search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வறட்டு இருமல்"

    • பலருக்கும் வறட்டு இருமல், சளி போன்ற பிரச்சினைகள் உள்ளன.
    • உள்ளிருந்து சரி செய்யக்கூடிய மருந்து பொருட்கள்.

    குளிர்காலம் என்பதால் பலருக்கும் வறட்டு இருமல், சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கும் இந்த பிரச்சினை ஏற்படுகிறது. வறட்டு இருமலை உள்ளிருந்து சரி செய்யக்கூடிய வைத்தியத்திற்கு, தொண்டையுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் பொருட்களை உட்கொள்வது மிகச்சிறந்தது.

    தேவையான பொருட்கள்

    சித்தரத்தை- 50 கிராம்

    அதிமதுரம்- 50 கிராம்

    கடுகு- 50 கிராம்

    வெந்தயம்- 50 கிராம்

     பயன்படுத்தும் முறை

    சித்தரத்தை, அதிமதுரம், கடுகு, வெந்தயம் இந்த 4 பொருட்களையும் வறுத்து அரைத்த பிறகு நன்கு ஆறவைத்து அரைத்து பொடி செய்து எடுத்துவைத்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியை தினமும் இரண்டு வேளை அரை ஸ்பூன் எடுத்து இதை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம். அல்லது இந்த பொடியை ஒரு டம்ளர் கொதிக்கின்ற தண்ணீரில் சேர்த்து கஷாயம் போல் காய்ச்சி சாப்பிட்ட பின்பு தினமும் இரண்டு வேலை குடித்து வரலாம்.

    இந்த பொடியை தொடர்ந்து 5 முதல் 7 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்ட வர வேண்டும். தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வர வறட்டு இருமல் போன்ற பிரச்சினைகளில் இருந்து முழு நிவாரணம் தரும்.

    இந்த பொடியுடன் ஓமவல்லி, துளசி, முசுமுசுக்கை, ஆடாதோடை இலை, திருநீற்று பச்சிலை, தும்பை இலை போன்ற இலைகளில் ஏதேனும் ஒன்றை சாறு பிழிந்து தேனுடன் கலந்து சாப்பிடலாம்.

    இந்த பொடியை தொடர்ந்து குடித்து வந்தாலும் வறட்டு இருமல் சரியாகவில்லை என்றால் உடனடியாக மருத்துவர்களை அணுகுவது அவசியமாகும்.

    சாப்பிடக்கூடாதவை:

    ஐஸ்கிரீம் சாப்பிட கூடாது.

    குளிர்ச்சியான பானங்கள் அருந்த கூடாது.

    குளிர்ச்சியான ஆகாரங்கள் சாப்பிட கூடாது.

    சுடுதண்ணீர் குடிக்க வேண்டும்.

    அதிகம் பேசாமல் தொண்டைக்கு ஓய்வு கொடுக்கவேண்டும்.

    மூச்சி பயிற்சி செய்ய வேண்டும்.

    • வாய்ப்புண், குடல் புண் (அல்சர்) குணமாகும்.
    • இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.

    பொதுவாகவே பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் ஏற்படும். உடலில் எந்தவொரு பிரச்சினை என்றாலும் முதலில் டாக்டர்கள் கூறும் ஒரே விஷயம் பழங்கள் சாப்பிட வேண்டும் என்று தான். காரணம் என்னவென்றால் தற்போதைய சமூகத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தவிர்க்கும் விஷயம் என்றால் அது பழங்கள் சாப்பிடுவது தான்.

    பழங்களின் வகைகள் ஏராளம். அதிலும் ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு நன்மைகள் இருகிறது. அந்தவகையில் விளாம்பழம் சாப்பிட்டால் என்ன நன்மைகள் என்று தெரிந்துக்கொள்வோம்.

    * பற்களை வலுடையச் செய்கிறது.

    * உடலின் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

    * தலை வலி குறையும்.

    * கண்பார்வை மங்கல் குணமாகும்.

    * பசியை தூண்ட செய்யும்.

    * இதயத்தை பலம் பெற செய்யும்.

    * மூட்டு வலி, உடல் வலி போன்றவற்றை போக்கும்.

    * இதய துடிப்பை சீராக வைத்திருக்கும்.

    * வாயுத் தொல்லை நீங்கும்.

    * நரம்புத் தளர்ச்சி விரைவில் குணமடையும்.

    * எலும்புகள் வலுவடையும்.

    * ரத்தத்தை சுத்திகரிக்கிறது.

    * நினைவாற்றல் அதிகரிக்கும்.

    * பெண்களுக்கு ஏற்படும் ரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்.

    * உடல் வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சிக்கு சிறந்தது.

    * வாய்ப்புண், குடல் அல்சர் குணமடையும்.

    * வறட்டு இருமல், மூச்சு இழுப்பு, வாய் கசப்பு போன்றவை தீரும்.

    இந்த விளாம்பழம் ஆகஸ்டு மாதம் முதல் நவம்பர் மாதம் வரை கிடைக்கும். ஆகவே இதை இந்த காலக்கட்டத்தில் வாங்கி சாப்பிடுவது நல்லது.

    ×