விற்பனைக்கு வைத்திருந்த 2 விதை குவியலுக்கு தடை

ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துறை இயக்குனர் ஜெயராமன் தலைமையிலான அதிகாரிகள், சத்தியமங்கலம், நம்பியூர் பகுதியில் கடந்த இரு நாட்களாக விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர்.விவசாயிகளுக்கு வழங்கப்படும் விற்பனை ரசீதுகளில் பயிர், ரகம் நிலை, குவியல் எண், காலாவதி தேதி, விற்பனை அளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு விவசாயிகள் கையெழுத்து பெற வேண்டும்.
விற்பனைக்கு வைத்திருந்த 2 விதை குவியலுக்கு தடை
Published on

ஈரோடு:-

ஈரோடு மாவட்ட விதை ஆய்வு துறை இயக்குனர் ஜெயராமன் தலைமையிலான அதிகாரிகள், சத்தியமங்கலம், நம்பியூர் பகுதியில் கடந்த இரு நாட்களாக விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். முறையான ஆவணங்கள் இன்றி, விற்பனை செய்த, 17,900 ரூபாய் மதிப்பிலான, 42 கிலோ எடையுள்ள இரண்டு விதை குவியல்கள் விற்பனை செய்ய தடை விதித்தனர்.

இதுகுறித்து துணை இயக்குனர் ஜெயராமன் கூறியதாவது:- ஆடி பட்டத்தை முன்னிட்டு சத்தியமங்கலம், தாளவாடி, நம்பியூர் வட்டாரங்களில் காய்கறிகள், மக்காசோளம் போன்றவை பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இதனால், அப்பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்க ளில் ஆய்வு செய்யப்பட்டது.

விதை இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல், பதிவு சான்றிதழ், முளைப்பு திறன் அறிக்கை, வெளி மாநிலங்களில் வாங்கியமைக்கான சான்று பெற்ற நெல் விதைகளுக்கான படிவம்–2 போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அப்போது முறையான ஆவணங்கள் இல்லாமல் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த, 17,900 ரூபாய் மதிப்பிலான, 42 கிலோ எடை உள்ள இரண்டு விதை குவியல்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது.

விதை விற்பனை நிலையங்களில் விதை இருப்பு மற்றும் விலை விபரங்களை பயிர் வாரியாகவும், ரகம் வாரியாகவும் எழுதப்பட்டு விவசாயிகள் பார்வையில் படும்படி தகவல் பலகை இருக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் விற்பனை ரசீதுகளில் பயிர், ரகம் நிலை, குவியல் எண், காலாவதி தேதி, விற்பனை அளவு ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு விவசாயிகள் கையெழுத்து பெற வேண்டும். இதை பின்பற்றாத விற்பனையாளர்கள் மீது விதை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com