search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர் வேலை நிறுத்தம்
    X

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர் வேலை நிறுத்தம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை புறக்கணித்து வருவதால் சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
    ராமநாதபுரம்:

    கிராம நிர்வாக அதிகாரிகளுக்கான கல்வித்தகுதியை உயர்த்துவது, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்துவது, ஆன்லைன் பணிகளுக்கு ஊதியம் வழங்குவது, மாவட்டத்திற்குள் மட்டும் பணி மாறுதல் கொடுக்க வேண்டும் உள்பட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 28-ந்தேதி முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராம நிர்வாக அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை புறக்கணித்து வருகின்றனர்.

    தொடர்ந்து பணிகளை புறக்கணித்து வருவதால் ஆன்லைன் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வருமானம், இருப்பிடம், சாதி, விதவை உள்ளிட்ட 22 வகையான சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் ஸ்தம்பித்துவிட்டது.

    இந்த போராட்டத்தால் ராமநாதபுரம், கீழக்கரை, பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி. கமுதி, திருவாடானை உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மனுக்கள் தேக்கம் அடைந்துள்ளது.

    பட்டா மாறுதல் பணிகள் முடங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் சான்றிதழ் பெற முடியாமல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    போராட்டம் குறித்து வி.ஏ.ஓ. சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் ஜெகராயன் கூறியதாவது:-

    எங்கள் நியாயமான 21 அம்ச கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். நேற்று பரமக்குடியில் எங்களின் வேலை நிறுத்தம் குறித்து மக்களை தேடி பிரசாரம் நடந்தது. இன்று பார்த்திபனூரில் மக்களை தேடி பிரசாரத்தில் ஈடுபட உள்ளோம். என்றார். #tamilnews
    Next Story
    ×