search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகனங்களின்"

    • ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.
    • அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் திம்பம் மலைப்பாதை உள்ளது.

    இந்த திம்பம் மலைப்பாதை திண்டுக்கல்- பெங்களூரு தேசிய நெடு ஞ்சாலையில் அமைந்து உள்ளது. தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களை இணைக்கும் முக்கிய பாதையாக திம்பம் மலை ப்பாதை உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரு கின்றன.

    வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி திம்பம் மலைப்பாதையை கடப்பது வழக்கம். அவ்வாறு சாலையை கடக்கும் வனவிலங்குகள், அந்த வழியாக செல்லும் வாகனங்களில் அடிபட்டு உயிரிழக்கின்றன.

    இதுகுறித்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து ஈரோடு மாவட்ட கலெக்டர் கடந்த 2019-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்த வேண்டும் என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

    மேலும் இந்த வழியாக 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு ஆசனூரில் அமைக்கப்பட்டிருந்த எடைமேடை பயனற்ற நிலையில் இருந்ததை வனத்துறையினர் சீரமைத்து நேற்று முதல் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எடை போட்டு அனுப்பி வைத்தனர்.

    நேற்று முதல் சோதனை ஓட்டம் தொடங்கி உள்ளதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர். விரைவில் அனைத்து வாகனங்களும் எடை போட்ட பிறகே 16.2 டன் எடையுள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கபடும். மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பபடும் என தெரிவித்தனர்.

    ×