search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவேகானந்தர் நினைவு மண்டபம்"

    • அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.
    • கடல் நீர் மட்டும் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 10 மணிக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 12 மற்றும் 14 ஆகிய தேதிகளில் பள்ளிகூடங்கள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அடியோடு குறைந்தது. இதனால் கன்னியாகுமரி கடற்கரை பகுதி கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்டது.

    இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மக்கள் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு படையெடுத்து வந்த வண்ணமாக உள்ளனர். திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர். கன்னியாகுமரி கடலில் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரியில் உள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி முஸ்லிம் தெருவில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்று தொழுகை நடத்தினர்.

    கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் கடல் நீர் மட்டும் தாழ்வு காரணமாக 2 மணி நேரம் தாமதமாக விவேகானந்தர் மண்டபத்துக்கு காலை 10 மணிக்கு பிறகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் படகில் பயணம் செய்து விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர். மேலும் கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுதுபோக்கு பூங்கா, விவேகானந்தபுரத்தில் உள்ள ராமாயண தரிசன சித்திரக்கண்காட்சி கூடம், பாரதமாதாகோவில் கன்னியாகுமரி சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சியகம், உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

    வட்ட கோட்டைக்கு சுற்றுலா பயணிகள் உல்லாச படகு சவாரி செய்தனர். மாலை நேரங்களில் கடற்கரையில் இதமான குளிர் காற்று வீசுகிறது. இதனால் கோடை வெப்பத்தை தணிக்க கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து சென்ற வண்ணமாக உள்ளனர். இதில் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமிகுதியினால் கடலில் ஆனந்த குளியல் போடுகின்றனர். இதனால் விடுமுறை நாளான இன்று சுற்றுலா தலங்கள் களைகட்டி உள்ளது. இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்கரை பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும், தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    • விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது.
    • 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    அமாவாசை தினம் என்பதால் கன்னியாகுமரியில் ஒரு புறம் கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது.

    இன்னொரு புறம் கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்க கடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதே வேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் கடல் கொந்தளிப்புடனும் சீற்றமாகவும் காணப்பட்டது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை.

    இதற்கிடையில் காலை 9 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

    அதன்பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். கன்னியாகுமரி முக்கடல் சங்கத்தில் கடல்சீற்றம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்க சுற்றுலா போலீசார் தடை விதித்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது.

    இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி ஆக்ரோஷமாக வீசின. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் பெரும்பாலான கட்டுமரம் மற்றும் வள்ளம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

    • கடந்த 7 மாதங்களாக உல்லாச படகு சவாரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
    • கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் இன்று முதல் கடலில் உல்லாச படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டு உள்ளது.

    இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இவற்றை பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு வசதியாக தமிழக அரசு நிறுவனமான பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு போக்குவரத்தை நடத்தி வருகிறது.

    இதற்காக பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. இந்த படகுகள் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளி இன்றி தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தாமிரபரணி, திருவள்ளுவர் ஆகிய பெயர்களை தாங்கிய 2 அதிநவீன சொகுசு படகுகளை சுற்றுலா துறை வாங்கி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு வழங்கியது. இதில் 150 இருக்கை வசதிகள் கொண்ட தாமிரபரணி படகில் 75 இருக்கைகள் "குளுகுளு" வசதி கொண்டதாகும்.

    அதேபோல 150 இருக்கைகள் கொண்ட திருவள்ளுவர் படகில் 19 இருக்கைகள் "குளுகுளு" வசதி கொண்டதாகும். மீதி உள்ள 131 இருக்கைகள் சாதாரண வசதி கொண்டதாகும். இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளும் கோவாவில் வடிவமைக்கப்பட்டு கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது.

    கன்னியாகுமரி கடலின் தன்மை அடிக்கடி மாறுவதால் இந்த 2 அதிநவீன படகுகளும் விவேகானந்த மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படாமல் கடல் உப்பு காற்றினால் துருப்பிடித்து பாழாகும் நிலையில் படகு துறையில் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி கிடந்தது. இந்த 2 அதிநவீன சொகுசு படகுகளையும் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரையில் கடலில் உல்லாச படகு சவாரி நடத்த பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக பொது மேலாளர்கள் கணேசன் (நிதி), கேப்டன் தியாகராஜன் (இயக்கம்) ஆகியோர் கன்னியாகுமரி படகு துறையை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ஆனால் கடந்த 7 மாதங்களாக இந்த உல்லாச படகு சவாரி திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டை வரை சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடலில் உல்லாச படகு சவாரி தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறைகளில் அமர்ந்து பயணம் செய்வதற்கு நபர் ஒன்றுக்கு தலா ரூ.450 வீதமும் சாதாரண அறைகளில் அமர்ந்து பயணம் செய்வதற்கு நபர் ஒன்றுக்கு தலா ரூ.350 வீதமும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த உல்லாச படகு சவாரியை தமிழக பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு இன்று காலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், தி.மு.க. மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுரேஷ்ராஜன், உதவி கலெக்டர் (பயிற்சி) குணால் யாதவ், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு, மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் பூதலிங்கம், கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, கொட்டாரம் பேரூர் செயலாளர் வைகுண்ட பெருமாள், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) கணேசன், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக துணை பொது மேலாளர் (இயக்கம்) தியாகராஜன், மேலாளர் செல்லப்பா, துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணை தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் நடராஜன், மாநில துறைமுக அதிகாரி கேப்டன் அன்பரசன், துறைமுக பாதுகாப்பு அதிகாரி தவமணி, உதவி துறைமுக பாதுகாப்பு அதிகாரி ராஜேந்திரன், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக மேலாளர் உதயகுமார், நாகர்கோவில் ஆர்.டி.ஓ.சேதுராமலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அமைச்சர் எ.வ.வேலு நாளை அடிக்கல் நாட்டுகிறார்
    • விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

    கன்னியாகுமரி :

    நாட்டின் தென்கோடி யான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    அவர்கள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

    இயற்கையாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளுவர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப்படியான பாறைகளும் உள்ளன. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்குவரத்து திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்படுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே பாலம் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இதனை தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி ரூ.37 கோடி செலவில் அமைய உள்ள கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்ப டுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது தாங்கள் நடந்துசெல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடு களில் அமைக்கப்பட்டு உள்ளது போல அமைக்கப்பட உள்ளது.

    இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி கடந்த ஜூன் மாதம் நடந்தது. அப்போது விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய 2 பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி.க்கு அனுப்பப் பட்டது. அங்கு பாறைகளின் ஸ்திரத்தன்மையை ஆய்வு செய்யும் பணி நடந்தது. இந்த ஆய்வுகளின் முடிவுகளை பொறுத்து விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்துக்குள் பாலப்பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

    இந்த நிலையில் கண்ணாடி கூண்டு பாலப்பணி தொடக்கத்திற் கான அடிக்கல் நாட்டு விழா நாளை (24-ந்தேதி) நடக்கிறது. நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு விழாவில் கலந்துகொண்டு அடிக்கல் நாட்ட உள்ளார். விழாவில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர். மேயர் மகேஷ் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    விழாவில் பங்கேற்ப தற்காக அமைச்சர் எ.வ. வேலு இன்று (செவ்வாய்க் கிழமை) மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார். அவர் குமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்ட பணிகளை ஆய்வு செய்ய உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

    • பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
    • விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சுமார் 30 நிமிடங்கள் சுற்றிப்பார்க்கிறார்.

    கன்னியாகுமரி:

    ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வருகிற 21-ந் தேதி கன்னியாகுமரி வருகிறார்.

    கன்னியாகுமரி வரும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அன்று பகல் 12.30 மணிக்கு சுற்றி பார்க்கிறார். இதற்காக அவர் தனிப்படகில் அங்கு செல்கிறார்.

    விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் சுமார் 30 நிமிடங்கள் சுற்றிப்பார்க்கிறார். அதன்பின்பு அவர் கன்னியாகுமரி சுற்றுலா மாளிகைக்கு செல்கிறார்.

    சுற்றுலா மாளிகையில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கும் அவர், மாலை 3 மணிக்கு கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திராவுக்கு செல்கிறார். அங்கு ராமாயண தரிசன சித்திரகூடத்தை பார்வையிடுகிறார்.

    அதன்பின்பு அவர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு தரிசனம் முடிந்த பின்னர் அவர் டெல்லி திரும்புகிறார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகையையொட்டி கன்னியாகுமரியில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    மேலும் கன்னியாகுமரி சுற்றுலா மாளிகையிலும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

    • கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.
    • பாலத்தின் மீது நடந்து செல்லும் போது நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக அமைக்கப்பட உள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி வரும் சுற்றுலாப் பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்ட பம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் பார்வை யிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்தநிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையேகண்ணாடி கூண்டுபாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.

    அதன்படி ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணியினை சென்னையைச் சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் டெண்டர் எடுத்துஉள்ளது. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது. இந்தப் பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல் அலையை ரசிக்கும் வண்ணமாக வெளிநாடுகளில் அமைக்கப்பட்டுஉள்ளது போல இந்த கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கப் பட உள்ளது.இதற்கான முதற்கட்ட ஆய்வு பணி இன்றுகாலை தொடங்கியது.விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை ஆகிய இரண்டு பாறைகளின் மாதிரிகளை சேகரித்து சென்னை ஐ.ஐ.டி. க்கு அனுப்பி பாறைகளின் சிறத்தன்மையை ஆய்வு செய்யும் பணி தொடங்கியது. இந்த ஆய்வுகளின் முடிவுகள் வந்த பிறகு விரைவில் பாலத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கும் என்றும் ஒரு வருடத்துக்குள் பாலப் பணிகள் நிறைவடையும் என்றும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • மத்திய உள்துறை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நிஷித் பிரமானிக்
    • விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்தார்.

    கன்னியாகுமரி:

    மத்திய உள்துறை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி நிஷித் பிரமானிக் நேற்று கார் மூலம் கன்னியாகுமரி வந்தார். அவரை குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மற்றும் குமரி மாவட்ட பாரதிய ஜனதா பொருளாதார பிரிவு தலைவர் சி. எஸ். சுபாஷ் உள்பட பலர் வரவேற்றனர்.

    பின்னர் அவர் அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இன்று காலை 9 மணிக்கு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு படகில் சென்றார். படகு துறைக்கு வந்த அவரை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக கன்னியாகுமரி படகு துறை மேலாளர் செல்லப்பா, துணை மேலாளர்கள் பழனி, ராஜசேகரன் ஆகியோர் வரவேற்றனர். அதன் பிறகு அவர் விவேகானந்த மண்டபத்துக்கு சென்றார். அங்கு வந்த அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர். சி. தாணு, பாறை நினைவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் ஆகியோர் வரவேற்று அவருக்கு சுற்றி காண்பித்தனர்.

    மத்திய மந்திரி விவேகானந்தர் மண்டபத்தில் உள்ள ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் பகவதி அம்மனின் கால் பாதம் பதிந்து இருந்த இடத்தை தரிசித்தார். அதன் பிறகு மெயின் மண்டபமான சபா மண்டபத்தில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ண பரமஹம்சரின் உருவப்படம் மற்றும் அன்னை சாரதா தேவி ஆகியோரின் உருவப்படம்முன்பு நின்று வணங்கி மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அங்குள்ள சுவாமி விவேகானந்தரின் 7 அடி உயர முழு உருவ வெண்கல சிலை முன்பு நின்று வணங்கி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அங்கு உள்ள தியான மண்டபத்தில் தரையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார்.

    அவருடன் குமரி மாவட்ட பாரதிய ஜனதா பொருளாதார பிரிவு தலைவரும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலருமான சுபாஷ் உள்பட பாரதிய ஜனதா நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • 6 கோடியே 79 லட்சத்து 94 ஆயிரத்து 120 பேர் பார்வையிட்டு உள்ளனர்
    • 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரியால் திறந்து வைக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்து உள்ள பாறையில் சுவாமி விவே கானந்தர் தவமிருந்ததை நினைவு கூறும் வகையில் அவரது பெயரால் நினைவு மண்டபம் கட்ட விவேகானந்த கேந்திர நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி 1964-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டும் பணி தொடங்கியது.

    6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த பணி 1970-ம் ஆண்டு நிறைவு பெற்றது. இதைத்தொடர்ந்து 1970-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2-ந் தேதி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரியால் திறந்து வைக்கப்பட்டது.

    அன்று முதல் இந்த மண்டபத்தை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள். இந்த மண்ட பம் நிறுவி 51 ஆண்டுகள் நிறைவடைந்து 52-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதையொட்டி சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் நிறுவிய 52-வது ஆண்டு விழா விவே கானந்தர் பாறையில் நேற்று முன்தினம் கொண்டாட ப்பட்டது.

    இதையொட்டி நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்தை பார்வை யிடுவதற்காக படகில் முதன் முதலாக வந்து இறங்கிய ஜார்க்கண்ட மாநிலம் ஜாம்செட்பூைர சேர்ந்த சுற்றுலாப் பயணியான பாசு டியோ கவுர் என்பவருக்கு விவேகானந்தா கேந்திரா நிறுவனம் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது.

    இந்த நினைவு பரிசை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி. தாணு மற்றும் விவேகா னந்தர் பாறை நினவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ் ஆகியோர்அவரை வாழ்த்தி வரவேற்று நினைவுபரிசுகள்வழங்கி கவுரவித்தார்கள்.

    இவர் வந்து பார்வையிட்டதன் மூலம் கடந்த 52 வருடங்களில் நேற்று முன்தினம் வரை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 6 கோடியே 79 லட்சத்து 94 ஆயிரத்து120பேர் பார்வையிட்டுஉள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

    ×