search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby shower program"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டினார்.
    • மன மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது.

    ஊட்டி,

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியின் மூலம் சீர்வரிசை பொருட்கள் பெற்ற நீலகிரி மாவட்ட கர்ப்பிணி பெண்கள் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

    நீலகிரி மாவட்டத்தில் கூடலுாரில் 300 கர்ப்பிணிகளுக்கும், ஊட்டியில் 300 கர்ப்பிணிகளுக்கும், குன்னூரில் 200 கர்ப்பிணிகளுக்கும், கோத்தகிரியில் 200 கர்ப்பிணிகளுக்கும் என மொத்தம் 1,000 கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

    இந்த சமுதாய வளைகாப்பு நிகழ்வில் சாதி, மொழி, இனம் என எந்த வேறுபாடுமின்றி அனைத்து கர்ப்பிணிகளையும் ஓரிடத்திற்கு அழைத்து மஞ்சள், குங்குமம், வளையல், பூ, மாலை போன்ற மங்கல பொருட்களை அணிவித்து சீர்வரிசை தட்டு வழங்கி ஐந்து வகையான உணவு வகைகள், இனிப்பு, பழம் பரிமாறி கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அவர்களுக்கு மன மகிழ்ச்சி ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் முக்கிய நோக்கமே கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்களை எதிர் கொள்ளவும் பிறந்த குழந்தைகள் முதல் 1,000 நாட்களில் முக்கியத்துவத்தை பற்றி தெரிந்து கொள்ளவும் கர்ப்ப கால பராமரிப்பு குறித்து அறிந்து கொள்ளவும் சமுதாய வளைகாப்பு நடத்தப்படுகிறது.

    இத்திட்டத்தின் மூலம் பயன் அடைந்த கர்ப்பிணி பெண் சீனா ஜூனைத் கூறியதாவது:-

    எனது பெயர் சீனா ஜூனைத். எனக்கு 22 வயதாகிறது. நான் நடுகூடலூர் அங்கன்வாடி மையத்திற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனக்கு இது முதல் கர்ப்பம் ஆகும். நான் கர்ப்பமாக உள்ளதாக கண்டறிந்ததில் இருந்து அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்து எடை, உயரம் எடுத்தும், சத்துமாவு வாங்கியும் உண்டு வருகிறேன்.

    மேலும் அங்கன்வாடி மையத்தில் நடத்தப்படும் சமுதாயம் சார்ந்த நிகழ்ச்சிகளில், கர்ப்பகால பராமரிப்பு குறித்த நிகழ்ச்சிகளிலும், ஊட்டச்சத்து மற்றும் சுத்தம் சுகாதாரம் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் நான் தவறாமல் கலந்து கொண்டேன்.

    அந்நிகழ்ச்சிகள் மூலமாக கர்ப்ப கால பராமரிப்பு, தன்சுத்தம் பேணுதல், கர்ப்பத்திற்கு தயாராகுதல், ஊட்டச்சத்து உணவுகளின் முக்கியத்துவம் போன்றவற்றை அறிந்து கொண்டு அவற்றை பின்பற்றியும் வருகிறேன்.

    மேலும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் சார்பில் நடத்தப்பட்ட சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி பணியாளர் என்னை அழைத்து சென்றார். அங்கு கர்ப்பிணிகளை ஒரே இடத்தில் பார்க்கும் போது மனதிற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது.

    மேலும், இந்நிகழ்வில் அவரவர்கள் பின்பற்றும் உணவு பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி போன்ற செயல்பாடுகளை எங்களுக்குள் பரிமாறிக்கொண்டோம். மேலும் வனத்துறை அமைச்சர் தலைமையில் எங்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு ஒரு புது அனுபவமாகவும், மனதிற்கு சந்தோஷமாகவும் இருந்தது. இந்த வாய்ப்பினை வழங்கிய ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலருக்கும், முதல்-அமைச்சருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    கர்ப்பிணி பெண் முசீநா கூறுகையில்:-

    எனது பெயர் முசீநா. நான் மேல் கூடலூர் பகுதியில் வசித்து வருகிறேன். நான் 3 மாத கர்ப்பிணியாக இருந்த போது நடு கூடலூர் அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்ய அங்கன்வாடி பணியாளர் அறிவுறுத்தியதன் பேரில் பதிவு செய்தேன் அன்று முதல் அவர் என்னை தொடர்ந்து கவனித்து வருகிறார்.

    எனக்கு மட்டுமல்லாமல் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஒரு கர்ப்பிணியை எவ்வாறு கவனிக்க வேண்டும் என எடுத்து கூறியதன் மூலம் எனது வீட்டிலும் நல்லசூழலை ஏற்படுத்தி தந்துள்ளார். இதற்காக நடவடிக்மகை மேற்கொண்ட முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு நிலையை களையும் வகையில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு என்ற திட்டம் தமிழக அரசிற்கு பெருமை சேர்க்கும் திட்டமாக அமைந்துள்ளது என கர்ப்பிணிகள் தெரிவித்தனர். 

    • உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன.
    • நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    குன்னூர்

    குன்னூர் அருகே உள்ள உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள வார்டு பகுதிகளில் ஆதிவாசி பழங்குடி மக்களும், தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களும் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர்.


    உலிக்கல் தேர்வுநிலை பேரூராட்சிக்குட்பட்ட 16-வது வார்டை சேர்ந்த சித்ரா என்ற நிறைமாத கர்ப்பிணிக்கு பேரூராட்சி தலைவர் ராதா தலைமையிலும், பேரூராட்சியின் துணைத் தலைவர் ரமேஷ்குமார் முன்னிலையிலும் நிறைமாத கர்ப்பிணிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் செயல்அலுவலர் ரவிக்குமார், 18-வார்டு உறுப்பினர்கள் மற்றும் பெண்ணின் உறவினர்களும், பொதுமக்களும் நிறைமாத கர்ப்பிணியான சித்ராவுக்கு சந்தனம் மஞ்சள் குங்குமம் இட்டு மலர் தூவி வாழ்த்தி வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

    ×