லட்சுமி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டதாக கூறியுள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×