search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லோக்ஆயுக்தா"

    லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்யும் ஆலோசனைக் கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளவில்லை. #Lokayukta #MKStalin
    சென்னை:

    லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தெரிவு குழு ஒன்று ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கப்பட்டது

    லோக் ஆயுக்தா அமைப்பில் இடம் பெற விரும்பி விண்ணப்பித்த 183 பேரிடம் நேர்காணல் நடத்தி குறிப்பிட்ட நபர்களை ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் தலைமையிலான குழு தேர்வு செய்து தமிழக முதல்வரிடம் அறிக்கையை சமர்பித்துள்ளது.

    தெரிவு குழு அளித்த அறிக்கை மீதான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் குழுவில் இடம்பெற்றுள்ள நிலையில் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

    கடந்த டிசம்பர் மாதம் 28 -ம் தேதி நடைபெற்ற முதல் லோக் ஆயுக்தாவின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேடுதல் குழுவை நியமிப்பதற்கான முதல் ஆலோசனை கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளவில்லை. தேடுதல் குழு அளித்த அறிக்கை விரைவில் கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பணியாளர் சீர்திருத்த துறை அதிகாரி ஸ்வர்ணா ஆகியோரும் கலந்து கொண்டனர்.  #Lokayukta #MKStalin
    லோக்ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #LokayuktaBill #SupremeCourt

    புதுடெல்லி:

    மத்திய மந்திரிகள், மாநில மந்திரிகள், மற்றும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க பாராளுமன்றத்தில் லோக் பால் மசோதாவும், லோக் ஆயுக்தா மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.

    இதை பின்பற்றி மாநிலங்கள் சட்டசபையில் லோக் ஆயுக்தா மசோதாவை நிறைவேற்றி நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி 13 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

    தமிழகம், காஷ்மீர், புதுவை உள்பட 11 மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்படாமல் இருந்தது. இதையடுத்து தமிழக அரசு லோக் ஆயுக்தா மசோதா நிறைவேற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஜூலை 10-ந்தேதி வரை (இன்று) கெடு விதித்தனர்.

    லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி அது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

    இதைத்தொடர்ந்து தமிழக அரசு லோக் ஆயுக்தா மசோதாவை தயாரித்து அதை நேற்று சட்டசபையில் நிறைவேற்றியது. இதுபற்றிய பிரமாண பத்திரத்தை சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்தது.

    இன்று இந்த வழக்கு சுப்ரீம கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது லோக் ஆயுக்தா மசோதாவை தமிழக அரசு 2 மாதங்களில் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த வழக்கில் புதுவை அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் லோக்ஆயுக்தா வரைவு மசோதா தயாராகி வருவதாகவும், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி ஒப்புதல் கிடைத்ததும் சட்டம் நிறை வேற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. #LokayuktaBill #SupremeCourt

    ×