search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர் கைது
    X

    புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த வாலிபர் கைது

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • அப்போது ஒத்தகுதிரை பகுதியில் ஒரு கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் பகுதியில் தடை செய்ய ப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப் படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதன் பேரில் கோபி செட்டிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ மாணிக்கம் மற்றும் போலீ சார் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தக்குதிரை பகுதியில் சோதனை செய்து விசாரணை நடத்தினர்.

    இதை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்து இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து போலீ சார் அந்த மளிகை கடையில் இருந்த 2.42 கிலோ எடை உள்ள 11 பாக்கெட் புகை யிலை பொருட்களை பறி முதல் செய்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன் (38) என்ப வரை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×