போதைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைக்காரர் கைது

இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர். 15 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ 3,900 பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த கடைக்காரர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கடத்தூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தனர்.

அப்போது கோபி அடுத்த அக்கரை கொடி வேரி, காமராஜ் புறம் பகுதியில் ஒரு கடையில் சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ் பாக்கெட், விமல் பாக்கு, கூலிப் ஆகியவற்றை விற்பனைக்கு வைத்தி ருப்பதை போலீசார் கண்டு பிடித்தனர்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிர மணியம் (50) என்பவரை கைது செய்தனர். கடையில் இருந்து ஒரு கிலோ 266 கிராம் போதைப் பொரு ட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதேப்போல் சத்திய மங்கலம் சப்- இன்ஸ்பெ க்டர் விஜயன் சத்தி-புது குய்யனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டி ருந்தபோது ஒருவர் சந்தேக ப்படும் படி நின்று கொண்டு இருந்தார். அவரை பிடித்து விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார்(23) என்பதும் சட்ட விரோதமாக மது விற்பனை யில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இது குறித்து சத்திய மங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தோஷ் குமாரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மது பாட்டில்கள், ரொக்க பணம் ரூ 3,900 பறிமுதல் செய்யப்பட்டது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com