search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்"

    • தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக ஆதரவற்ற பெண்களுக்கு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது
    • விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண், ஆதரவற்ற பெண்களுக்கு இத்திட்டத்தின் மூலம் உதவிகள் வழங்கப்படுகிறது

    நிலக்கோட்டை :

    தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக இலவசமாக நிலக்கோட்டை ஒன்றியத்தில் ஏழ்மை நிலையில் உள்ள விதவை, கணவனால் கைவிடப்பட்ட பெண்,

    ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோர் நிலைக்கு உருவாக்குதல் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் நூறு சதவீதம் மானியத்துடன் தலா 5 வெள்ளாடுகள் வீதம் 100 பெண்களுக்கு ரூ. 17 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 500 ஆடுகள் வழங்கும் விழா நிலக்கோட்டை கால்நடை டாக்டர். செந்தில் குமார் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் நிலக்கோட்டை தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கலந்துகொண்டு பெண்களுக்கு வெள்ளாடுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் வடக்கு ஒன்றிய செயலாளர் சவுந்தர பாண்டி, தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் வெள்ளிமலை, முசுவனூத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ், ஒன்றிய கவுன்சிலர்கள் தியாகு, ராஜதுரை, நாகராஜன் மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகள், டாக்டர்கள், சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிட்ரோயன் நிறுவனத்தின் சி5 ஏர்கிராஸ் இந்திய விலை மாற்றப்பட்டு இருக்கிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    சிட்ரோயன் நிறுவனம் சி5 ஏர்கிராஸ் மாடல் இந்திய விலையை உயர்த்தியது. இந்தியாவில் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் மாடல் பீல் மற்றும் ஷைன் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இரு வேரியண்ட்களின் விலையும் தற்போது ரூ. 1 லட்சம் வரை உயர்த்தப்பட்டது. 

    விலை உயர்வின் படி சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் பீல் வேரியண்ட் துவக்க விலை ரூ. 31.30 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என மாறி இருக்கிறது. இதன் ஷைன் வேரியண்ட விலை தற்போது ரூ. 32.80 லட்சம், (எக்ஸ்-ஷோரூம்) என மாறியது.

     சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ்

    இந்தியாவில் சிட்ரோயன் நிறுவனத்தின் முதல் மாடலாக சி5 ஏர்கிராஸ் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், 18 இன்ச் அலாய் வீல்கள், எட்டு இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
    சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் சுமார் ஒரு கோடி பேர் வாங்கியிருப்பதை கொண்டாடும் வகையில் அந்நிறுவனம் ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்பட்டுள்ளது. #RedmiNote5Pro #High5



    சியோமி நிறுவனம் தனது Mi ஏ2 ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக நேற்று அறிவித்த நிலையில், தற்சமயம் அந்நிறுவனத்தின் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது. 

    இந்தியாவில் ஒரு கோடி யூனிட்கள் விற்பனையாகி இருப்பதை கொண்டாடும் வகையில் ரெட்மி நோட் 5 ப்ரோ விலை குறைக்கப்படுவதாக சியோமி இந்தியா தெரிவித்துள்ளது. புதிய விலை குறைப்பின் படி 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி கொண்ட ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.12,999 விலையிலும், 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. ரேம் விலை ரூ.13,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



    இரு வேரியண்ட்களும் முறையே ரூ.1,000 மற்றும் ரூ.2,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. புதிய விலை குறைப்பு ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் சியோமியின் Mi வலைத்தளம் மற்றும் ஆஃப்லைன் விற்பனையகங்களில் அமலாகி இருக்கிறது. 

    ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் 5.99 இன்ச் ஃபுல் ஹெச்.டி.+ 2.5D வளைந்த கிளாஸ் ஸ்கிரீன், ஆண்ட்ராய்டு நௌக்கட் இயங்குதளம் வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும் நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிபராகன் 636 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி + 5 எம்பி பிரைமரி கேமரா, டூயல்-டோன் எல்இடி ஃபிளாஷ் மற்றும் 20 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி கேமராவுடன் ஃபிளாஷ் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் ஃபேஸ் அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ சிறப்பம்சங்கள்:

    - 5.99 இன்ச் 2160x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி.+ 18:9 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 636 சிப்செட்
    - அட்ரினோ 509 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆண்ட்ராய்டு 7.1.2 நௌக்கட் சார்ந்த MIUI 9
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - 12 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX486 செனசார், f/2.2 அப்ரேச்சர், டூயல்-டோன் எல்டி பிளாஷ்  
    - 5 எம்பி பிரைமரி கேமரா, f/2.0 அப்ரேச்சர் 
    - 20 எம்பி செல்ஃபி கேமரா, சோனி IMX376 சென்சார், f/2.2 அப்ரேச்சர், எல்இடி பிளாஷ்
    - கைரேகை மற்றும் இன்ஃப்ராரெட் சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை. ப்ளூடூத்
    - 4000 எம்.ஏ.ஹெச் பேட்டரி
    சீனாவின் புஜியான் மாநிலத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.#ChinaCoalmineAccident
    பெய்ஜிங்:

    சீனாவின் புஜியான் மாநிலம் யாங்டாங் மாவட்டத்தில் உள்ள லோங்யான் பகுதியில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது. இந்த சுரங்கத்தில் நேற்று 9 தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென அந்த சுரங்கத்தில் மண் சரிந்து விபத்து ஏற்பட்டது. அதில் அங்கு பணிபுரிந்தவர்கள் சிக்கிக் கொண்டனர்.

    இதில், 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்த ஒருவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். மண் குவியலில் சிக்கியுள்ள மற்றொருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

    இதுதொடர்பாக சுரங்க உரிமையாளரிடம் விசாரணை நடந்து வருகிறது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #ChinaCoalmineAccident
    சென்னை வண்ணாரப்பேட்டையில் 40 வருடமாக ரூ.5 கட்டணத்தில் சிகிச்சை அளித்த டாக்டர் ஜெயசந்திரன் இன்று மரணமடைந்ததையடுத்து அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். #FiveRupeeDoctor #DrJayachandran
    ராயபுரம்:

    சென்னை வண்ணாரப்பேட்டையில் டாக்டர் ஜெயசந்திரன் என்று கேட்டால் பலருக்கு தெரியாது. ஆனால் ‘அஞ்சு ரூபா’ டாக்டர் என்று யாரை கேட்டாலும் அடையாளம் காட்டி விடுவார்கள்.

    அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் மக்கள் நல மருத்துவராக வலம் வந்தவர் டாக்டர் ஜெயச்சந்திரன் (71). உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன் இன்று மரணம் அடைந்தார்.

    அவரது உடல் பழைய வண்ணாரப்பேட்டை வெங்கடேசன் தெருவில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. மகள் சரண்யா, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணியாற்றுகிறார். ஒரு மகன் சரத் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் டாக்டராகவும் மற்றொரு மகன் சரவணன் தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராகவும் இருக்கிறார்கள்.

    ஜெயச்சந்திரனின் மனைவி டாக்டர் வேணி. மகப்பேறு மருத்துவ நிபுணர். சென்னை அரசு பொது மருத்துவமனை டீனாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். மொத்த குடும்பமும் மருத்துவத்துறை சார்ந்த குடும்பம்.

    மருத்துவம் தொழில் அல்ல. அது சேவை. அந்த சேவையை ஆத்மார்த்தமாக செய்பவர்கள் மக்கள் மனங்களில் என்றும் வாழ்வார்கள் என்பதை ஜெயச்சந்திரனின் மறைவு எடுத்துக்காட்டியது.

    டாக்டர் ஜெயச்சந்திரனின் சொந்த ஊர் காஞ்சீபுரம் மாவட்டம் கொடைப்பட்டினம் கிராமம். 1947-ல் பிறந்த ஜெயச்சந்திரன் பள்ளிப்படிப்பு முடிந்ததும் சென்னை அரசு மருத்துவ கல்லுரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார்.

    சாதாரண குடும்பத்தில் பிறந்த ஜெயச்சந்திரன் டாக்டர் ஆனதும் டாக்டர் தொழிலுக்கு செல்ல விரும்பவில்லை. மருத்துவ சேவை செய்யவே விரும்பினார். அதனால் ஒரு சிறு கிளினிக்கை தொடங்கினார்.

    தன்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் ஆரம்பத்தில் வெறும் ரூ.2 மட்டுமே வசூலித்தார். அதையும் அங்குள்ள உண்டியலில் போட சொல்வார். செவிலியர்கள் நியமித்தால் அவர்களுக்கும் சம்பளம் தரவேண்டும் என்பதால் அவரே ஊசி போடுவது, மருந்து மாத்திரைகள் எடுத்து கொடுப்பது போன்ற வேலைகளையும் கவனித்தார்.

    அவரது சேவையால் ஈர்க்கப்பட்டு பகுதிநேரமாக வந்து உதவி செய்து சென்ற செவிலியர்களும் உண்டு. ஒரு ரூபாய், இரண்டு ரூபாய்க்கு மவுசு குறைந்ததை தொடர்ந்து நோயாளிகள் வற்புறுத்தியதால் கட்டணத்தை ரூ.5 ஆக உயர்த்தினார். கடைசி காலம் வரை அதே கட்டணத்தையே வாங்கிவந்தார்.

    அவரது மருத்துவ சேவைக்கு குடும்பத்தினரும் ஒத்துழைத்தனர். அந்த பகுதியில் இலவச மருத்துவ முகாம்கள், ரத்ததான முகாம்கள் ஏராளம் நடத்தி இருக்கிறார்.

    டாக்டர் ஜெயச்சந்திரனின் கிளினிக்கில் எப்போதும் கூட்டம் இருக்கும். அதிலும் கிராமப்புற மற்றும் குடிசை பகுதி ஏழைகள் தான் அதிக அளவில் இருப்பார்கள். புறநகர் பகுதிகளில் இருந்தும் பஸ்களில் பலர் வருவார்கள்.



    இன்று அவரது மரண செய்தி அறிந்து ஏராளமானவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். குடிசைப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமானவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். அப்போது அவர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

    சேவையால் மக்கள் மனதில் இடம்பிடித்த அஞ்சு ரூபாய் டாக்டருக்கு மக்கள் தங்கள் இறுதி அஞ்சலியை செலுத்தினார்கள். #FiveRupeeDoctor #DrJayachandran

    லெனோவோ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போனில் அந்நிறுவனம் டூயல் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா சென்சார்களை வழங்கியுள்ளது. #LenovoS5ProGT #smartphone
     


    லெனோவோ நிறுவனம் எஸ்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் சீன சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. முன்னதாக அந்நிறுவனத்தின் லெனோவோ எஸ்5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 660 பிராசஸர், 6.18 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:7:9 ரக டிஸ்ப்ளே, அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 இயங்குதளம் மற்றும் ZUI 10 வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 20 எம்.பி. பிரைமரி கேமரா, 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. போர்டிரெயிட் மற்றும் 2X சூம் வசதி வழங்கப்பட்டுள்ளது.
     


    அழகிய செல்ஃபிக்களை எடுக்க 20 எம்.பி. கேமரா, சோனி IMX476 சென்சார், 4-இன்-1 பிக்சல் பின்னிங் தொழில்நுட்பம், 8 எம்.பி. இரண்டாவது கேமரா, ஏ.ஐ. போர்டிரெயிட் வசதி, 3டி லைட்டிங், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. 

    மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருக்கும் லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. சிறப்பம்சங்கள்:

    - 6.2 இன்ச் 2246x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 18:7:9 டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 14 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 512 GPU
    - 4 ஜி.பி. / 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி
    - 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் ZUI 10
    - 20 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 12 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.6
    - 20 எம்.பி. செல்ஃபி கேமரா, சோனி IMX476 சென்சார், f/2.2
    - 8 எம்.பி. இரண்டாவது செல்ஃபி கேமரா
    - கைரேகை சென்சார், ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3500 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்



    லெனோவோ எஸ்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போன் பிளாக், புளு மற்றும் கோல்டு என மூன்று வித நிறங்களில் கிடைக்கிறது. இதன் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1198 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.12,275), 6 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை 1298 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.13,300) என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 1498 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.15,350) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    லெனோவோ நிறுவனம் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம் கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. #LenovoZ5ProGT



    லெனோவோ நிறுவனம் இசட்5எஸ் ஸ்மார்ட்போனினை தொடர்ந்து இசட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. புதிய இசட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர் மற்றும் அதிகபட்சமாக 12 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரு அம்சங்களை கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமையை லெனோவோ இசட்5 ப்ரோ பெற்றுள்ளது.

    கார்பன் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ள லெனோவோ இசட்5 ப்ரோ ஜி.டி. ஸ்மார்ட்போனின் பக்கவாட்டுகளில் ரெட் மற்றும் பிளாக் நிற அக்சென்ட்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜி.பி. வெர்ஷனில் அதிகபட்சம் 50 செயலிகளை ஒரே நேரத்தில் திறக்க முடியும்.

    மற்ற அம்சங்களை பொருத்த வரை 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19:5:9 ரக டிஸ்ப்ளே, ஸ்லைடர் வடிவமைப்பு, 16 எம்.பி. செல்ஃபி கேமரா, 8 எம்.பி. ஐ.ஆர். ஃபேஸ் அன்லாக் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    பின்புறம் 16 எம்.பி. + 24 எம்.பி. டூயல் பிரைமரி கேமரா சோனி சென்சார், 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    லெனோவோ இசட்5 ப்ரோ ஜி.டி. சிறப்பம்சங்கள்:

    - 6.39 இன்ச் 1080x2340 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் சூப்பர் AMOLED 19.5:9 டிஸ்ப்ளே
    - கார்னிங் கொரில்லா கிளாஸ்
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 855 7 என்.எம். பிராசஸர்
    - அட்ரினோ 640 GPU
    - 6 ஜி.பி. / 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி
    - 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி
    - 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி
    - டூயல் சிம் ஸ்லாட்
    - ஆண்ட்ராய்டு 9.0 பை மற்றும் ZUI 10
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார், f/1.8, டூயல்-டோன் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 24 எம்.பி. இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX576 சென்சார், f/1.8
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.2
    - 8 எம்.பி. ஐ.ஆர். இரண்டாவது செல்ஃபி கேமரா
    - இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - யு.எஸ்.பி. டைப்-சி ஆடியோ, டால்பி அட்மோஸ்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி
    - 3350 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    லெனோவோ இசட்5 ப்ரோ ஜி.டி. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி விலை 2698 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.27,780), 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை 2998 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.30,865), 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை 3398 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.34,985) என்றும் டாப்-என்ட் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் 4395 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.45,280) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    அணு ஆயுதங்களுடன் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது. #AgniV #AbdulKalamisland
    புவனேஸ்வர்:

    இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மூன்றுகட்ட உந்துதல் செயல்பாட்டுடன் 1.5 டன் எடையை சுமந்துச் செல்லக்கூடிய வகையில் 17 மீட்டர் நீளம், 2 மீட்டர் அகலம் கொண்ட ‘அக்னி–5’ ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது.

    அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த ‘அக்னி–5’ ஏவுகணைகள் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம்விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.


    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள பலசோர் கடற்கரை பகுதியை ஒட்டியுள்ள அப்துல் கலாம் தீவில் (பழைய பெயர் வீலர் தீவு) இருந்து இன்று பிற்பகல் ‘அக்னி–5’ ஏவுகணை பரிசோதித்து பார்க்கப்பட்டது.

    இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாகவும், நிர்ணயிக்கப்பட்டிருந்த இலக்கை குறிதவறாமல் ‘அக்னி–5’ பாய்ந்து தாக்கி, அழித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதற்கு முன்னர் ஆறுமுறை நடத்தப்பட்ட பரிசோதனைகளும் வெற்றிகரமாகவே அமைந்தது நினைவிருக்கலாம். #AgniV #AbdulKalamisland

    இன்ஃபினிக்ஸ் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது. #Note5Stylus #smartphone


    இன்ஃபினிக்ஸ் மொபிலிட்டி நிறுவம் இந்தியாவில் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஆன்ட்ராய்டு ஒன் மாடலாக அறிமுகமாகி இருக்கும் புதிய ஸ்மார்ட்போனுடன் எக்ஸ் பென் ஸ்டைலஸ் வழங்கப்படுகிறது.
    இது 4096 அளவில் அழுத்தத்தை உணரும் என்றும் மிகவும் மென்மையான நுனிப் பகுதியை கொண்டுள்ளது.

    ஒற்றை கிளிக் மூலம் மெனு, புதிய மெனு ஆப்ஷன்களுக்கு சென்று பென் மற்றும் இரேசர் ஆப்ஷன்களில் ஒன்றை ஒற்றை கிளிக் மூலம் தேர்வு செய்ய முடியும். எக்ஸ் பென் மெனு மூலம் நோட்ஸ், மெமோஸ் எழுதுவதோடு, ஸ்கிரீஷாட் எடுப்பது, ஃபைல்களை பார்ப்பது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியும்.

    புதிய ஸ்மார்ட்போனில் 6.0 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P23 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. இத்துடன் 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள், சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.

    மெட்டல் யுனிபாடி வடிவைப்பு கொண்டிருக்கும் இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.



    இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் சிறப்பம்சங்கள்:

    - 6.0 இன்ச் 2160x1080 பிக்சல் FHD+ 18:9 ஐ.பி.எஸ். 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 2.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P23 16என்.எம். பிராசஸர்
    - 800MHz ARM மாலி G71 MP2 GPU
    - 4 ஜி.பி. ரேம்
    - 64 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - ஹைப்ரிட் டூயல் சிம்
    - 16 எம்.பி. பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், f/1.8
    - 16 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0, சாஃப்ட் எல்.இ.டி. ஃபிளாஷ்
    - கைரேகை சென்சார்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. ஓ.டி.ஜி.
    - 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங்

    இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் போர்டாக்ஸ் ரெட் மற்றும் சார்கோல் புளு நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படும் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.15,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை டிசம்பர் 4ம் தேதி துவங்குகிறது. 

    இன்ஃபினிக்ஸ் நோட் 5 ஸ்டைலஸ் ஸ்மார்ட்போன் ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,200 மதிப்புள்ள உடனடி கேஷ்பேக் (வவுச்சர்கள் வடிவில்) மற்றும் 50 ஜி.பி. கூடுதல் டேட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சியோமி நிறுவன சாதனங்களுக்கு பண்டிகை காலத்தில் அறிவிக்கப்பட்ட சிறப்பு விலை சில சாதனங்களுக்கு நிரந்தரமாக வழங்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. #Xiaomi



    சியோமி நிறுவன சாதனங்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சலுகைகளும், சில சாதனங்களின் விலை குறைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், பண்டிகை காலத்தில் அறிவிக்கப்பட்டு இருந்த விலை குறைப்பு சில சாதனங்களில் நிரந்தரமாக நீட்டிக்கப்படுகிறது.

    அந்த வகையில் சியோமி Mi ஏ2, ரெட்மி நோட் 5 ப்ரோ மற்றும் ரெட்மி வை2 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை ரூ.1,000 நிரந்தரமாக குறைக்கப்படுகிறது. இந்தியாவில் தொடர்ச்சியாக ஐந்து காலாண்டுகளாக முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனமாக இருப்பதை கொண்டாடும் வகையில் இந்த சலுகை வழங்குவதாக சியோமி அறிவித்துள்ளது.



    நிரந்தர விலைகுறைப்பு பெற்றிருக்கும் சியோமி ஸ்மார்ட்போன்கள்

    சியோமி Mi ஏ2 (4ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி Mi ஏ2 (6ஜி.பி. + 128 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி ரெட்மி வை2 (4ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.11,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ (4ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.13,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
    சியோமி ரெட்மி நோட் 5 ப்ரோ (6ஜி.பி. + 64 ஜி.பி.) ரூ.1,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.15,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    புதிய விலை குறைப்பு ஏற்கனவே அமலாகி விட்டது. மேலும் சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 6 ப்ரோ ஸ்மார்ட்போனினை நவம்பர் 22ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.

    முன்னதாக சியோமி நிறுவனத்தின் ரெட்மி 6, ரெட்மி 6ஏ ஸ்மார்ட்போன் மாடல்கள், 10,000 எம்.ஏ.ஹெச். Mi பவர்பேங்க் மற்றும் Mi டி.வி. 32 இன்ச் ப்ரோ மற்றும் 49 இன்ச் ப்ரோ மாடல்களின் விலை அதிகரித்தது.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. #Micromax #smartphone



    மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இரண்டு ஆன்ட்ராய்டு ஓரியோ (கோ எடிஷன்) ஸ்மார்ட்போன்கள் - பாரத் 4 தீபாவளி எடிஷன் மற்றும் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

    இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் பிரைமரி மற்றும் செல்ஃபி கேமரா சென்சார்களில் ஃபிளாஷ் வசதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷனில் 18:9 ரக டிஸ்ப்ளே, கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

    இதை கொண்டு மற்ற சாதனங்களை சார்ஜ் செய்ய முடியும். புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களில் டிஸ்ப்ளே ரெசல்யூஷன் மற்றும் சிப்செட் உள்ளிட்ட விவரங்கள் வழங்கப்படவில்லை.



    மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 18:9 ரக டிஸ்ப்ளே
    - 1 ஜி.பி. ரேம் 
    - 16 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 5 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - கைரேகை சென்சார், ஃபேஸ் அன்லாக்
    - டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி



    மைக்ரோமேக்ஸ் பாரத் 4 தீபாவளி எடிஷன் சிறப்பம்சங்கள்:

    - 5.0 இன்ச் 1280x720 பிக்சல் ஹெச்.டி. 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
    - 1 ஜி.பி. ரேம் 
    - 8 ஜி.பி. மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ (கோ எடிஷன்)
    - டூயல் சிம் ஸ்லாட்
    - 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 2 எம்.பி. செல்ஃபி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
    - 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

    இந்தியாவில் மைக்ரோமேக்ஸ் பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் விலை ரூ.5,899 என்றும், பாரத் 4 தீபாவளி எடிஷன் விலை ரூ.4,249 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாரத் 5 இன்ஃபினிட்டி எடிஷன் விற்பனை துவங்கிவிட்ட நிலையில், பாரத் 4 தீபாவளி எடிஷன் விற்Hனை நவம்பர் 3ம் தேதி துவங்குகிறது.

    புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன்களை வாங்கும் ரிலையனஅஸ் ஜியோ பயனர்களுக்கு 25 ஜி.பி. 4ஜி டேட்டா வழங்கப்படுகிறது. பயனர்கள் மேற்கொள்ளும் ரூ.198/ரூ.299 ரீசார்ஜ்களை செய்யும் போது 5 ஜி.பி. வரை கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. 
    லெனோவோ நிறுவனத்தின் ஃபுல் ஸ்கிரீன் ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #LenovoZ5Pro #smartphone



    லெனோவோ நிறுவனத்தின் இசட்5 ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. லெனோவோ தலைமை செயல் அதிகாரி சாங் செங் புதிய ஸ்மார்ட்போன் நவம்பர் 1ம் தேதி அறிமுகம் செய்யப்படுவதாக அறிவித்தார்.

    புதிய அறிவிப்புடன் ஸ்மார்ட்போனின் டீசரை சாங் செங் வெளியிட்டிருந்தார். இதில் புதிய ஸ்மார்ட்போனில் ஸ்லைடு-அவுட் வடிவமைப்பு கொண்டிருப்பது தெரியவந்துளளது. இந்த வடிவமைப்பு காரணமாக புதிய ஸ்மார்ட்போனில் மெல்லிய பெசல்கள், அதிக ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ வழங்கப்பட்டுள்ளது.



    புதிய ஸ்மார்ட்போன் ஸ்லைடரில் இயர்பீஸ், முன்பக்க கேமராக்கள் இடம்பெற்றிருக்கிறது. இத்துடன் டூயல் பிரைமரி கேமரா செட்டப், ஏ.ஐ. அம்சங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. புதிய லெனோவோ ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படுவதை சாங் செங் உறுதி செய்திருக்கிறார்.

    இதுதவிர புதிய லெனோவோ ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. எனினும் சீனாவின் TENAA வலைதளத்தில் புதிய ஸ்மார்ட்போனின் விவரங்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×