search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழை தோட்டம்"

    • அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.
    • சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    மேட்டுப்பாளையம்:

    அன்னூர் அருகே குப்பனூர் ஊராட்சிக்குட்பட்ட ஆத்திக்குட்டை, வாக்கானாகொம்பு, புலியூர், ஒட்டகமண்டலம், ஆலாங்கொட்டை, அழகியபாளையம், சொலவம்பாளையம், அக்கறைசெங்கப்பள்ளி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.

    இப்பகுதிகளில் அதிகளவில் வாழை, தென்னை, கம்பு, சோளம் மற்றும் காய்கறிகள் அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த பகுதியில் காட்டுப்பன்றிகளின் தொல்லை அதிகளவு உள்ளது. காட்டு பன்றிகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்து வருகின்றனர்.

    இந்நிலையில், வாக்கனாங்கொம்பு கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து என்பவர் தனது தோட்டத்தில் வாழைகளை பயிரிட்டிருந்தார்.

    நேற்று இரவு இந்த தோட்டத்திற்குள் காட்டு பன்றிகள் கூட்டமாக நுழைந்தன. பின்னர் அவை, அங்கிருந்த வாழைகளை தின்றும், காலால் மிதித்தும் சேதப்படுத்தியது.

    இதேபோல், அங்குள்ள துளசிராஜ் என்பவரின் தோட்டத்திற்குள் புகுந்து, அங்கு பயிரிடப்பட்டிருந்த 200 வாழைகள் என மொத்தமாக 1000த்திற்கும் மேற்பட்ட வாழைகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்திவிட்டு சென்றன.

    இதையடுத்து சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இறப்பின் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • வாழை தோட்டம் விவகாரத்தில் புகார் கொடுத்தும் 4 மாதமாக அலைக்கழிக்கப்படுவதாக வேதனை
    • இழப்பீட்டுக்கு நஷ்டஈடாக ரூ.1½ லட்சம் வழங்க உத்தரவிடவேண்டும்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எராளமானோர் வந்து மனுக்களை கொடுத்து வந்தனர். மனுக்கள் கொடுக்க வந்தவர்களை போலீசார் சோதனை செய்தே கலெக்டர் அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.

    இந்த நிலையில் மனுவுடன் வந்த பெண் ஒருவர், திடீரென கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள், தர்ணாவில் ஈடுபட்ட பெண்ணை அங்கிருந்து அகற்ற முயன்றனர். அப்போது அந்தப் பெண், தனக்கு சொந்தமான வாழை தோட்டம் தொடர்பாக கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காமல் 4 மாதம் அலைக்கழிக்கப்படுவதாக வேதனை தெரிவித்தார். அவரை சமரசம் செய்த போலீசார், அங்கிருந்து அழைத்துச் சென்றனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்தப் பெண் பெயர் ராதிகாகுமாரி என்பதும், மாங்கரை அருகே உள்ள கல்லுவிளை காட்டுவிளையைச் சேர்ந்த ராஜன் என்பவரது மனைவி என்பதும் தெரியவந்தது.

    அவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுக்க கொண்டு வந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பாலூர் தேசம் பகுதியில் எங்களுக்குச் சொந்தமான இடத்தில் 350 வாழைகள் நட்டு விவசாயம் செய்துள்ளேன். கடந்த சில நாட்களுக்கு முன்பு அங்கு, எனது கணவரின் தம்பி வின்சென்ட் அவரது மனைவி ஜெபராணி ஆகியோர் வந்தனர். அவர்கள் 150 வாழைக்குலைகளை வெட்டி சேதப்படுத்தினர். இதுபற்றி நானும் கணவரின் சகோதரி லிசியும் சென்று கேட்டபோது, வின்சென்ட் அவதூறு பேசி கொலைமிரட்டல் விடுத்தார்.

    இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் கருங்கல் போலீசில் புகார் செய்தேன். தாசில்தார், கலெக்டர் அலுவலகத்திலும் புகார் தெரிவித்தேன். ஆனால் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. கோர்ட்டிலும் வழக்கு உள்ளது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு, ஆன்லைன் மூலம் வின்செண்ட் பற்றி புகார் அளித்தேன். இருப்பினும் கடந்த 4 மாதங்களாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே வின்சென்ட் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுப்பதோடு, எனக்கு ஏற்பட்டிருக்கும் இழப்பீட்டுக்கு நஷ்டஈடாக ரூ.1½ லட்சம் வழங்க உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கண்ணம்மாள் வாழைத்தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார்.
    • வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது 10 குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

    நெல்லை:

    பாப்பாக்குடி அருகே கபாலிபாறை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ப வரது மனைவி கண்ணம்மாள் (வயது 43). இவர் அதே பகுதியில் வாழைத்தோட்டம் அமைத்து விவசாயம் செய்து வருகிறார். வாழை மரங்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு ரூ.24 ஆயிரம் மதிப்பிலான 10 குழாய்களை தோட்டத்தில் வைத்து இருந்தார்.

    இந்நிலையில் வழக்கம்போல் நேற்று மாலை அவர் வாழைகளுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது 10 குழாய்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    ×