search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விற்பனைக்கு வைத்திருந்த"

    • இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர்.
    • 15 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ 3,900 பறிமுதல் செய்யப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

    அப்போது கோபி அடுத்த அக்கரை கொடி வேரி, காமராஜ் புறம் பகுதியில் ஒரு கடையில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ் பாக்கெட், விமல் பாக்கு, கூலிப் ஆகியவற்றை விற்பனைக்கு வைத்தி ருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிர மணியம் (50) என்பவரை கைது செய்தனர். கடையில் இருந்து ஒரு கிலோ 266 கிராம் போதைப் பொரு ட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதேப்போல் சத்திய மங்கலம் சப்- இன்ஸ்பெ க்டர் விஜயன் சத்தி-புது குய்யனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தபோது ஒருவர் சந்தேக ப்படும் படி நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார்(23) என்பதும் சட்ட விரோதமாக மது விற்பனை யில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

    இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ 3,900 பறிமுதல் செய்யப்பட்டது. 

    • ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • ஒரு கிலோ 700 கிராம் மதிப்பிலான புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    ஈரோடு:

    தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வன் தலைமையிலான போலீசார் ஆசனூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த பகுதியில் ஒருவர் கையில் கட்டை பையுடன் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்தார். போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் திருப்பூர் மாவட்டம் காளிபாளையம் பகுதியை சேர்ந்த மூர்த்தி (49) என்பது தெரிய வந்தது.

    அவரது கட்டப்பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், புகையிலை, பான் மசாலா ஆகியவை இருப்பது தெரிய வந்தது.

    மொத்தம் ஒரு கிலோ 919 கிராம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.1440 ஆகும். இது குறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.

    இதேப்போல் ஆசனூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் தலைமையிலான போலீசார் ஆசனூர் அரேப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த பகுதியில் ஒரு நபர் கையில் பச்சை கலர் கட்டை பையுடன் சந்தேக படும்படியாக நின்று கொண்டிருந்தார்.

    போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்த போது அவர் கோவை மாவட்டம் மோப்பெரிபாளையம், தோட்ட சாலை கணபதி பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிர மணியம் (46) என்பது தெரியவந்தது.

    அவரது கட்டப்பையை சோதனை செய்த போது அதில் அரசால் தடை செய்ய ப்பட்ட ஹான்ஸ், புகை யிலை பொருட்கள் பான் மசாலா இருப்பது தெரிய வந்தது.

    மொத்தம் ஒரு கிலோ 700 கிராம் மதிப்பிலான புகை யிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு ரூ.1440 ஆகும். இதுகுறித்து ஆசனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலசுப்பிர மணியத்தை கைது செய்தனர். 

    • சாக்கு பையில் விற்பனைக்காக 480 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
    • இதனையடுத்து குட்கா போதை பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குயராமை கைது செய்தனர்.

    டி.என்.பாளையம்:

    பங்களாப்புதூர் பிரிவு பஸ் நிறுத்தம் அருகே பங்களாப்புதூர் போலீசார் ரகசிய தகவல் பேரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அங்கே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியுள்ளார்.

    போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலம் ஜோலார் பகுதியை சேர்ந்த குயராம் (22) என்பதும், அவர் கையில் வெள்ளை நிற பாலிதீன் சாக்கு பையில் விற்பனைக்காக 480 கிராம் எடையுள்ள ரூ.1,920 மதிப்புள்ள போதை தரக்கூடிய தடைசெய்யப்பட்ட 480 குட்கா பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து குட்கா போதை பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் குயராமை கைது செய்தனர்.

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அப்போது ஒத்தகுதிரை பகுதியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் கோபி செட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மாணிக்கம் மற்றும் போலீ சார் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

    இதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீ சார் அந்த மளிகை கடையில் இருந்த 2.42 கிலோ எடை உள்ள 11 பாக்கெட் புகை யிலை பொருட்களை பறி முதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் (38) என்ப வரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துறை இயக்குனர் ஜெயராமன் தலைமையிலான அதிகாரிகள், சத்தியமங்கலம், நம்பியூர் பகுதியில் கடந்த இரு நாட்களாக விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர்.
    • விவசாயிகளுக்கு வழங்கப்படும் விற்பனை ரசீதுகளில் பயிர், ரகம் நிலை, குவியல் எண், காலாவதி தேதி, விற்பனை அளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு விவசாயிகள் கையெழுத்து பெற வேண்டும்.

    ஈரோடு:-

    ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துறை இயக்குனர் ஜெயராமன் தலைமையிலான அதிகாரிகள், சத்தியமங்கலம், நம்பியூர் பகுதியில் கடந்த இரு நாட்களாக விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். முறையான ஆவணங்கள் இன்றி, விற்பனை செய்த, 17,900 ரூபாய் மதிப்பிலான, 42 கிலோ எடையுள்ள இரண்டு விதை குவியல்கள் விற்பனை செய்ய தடை விதித்தனர்.

    இதுகுறித்து துணை இயக்குனர் ஜெயராமன் கூறியதாவது:- ஆடி பட்டத்தை முன்னிட்டு சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் வட்டாரங்களில் காய்கறிகள், மக்காசோளம் போன்றவை பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

    இதனால், அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்க ளில் ஆய்வு செய்யப்பட்டது.

    விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல், பதிவு சான்றிதழ், முளைப்பு திறன் அறிக்கை, வெளி மாநிலங்களில் வாங்கியமைக்கான சான்று பெற்ற நெல் விதைகளுக்கான படிவம்–2 போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    அப்போது முறையான ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 17,900 ரூபாய் மதிப்பிலான, 42 கிலோ எடை உள்ள இரண்டு விதை குவியல்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

    விதை விற்பனை நிலையங்களில் விதை இருப்பு மற்றும் விலை விபரங்களை பயிர் வாரியாகவும், ரகம் வாரியாகவும் எழுதப்பட்டு விவசாயிகள் பார்வையில் படும்படி தகவல் பலகை இருக்க வேண்டும்.

    விவசாயிகளுக்கு வழங்கப்படும் விற்பனை ரசீதுகளில் பயிர், ரகம் நிலை, குவியல் எண், காலாவதி தேதி, விற்பனை அளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு விவசாயிகள் கையெழுத்து பெற வேண்டும். இதை பின்பற்றாத விற்பனையாளர்கள் மீது விதை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×