search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமநாதபுரம் மாவட்டம்"

    ‘வாட்ஸ்-அப்’ மூலம் இயங்கிய கும்பலை சேர்ந்த 4 பேர் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று அதிகாலையில் அதிரடியாக நுழைந்து தீவிர சோதனை நடத்தினார்கள்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் ரகசிய கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்த 10 பேர் கொண்ட கும்பலை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் போலீசார் கைது செய்தனர். “வீரமரணம் எங்கள் இலக்கு” என்று குறிப்பிட்டு அவர்கள் ‘வாட்ஸ்-அப்’ குழு அமைத்து செயல்பட்டு வந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. அவர்களில் சிலர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலையாகி வெளியில் வந்தனர்.

    இந்தநிலையில் அந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அந்த அமைப்பினர் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு கட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    ‘வாட்ஸ்-அப்’ கும்பல் குறித்த விவரங்களின் அடிப்படையில் அவர்கள் கூட்டம் நடத்திய விவரங்கள், சென்று வந்த இடங்கள், பின்னணி, சந்தித்த நபர்கள், சமூக வலைதளங்களில் வெளிவந்த தகவல்கள் குறித்தும் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் அடுத்தகட்டமாக வழக்கில் தொடர்புடையவர்களின் வீடுகளில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அதாவது கீழக்கரையில் ஒருவரும், தேவிபட்டினம் பகுதியில் 3 பேரும் சம்பந்தப்பட்டிருப்பதால் தேசிய புலனாய்வு தனிப்படையினர் அந்த 4 பேரின் வீடுகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தேசிய புலனாய்வு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு, கூடுதல் சூப்பிரண்டு, துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படையினர் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 35 போலீசாரின் உதவியுடன் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    நேற்று அதிகாலை 3 மணி அளவில் தொடங்கிய இந்த சோதனை பல மணி நேரம் நீடித்தது. இந்த சோதனையின் போது ‘வாட்ஸ்-அப்’ குழு தொடர்பான வழக்கில் சிக்கியவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை நடந்ததாக தெரிகிறது. இந்த சோதனையில் சில ஆவணங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவற்றை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.பயங்கரவாத அமைப்புகளுடன் ஏதேனும் தொடர்பில் உள்ளார்களா, அதுதொடர்பான தகவல் பரிமாற்றம் ஏதும் நடந்துள்ளதா? என்ற கண்ணோட்டத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 4 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையை போல், வாட்ஸ்-அப் குழு வழக்கில் தொடர்புடைய மற்ற 6 பேர் வீடுகளிலும் அந்தந்த பகுதி போலீசார் ஒத்துழைப்புடன் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. 
    ராமநாதபுரம் மாவட்டத்தில் வருவாய்த்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
    ராமநாதபுரம்:

    புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், வங்கிகளை தனியார் மயமாக்கக்கூடாது, வராக்கடன்களை வசூலிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் வங்கி, தொலைதொடர்பு ஊழியர்கள் சங்கத்தினர் இன்றும், நாளையும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் ஊழியர்கள் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. அரண்மனை மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்கள் நடந்தன.

    ராமநாதபுரத்தில் வழக்கம்போல் பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டதால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    இந்த வேலை நிறுத்தத்தில் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பங்கேற்றனர். மாவட்டத்தில் உள்ள 9 தாலுகா அலுவலகங்களிலும் வருவாய் அலுவலர்கள் பணிக்கு வராததால் வெறிச்சோடி காணப்பட்டது. இதில் 170 பெண்கள் உள்பட 542 பேர் பங்கேற்றுள்ளதாக மாவட்ட தலைவர் பழனிக்குமார் தெரிவித்தார்.

    வருவாய்த்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக மாவட்டத்தில் அரசின் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரூ.1000 வழங்கும் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள இந்த வேலை நிறுத்தத்திற்கு தமிழகத்தில் போதிய ஆதரவு இல்லை. மதுரையில் இன்று வழக்கம்போல் அனைத்து பஸ்கள் இயங்கின.

    அஞ்சல்துறை, காப்பீட்டுத்துறை, வருமான வரித்துறை, தொலை தொடர்புத்துறை உள்ளிட்ட மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக சம்பந்தப்பட்ட துறைகளின் பணிகள் பாதிக்கப்பட்டன. மதுரையில் கோரிக்கைகளை வலியுறுத்தி சில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் வழக்கம் போல் பஸ்கள் ஓடின. வேலை நிறுத்தத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் தபால் அலுவலகங்கள் செயல்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.

    மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும்பாலான வங்கி ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். இதன் காரணமாக வங்கி பணிகள் பாதிக்கப்பட்டன. பண பரிவர்த்தனை முற்றிலும் முடங்கியது.

    இன்றும் நாளையும் வங்கிகள் செயல்படாது என அறிவிக்கப்பட்டதால் ரூ.150 கோடி அளவுக்கு வர்த்தகங்கள் பாதிக்கப்படும் என வியாபாரிகள் தெரிவித்தனர். #tamilnews
    ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை புறக்கணித்து வருவதால் சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    கிராம நிர்வாக அதிகாரிகளுக்கான கல்வித்தகுதியை உயர்த்துவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்துவது, ஆன்லைன் பணிகளுக்கு ஊதியம் வழங்குவது, மாவட்டத்திற்குள் மட்டும் பணி மாறுதல் கொடுக்க வேண்டும் உள்பட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28-ந்தேதி முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை புறக்கணித்து வருகின்றனர்.

    தொடர்ந்து பணிகளை புறக்கணித்து வருவதால் ஆன்லைன் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம், இருப்பிடம், சாதி, விதவை உள்ளிட்ட 22 வகையான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் ஸ்தம்பித்துவிட்டது.

    இந்த போராட்டத்தால் ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி. கமுதி, திருவாடானை உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மனுக்கள் தேக்கம் அடைந்துள்ளது.

    பட்டா மாறுதல் பணிகள் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    போராட்டம் குறித்து வி.ஏ.ஓ. சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஜெகராயன் கூறியதாவது:-

    எங்கள் நியாயமான 21 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். நேற்று பரமக்குடியில் எங்களின் வேலை நிறுத்தம் குறித்து மக்களை தேடி பிரசாரம் நடந்தது. இன்று பார்த்திபனூரில் மக்களை தேடி பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம். என்றார். #tamilnews
    கஜா புயல் கரை கடந்த நிலையில், மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு நிலையை பாதிக்கின்ற வகையில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். #GajaCyclone
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், தெற்கு கரையூர் கிராமத்தில் உள்ள பல்நோக்கு புகலிட பாதுகாப்பு மையத்தில், கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை சந்தித்து அமைச்சர் மணிகண்டன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புயல் கரையை கடந்த நேரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைநீர் தேங்கக்கூடிய தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்கள் மற்றும் கடற்கரையோர பகுதிகளில் உள்ள பொதுமக்கள் என மொத்தம் 2,123 பேர் 18 பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    அவர்களுக்கு உணவு, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டன. மீனவர்களுக்கும் முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்பட்டு, படகுகள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களில் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    தற்போது, புயல் கரை கடந்த நிலையில், மாவட்டத்தில் பொது மக்களின் இயல்பு நிலையை பாதிக்கின்ற வகையில் பெரிய அளவிலான பாதிப்புகள் இல்லை.

    இயல்புநிலை திரும்பியதையடுத்து, பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களில் 2,051 நபர்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

    தெற்கு கரையூர் என்ற கிராமத்தில் உள்ள பல்நோக்கு புகலிட பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த தனுஷ்கோடியை பகுதியைச் சார்ந்த 28 குடும்பங்களுக்கு (72 நபர்கள்) சூழ்நிலையை கருத்தில் கொண்டு, பாதுகாப்பு மையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். அவர்களது குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி, ஒரு பாய், வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    புயல் பாதிப்புகளைப் பொறுத்த வரை 10 இடங்களில் சாய்ந்திருந்த மரங்கள் அனைத்தும் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. அதேபோல, 7 இடங்களில் சாய்ந்திருந்த மின் கம்பங்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு தற்போது மின் விநியோகம் சீராக வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது வரை மேற்கொள்ளப்பட்டுள்ள கணக்கெடுப்பின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் புயலின் காரணமாக மனித உயிரிழப்பு, கால்நடை உயிரிழப்பு இல்லை.

    அதேவேளையில், 6 குடிசை வீடுகள் முழுமையாகவும், 7 குடிசை வீடுகள் பகுதியளவிலும், ஒரு காங்கிரீட் வீடு முழுமையாகவும் சேதமடைந்துள்ளது.

    வீடுகளின் சம்பந்தப்பட்ட உரிமைதாரர்களுக்கு உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது கலெக்டர் வீரராகவராவ், வருவாய் கோட்டாட்சியர் சுமன் மற்றும் பலர் உடனிருந்தனர். #GajaCyclone
    டெங்கு, பன்றிக்காய்ச்சல் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்தார்.
    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டத்தில் உள்ள அக்கிரமேசி கிராமத்தில் மாவட்ட கலெக்டர் வீர ராகவராவ் தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, பரமக்குடி அரசு மருத்துவ மனைக்கு நேரடியாகச் சென்று கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

    மருத்துவமனையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் நல சிகிச்சை பிரிவு, 24 மணி நேர காய்ச்சல் சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகள் பிரிவு என ஒவ்வொரு பிரிவாக நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் வீரராகவராவ் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களி லும் பரவலாக மழை பெய்து வருவதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள சூழ்நிலையினாலும் அனைத்து மாவட்டங்களிலும் பருவ மழை காலத்தில் ஏற்படக் கூடிய டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல் பரவா மல் தடுப்பதற்கான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல் அமைச் சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலர்களின் ஒருங்கிணைப்பில் பாது காப்பு நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

    மாவட்டத்தில் 11 அரசு மருத்துவமனைகள், 58 அரசு ஆரம்ப சுகாதார நிலையங் கள் அனைத்திலும் காய்ச் சலுக்கான சிறப்பு பிரிவு செயல்படுத்தப்பட்டு, தனிக்கவனம் செலுத்தப் பட்டு சிகிச்சை வழங்குவ தோடு தொடர்ந்து கண் காணிக்கப்பட்டு வருகிறது.

    ராமநாதபுரம் மாவட் டத்தில் தற்போது வரை டெங்கு வைரஸ் காய்ச் சல், பன்றிக்காய்ச்சல் போன்ற நோய் பாதிப்பு கள் ஏதுமில்லை. இருப்பி னும் இத்தகைய வைரஸ் காய்ச்சல்களை பரவா மல் தடுப்பதற்கான முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தொடர்ந்து மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ஆய்வின் போது மருத்துவப்பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் முல்லைக்கொடி, இணை இயக்குநர் பொது சுகாதாரத் துறை, சென்னை (மாவட்ட பொறுப்பு அலுவலர்) டாக்டர் சோமசுந்தரம், துணை இயக்குநர் (பரமக் குடி) டாக்டர் மீனாட்சி, பரமக்குடி அரசு மருத்துவ மனை தலைமை மருத்துவர் டாக்டர் நாகநாதன் மற்றும் அரசு அலுவலர்கள், மருத்து வர்கள் உடனிருந்தனர். #tamilnews
    தமிழகம் முழுவதும் விசைப்படகுகளில் மீன்பிடிக்க வருகிற 14-ந் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    ராமநாதபுரம்:

    ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய ஏதுவாக கடல் பகுதிகளில் விசைப்படகுகளில் சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஏப்.15ந் தேதி முதல் இந்த தடை நடைமுறைக்கு வந்தது. ஜூன் 14-ம் தேதி வரை இந்த தடை அமலில் உள்ளது. இதையடுத்து மண்டபம், ராமேசுவரம், கீழக்கரை, ஏர்வாடி பகுதிகளில் நாட்டுப்படகு மீனவர்கள் மட்டும் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

    இதனால் ராமநாதபுரம், கீழக்கரை மீன் மார்க்கெட்டிற்கு மீன்வரத்து குறைவாக உள்ளது. பற்றாக்குறை உள்ளதால் மீன் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    சூடை மீன் கிலோ ரூ.50-ல் இருந்து ரூ.100 வரையிலும், நகரை மீன் கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.150 வரையிலும், நண்டு கிலோ ரூ.300-ல் இருந்து ரூ.450 வரையிலும், சீலா கிலோ ரூ.500-ல் இருந்து ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

    போதிய அளவு மார்க் கெட்டிற்கு கடல் மீன் வராததால் கண்மாயில் பிடிக்கப்படும் கெழுத்தி, கெண்டை, வளர்ப்பு கட்லா மீன்களை வாங்கி மீன் வியாபாரிகள் விற்கின்றனர். இதனால் இவற்றின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

    விலை உயர்வு, மீன் வரத்துக்குறைவு ஆகிய காரணங்களால் அசைவப் பிரியர்கள் ஆடு, கோழி இறைச்சியை விரும்பி வாங்கி செல்கின்றனர். கடும் விலை உயர்வு காரணமாக ஒரு சில அசைவப் பிரியர்கள் காய்கறி உணவுக்கு மாறத்தொடங்கி விட்டனர். தற்போது காய்கறி விலையும் அதிகரித்துள்ளது.

    ×