search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வளைகாப்பு நிகழ்ச்சி"

    • ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், புதுப்பாளையம் யூனியன் சேர்மன் சி.சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் பொன்னி சுந்தரபாண்டியன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஜனவரி மாதம் 29 -ம் தேதி 1208 கர்ப்பிணி பெண்களுக்கு மாபெரும் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.
    • இந்த சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி உலகளாவிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெலமங்கலத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதார துறை சார்பில் கடந்த ஜனவரி மாதம் 29 -ம் தேதி 1208 கர்ப்பிணி பெண்களுக்கு மாபெரும் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது.

    இந்த வளைகாப்பு நிகழ்ச்சியை கெலமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ் குமார் மற்றும் அவரது மருத்துவ குழுவினர் நடத்தினர்.

    உலக அளவில் ஒரே இடத்தில் அதிகளவு கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்வது இதுவே முதல்முறை என்பதால் இந்த சமுதாய வளைகாப்பு விழா நிகழ்ச்சி உலகளாவிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இதனை அங்கீகரித்த லண்டனை தலைமை இடமாக கொண்ட வேல்ர்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு நிறுவனத்தினர் அதற்கான சான்றிதழை மருத்துவர் ராஜேஷ்குமார் மற்றும் அவரது மருத்துவ குழுவினரிடம் வழங்கினர்.

    அதனைத்தொடர்ந்து மருத்துவ குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மற்றும் சுகாதார துணை இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து வேல்ர்டு வைடு புக் ஆப் ரெக்கார்டு சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாவட்ட ஆட்சியர் அனைவரையும் பாராட்டினார். 

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டினார்.
    • மன மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது.

    ஊட்டி,

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் சீர்வரிசை பொருட்கள் பெற்ற நீலகிரி மாவட்ட கர்ப்பிணி பெண்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கூடலுாரில் 300 கர்ப்பிணிகளுக்கும், ஊட்டியில் 300 கர்ப்பிணிகளுக்கும், குன்னூரில் 200 கர்ப்பிணிகளுக்கும், கோத்தகிரியில் 200 கர்ப்பிணிகளுக்கும் என மொத்தம் 1,000 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

    இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்வில் சாதி, மொழி, இனம் என எந்த வேறுபாடுமின்றி அனைத்து கர்ப்பிணிகளையும் ஓரிடத்திற்கு அழைத்து மஞ்சள், குங்குமம், வளையல், பூ, மாலை போன்ற மங்கல பொருட்களை அணிவித்து சீர்வரிசை தட்டு வழங்கி ஐந்து வகையான உணவு வகைகள், இனிப்பு, பழம் பரிமாறி கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அவர்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை எதிர் கொள்ளவும் பிறந்த குழந்தைகள் முதல் 1,000 நாட்களில் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் கர்ப்ப கால பராமரிப்பு குறித்து அறிந்து கொள்ளவும் சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் மூலம் பயன் அடைந்த கர்ப்பிணி பெண் சீனா ஜூனைத் கூறியதாவது:-

    எனது பெயர் சீனா ஜூனைத். எனக்கு 22 வயதாகிறது. நான் நடுகூடலூர் அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு இது முதல் கர்ப்பம் ஆகும். நான் கர்ப்பமாக உள்ளதாக கண்டறிந்ததில் இருந்து அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து எடை, உயரம் எடுத்தும், சத்துமாவு வாங்கியும் உண்டு வருகிறேன்.

    மேலும் அங்கன்வாடி மையத்தில் நடத்தப்படும் சமுதாயம் சார்ந்த நிகழ்ச்சிகளில், கர்ப்பகால பராமரிப்பு குறித்த நிகழ்ச்சிகளிலும், ஊட்டச்சத்து மற்றும் சுத்தம் சுகாதாரம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் நான் தவறாமல் கலந்து கொண்டேன்.

    அந்நிகழ்ச்சிகள் மூலமாக கர்ப்ப கால பராமரிப்பு, தன்சுத்தம் பேணுதல், கர்ப்பத்திற்கு தயாராகுதல், ஊட்டச்சத்து உணவுகளின் முக்கியத்துவம் போன்றவற்றை அறிந்து கொண்டு அவற்றை பின்பற்றியும் வருகிறேன்.

    மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி பணியாளர் என்னை அழைத்து சென்றார். அங்கு கர்ப்பிணிகளை ஒரே இடத்தில் பார்க்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

    மேலும், இந்நிகழ்வில் அவரவர்கள் பின்பற்றும் உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளை எங்களுக்குள் பரிமாறிக்கொண்டோம். மேலும் வனத்துறை அமைச்சர் தலைமையில் எங்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு ஒரு புது அனுபவமாகவும், மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது. இந்த வாய்ப்பினை வழங்கிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கர்ப்பிணி பெண் முசீநா கூறுகையில்:-

    எனது பெயர் முசீநா. நான் மேல் கூடலூர் பகுதியில் வசித்து வருகிறேன். நான் 3 மாத கர்ப்பிணியாக இருந்த போது நடு கூடலூர் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்ய அங்கன்வாடி பணியாளர் அறிவுறுத்தியதன் பேரில் பதிவு செய்தேன் அன்று முதல் அவர் என்னை தொடர்ந்து கவனித்து வருகிறார்.

    எனக்கு மட்டுமல்லாமல் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒரு கர்ப்பிணியை எவ்வாறு கவனிக்க வேண்டும் என எடுத்து கூறியதன் மூலம் எனது வீட்டிலும் நல்லசூழலை ஏற்படுத்தி தந்துள்ளார். இதற்காக நடவடிக்மகை மேற்கொண்ட முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு நிலையை களையும் வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு என்ற திட்டம் தமிழக அரசிற்கு பெருமை சேர்க்கும் திட்டமாக அமைந்துள்ளது என கர்ப்பிணிகள் தெரிவித்தனர். 

    • உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
    • நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    குன்னூர்

    குன்னூர் அருகே உள்ள உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வார்டு பகுதிகளில் ஆதிவாசி பழங்குடி மக்களும், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.


    உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட 16-வது வார்டை சேர்ந்த சித்ரா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பேரூராட்சி தலைவர் ராதா தலைமையிலும், பேரூராட்சியின் துணைத் தலைவர் ரமேஷ்குமார் முன்னிலையிலும் நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் செயல்அலுவலர் ரவிக்குமார், 18-வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெண்ணின் உறவினர்களும், பொதுமக்களும் நிறைமாத கர்ப்பிணியான சித்ராவுக்கு சந்தனம் மஞ்சள் குங்குமம் இட்டு மலர் தூவி வாழ்த்தி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

    • கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.
    • கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் சொந்த செலவில் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே,100கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. பல்லடம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம், கணபதி பாளையம் ஊராட்சி ஆகியவை இணைந்து 100 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையம் சவுடேஸ்வரி அம்மன் திருமணமண்டபத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவர் இலபத்மநாபன், முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் பல்லடம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. பொறுப்பாளர் சோமசுந்தரம், கணபதிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவர் நாகேஸ்வரி சோமசுந்தரம் தம்பதியினர் ரூ.1 லட்சம் சொந்த செலவில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி வைத்தனர்.

    கர்ப்பிணி பெண்களுக்கு சீர் வரிசையாக வளையல்கள், புடவை, தட்டு, பூ, மஞ்சள், குங்குமம், மற்றும் 5 வகையான உணவுகளுடன் மதிய விருந்து வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனைக்குச் செல்லும் கர்ப்பிணிகளுக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்தின் மூலம் ஊக்கத் தொகை ரூ.18 ஆயிரம், ரூ 2 ஆயிரம் மதிப்பிலான ஊட்டச்சத்து பெட்டகம், ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் சுகாதாரத் துறையால் கர்ப்ப கால முன்பின் பராமரிப்பு முறைகள், குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முறைகள் ,குழந்தை வளர்ப்பு தடுப்பூசிகள் போன்ற பல தகவல்கள் கர்ப்பிணி பெண்களுக்கு எடுத்துக் கூறப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல்லடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகாலட்சுமி சங்கீதா, ஒருங்கிணைப்பாளர்கள் துளசிமணி,கவிதா, பல்லடம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பாலசுப்ரமணியம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கோவிந்தசாமி, ஈஸ்வர மகாலிங்கம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துக்குமார், வார்டு கவுன்சிலர்கள் ரவி தண்டபாணி, ருக்மணி வீரப்பன், தி.மு.க. மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ரத்தினசாமி, கீர்த்தி சுப்பிரமணியம்,ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் சின்னப்பன், மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×