search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரைவில்"

    • செய்தி துறை செயலாளர் தகவல்
    • மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் முழு திருவுருவச் சிலையினை பார்வையிட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    கன்னியாகுமரி:

    தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் களியக்காவிளை தேர்வுநிலை பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகி அ.சிதம்பரநாதன் முழு திருவுருவச் சிலையினை பார்வையிட்டு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

    தொடர்ந்து, நாகர்கோவில் வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தினை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு மண்டப உள் அரங்கினை ஆரோக்கியமான பயன்பாடுகளுக்கு கொண்டுவர மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியருக்கு அறிவுறுத்தினார்கள்.

    அதனைத்தொடர்ந்து, பொதுவுடமை வீரர் ப.ஜீவானந்தம் மணிமண்ட பத்தினை ஆய்வு மேற் கொண்டு மண்டபத்தில் பழுத டைந்துள்ள பகுதிகள் புதிதாக சீரமைக்கப்பட்டதை பார்வையிட்டு, மண்டபத்தில் உள்புறம் பொதுவுடமை வீரர் ப.ஜீவா னந்தத்தின் அரியவகை புகைப்படங்களை பொது மக்களின் பார்வைக்கு வைத்திட அறிவுறுத்தினார்கள்.

    நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இடலாக்குடி பகுதியில் அமைந்துள்ள சதாவதானி செய்குத்தம்பிப் பாவலர் நினைவு மண்டபத்தினை ஆய்வு மேற்கொண்டு, மண்டபத்தின் மேற்கூரை பழுதடைந்துள்ளதை சீரமைத்திட பொதுப்பணித்துறை அலுவ லர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

    மேலும், தோவாளை பகுதியில் ரூ.92.27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வந்த கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நூலகத்துடன் கூடிய மணிமண்டபம் விரைவில் முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் தெரிவித்தார்.

    ஆய்வுகளில், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஜாண் ஜெகத் பிரைட், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) விஜயலெட்சுமி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் லெனின் பிரபு, வட்டாட்சி யர்கள் ராஜேஷ், வினை தீர்த்தான், களியக்காவிளை பேரூராட்சி தலைவர் சுரேஷ், களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ரமாதேவி, தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன், துணைத்தலைவர் தாணு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரெயில்வே நுழைவு பாலத்தில் ஏற்கனவே உள்ள கான்கிரீட் சாலையை உடைத்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
    • இதில் இருவழி போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரி க்கை விடுத்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியில் இருந்து கொல்லம்பாளையம் செல்லும் வழியில் ரெயில்வே நுழைவு பாலம் உள்ளது.

    இந்த பாலத்தின் கீழ் தண்ணீர் தேங்கியதாலும், சாலை சிதிலமடைந்ததாலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது. இதையடுத்து ரூ. 50 லட்சம் மதிப்பில் இச்சாலையை சீரமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் 20-ந் தேதி தொடங்கியது.

    இதனால் ஈரோடு நாடார்மேடு பகுதியில் இருந்து ஈரோட்டுக்கு வரும் பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் சாஸ்திரிநகர், சென்னிமலை ரோடு வழியாக ஈரோடு ரெயில் நிலையம் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

    இதையடுத்து ரெயில்வே நுழைவு பாலத்தில் ஏற்கனவே உள்ள கான்கிரீட் சாலையை உடைத்து அப்புறப்படுத்திவிட்டு புதிய கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.

    இந்த பணிகள் தற்போது நிறைவடைந்து சில பராமரிப்பு பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருப்பினும் அந்த வழியாக போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

    வழக்கம்போல ஈரோடு கொல்லம்பாளையம் நோக்கி செல்லும் வாகனங்கள் மட்டும் ஒருவழி பாதையாக அனுமதிக்கப்படுகின்றன. விரைவில் இதில் இருவழி போக்குவரத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரி க்கை விடுத்து வருகின்றனர்.

    இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:

    ரெயில்வே நுழைவு பாலத்தில் புதிதாக கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நிறைவடை ந்துள்ளன. மழைநீர் வடிகாலும் அமைக்கப்பட்டு உள்ளது.

    தற்போது சில நாள்களாக பலத்த மழை பெய்தபோதும் அங்கு தண்ணீர் தேங்கவில்லை. இனி முன்பு போல அங்கு தண்ணீர் தேங்காது. போக்குவரத்து நெரிசலும் ஏற்படாது.

    தற்போது சாலை நடுவில் கொஞ்சம் கசிவுநீர் வெளியேறி வருகிறது. இதை சரிசெய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட வுள்ளன. மேலும் ரெயில்வே நுழைவுப் பாலத்தில் இருந்து கொல்லம்பாளையம் நோக்கி செல்லும் சாலை யில் கான்கிரீட் தளங்களுக்கு இடையே உள்ள சிறிய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு ள்ளாவதாக தெரிவிக்கப்ப ட்டுள்ளது.

    அதையும் சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்ப ட்டுள்ளது. இந்த பணிகள் ஒரு வார காலத்துக்குள் முடிவடையும் என எதிர்பா ர்க்கிறோம். அதன்பின், வழக்கம்போல ரெயில்வே நுழைவு பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×