search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரம்பன்"

    • கரம்பன் நீரில் நின்று அன்ன ஆகாரம் இன்றி தவம் செய்தான்.
    • பஞ்சாங்கனி மத்தியில் ரம்பன் தவம் செய்தான்.

    தனு என்ற அசுரனுக்கு மிகவும் பராக்கிரமசாலியான ரம்பன், கரம்பன் என்ற இரு மகன்கள் இருந்தனர். அவர்கள் மிகவும் சக்திவாய்ந்த புத்திரர்களை பெற வேண்டும் என்று கடும் தவம் புரிந்தனர். கரம்பன் நீரில் நின்று அன்ன ஆகாரம் இன்றி தவம் செய்தான். அப்பொழுது இந்திரன், 'இவனுக்கு பிள்ளை பிறந்தால் தேவர்களுக்கு ஆபத்து' என்று கருதி, முதலை உருவில் சென்று நீரில் நின்றிருந்த கரம்பனை கொன்றான்.

    யட்சபுரி என்ற ஊரில் ரசாலம் என்ற ஆலமரத்தின் அடியில் பஞ்சாங்கனி மத்தியில் ரம்பன் தவம் செய்தான். சகோதரனாகிய கரம்பனுக்கு இந்திரனால் ஏற்பட்ட மரணத்தை அறிந்து, தேவர்களை அழிக்க சபதம் மேற்கொண்டான். தவத்தின் இறுதியில் தன் தலையை வெட்டி அக்னியில் செலுத்த முயன்றான்.

    அப்போது அக்னி தோன்றி, `உனக்கு வரம் தருகிறேன். இவ்வாறு செய்யாதே" என்றார். ரம்பன் மகிழ்ந்து, `எனக்கு யாராலும் ஜெயிக்க முடியாத மகன் வேண்டும்" என்றான். அதற்கு அக்னி தேவன், 'நீ முதலில் எந்த உயிரினத்தை பார்க்கிறாயோ, அதன் மூலம் உனக்கு புத்திரன் பிறப்பான்' என்று வரம் கொடுத்தார்.

    இதையடுத்து ரம்பன் தவத்தில் இருந்து வெளியே வந்தான். அப்போது அவன் முதலில் எருமை ஒன்றை கண்டான். அந்த எருமையை பார்த்தவுடன் அதன் வாயிலாக அவனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. எருமைத்தலையும் மனித உடலுமாக பிறந்த அந்த பிள்ளை மக்ஷாகரன்' என்று அழைக்கப்பட் டான்.

    மகிஷாசுரன் மகாமேரு என்ற மலையை அடைந்து அங்கு பத்தாயிரம் வருடம் கடும் தவம் செய்தான். மரணம் இல்லாத வாழ்க்கையை அவன் பிரம்மாவிடம் கேட்டான். அதற்கு பிரம்மன், மரணம் இல்லாத வாழ்க்கை யாருக்கும் கிடையாது. வேறு வரம் கேள்" என்றார். அதற்கு அவன். "தேவர்களாலும் பூதங்களாலும். ஆண்களாலும், மிருகங்களாலும், எனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்றான்.

    பெண்கள் மென்மையானவர்கள். அவர்களால் தனக்கு ஆபத்து இல்லை என்பதால். பெண்களை தவிர்த்து வரம் கேட்டான். பிரம்மதேவனும் அவன் கேட்ட வரத்தை அளித்தார்.

    மகிஷாசுரனுக்கு, சிட்சூரன் என்பவன் சேனாதிபதியாகவும். தாம்ரன் என்பவன் தளபதியாகவும் இருந்தனர். அசிலோமா, பிடாலன், பாஷ்களன், காலபந்தகன், உதர்க்கன், த்ரிநேத்ரன் போன்ற மந்திரிகளும் அவனுடன் இருந்தனர்.

    அவனுக்கு பயந்த ரிஷிகளும், முனிவர்களும் அவன் சொல்படி கேட்டு நடந்தனர். அவன் மிக அழகிய மாஹிஷம் என்ற பட்டினத்தை அஞ்சனம் என்ற மலையில் நிர்மாணித்தான். தேவர்களை தனக்கு உதவியாளர்களாக மாற்றிக் கொண்டான்.

    மும்மூர்த்திகளும். தேவர்களும் ஒன்று கூடி, மகிஷனை எப்படி அழிப்பது என்று ஆலோசனை செய்தார்கள். தேவர்களின் சக்தியிலும், மும்மூர்த்திகளின் ஒளியிலும் இருந்து தெய்வீக சக்தி படைத்த தேவி தோன்றினாள்.

    புரட்டாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசி திதியில் இந்த பராசக்தி தேவர்களுக்கு காட்சி கொடுத்தாள். இந்த தேவி 18 கைகள் கொண்டு அஷ்டாதச மகாலட்சுமியாக காட்சி தந்தாள். தொடர்ந்து ஒன்பது இரவுகள் போர் புரிந்து மகிஷாகரனையும் அவனுடன் இருந்த அசுரர்களையும் அழித்தாள். இதனால் அந்த இன்னை மகிஷாசுர மர்த்தினி என்று அழைக்கப்பட்டாள். எந்த இடத்தில் தேவர்களின் சத்ருவான மகிஷனை, தேவி வதம் செய்தாளோ அந்த இடம் `தேவிப்பட்டினம்' என்று பெயர் பெற்றது. அன்னை போரிட்ட ஒன்பது நாட்களும் நவராத்திரியாகவும், வெற்றிபெற்ற 10-ம் நாள் விஜயதசமியாகவும் கொண்டாடப்படுகிறது.

    இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் மகிஷாசுர மர்த்தினிக்கு, "துர்க்கா தேவி" என்ற பெயர் எப்படி வந்தது என்று ஒரு சமயம் துர்கமன் என்ற அசுரன், தேவர்கள், மகரிஷி, முனிவர்கள், வேதியர்கள் போன்றவர்களிடம் இருந்த மந்திரங்களை தன் சக்தியால் கவர்ந்து சென்றான். இதனால் உலகில் ஜபம், யாகம் எதுவும் நடைபெறவில்லை.

    இதனால் மழை பொழியாமல் பயிர்கள் வாடின. பசுமையான மரங்கள் கூட உதிர்ந்தன. கிணறு, குளம், நதி ஆகியவை வற்றியது. இவ்வாறு நூறு ஆண்டு காலம் மக்கள் பஞ்சத்தில் தவித்தனர். இதையடுத்து தேவர்கள், அன்னை பராசக்தியை துதித்து வழிபட்டனர். அப்போது தேவி அங்கு தோன்றினாள். இவர் பல கண்களைக் கொண்டிருந்ததால், 'சதாட்சி' என்று பெயர் பெற்றாள்.

    புஷ்பம், தளிர் கீரை, காய்கறிகள், கிழங்குகளுடன் தோன்றியதால், இந்த தேவியை `சாகம்பரி' என்றும் பெயரிட்டு அழைத்தனர். இந்த அன்னை, துர்கமனுடன் சண்டையிட்டு அவனை வீழ்த்தினாள். அவன் இறந்த பிறகு அவனுடைய உடலில் இருந்து அவன் கவர்ந்து சென்ற மந்திரங்கள் பேரொளியோடு அன்னையை வந்து சரணடைந்தன. அதைக்கண்ட தேவர்கள் ஜெய ஜெய' என்று கோஷமிட்டனர்.

    துர்கமன் என்னும் அசுரனை அழித்ததால் அன்னை `துர்க்கா' என்று அழைக்கப்பட்டாள். சூலினி துர்க்கா, வன துர்க்கா, சாந்தி துர்க்கா, சபரி துர்க்கா, ஜாதவேதோ துர்க்கா, தீப துர்க்கா, ஜ்வாலா துர்க்கா, ஆசுரி துர்க்கா என நவ துர்க்கைகளாகவும் இருந்து அன்னை அருள்புரிகிறாள்.

    இந்த தேவியின் பெருமைகளை கூறும் தேவி மாகாத்மியத்தை, ஒன்பது நாளும் பாராயணம் செய்வது சிறப்பான பலனைத் தரும். அப்படி முடியாவிட்டால் துர்க்கைக்கு மிக- விசேஷமான துர்க்காஷ்டமி அன்றாவது பாராயணம் செய்வது நல்லது. தேவர்கள் மகிஷனை வதம் செய்த போது மகிஷாசுர மர்த்தினியை துதித்த துதிக்கு மகிஷாசுரமர்த்தினி சுலோகம் என்று பெயர் வந்தது.

    • தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார்.
    • நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

    முன்பு வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியவர் வரமுனி. இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், தலைக்கனமும் ஏற்பட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் எண்ணமும் வரும்தானே?

    வரமுனிக்கும் அது வந்தது. இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும்முனிவர்களிடமும் மகிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட முனிவர்கள் அனைவரும் எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டனர்.

    ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சிஅவன் முன் தோன்றினார் அக்னி பகவான். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்தியமகன் வேண்டும் என வேண்டினான்.

    அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பன்! நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன்பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

    மனம் முழுக்க உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது காட்டெருமையை. அவனது அசுர புத்தி வேலை செய்தது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்றுசாபம் பெற்ற வரமுனி, அசுரனின் வாரிசாக மகிஷாசுரனாக பிறந்தான்.

    மகிஷாசுரன் 10 ஆயிரம் ஆண்டுகள் பிரம்மனை குறித்து தவம் இருந்தான்.

    எனக்கு தேவர்கள், அசுரர்கள், மானிடர்களால் மரணம் ஏற்படக்கூடாது. கன்னிப்பெண்ணால்தான் மரணம் ஏற்பட வேண்டும் என்று வரம் கேட்டான். அவன் கேட்டவரத்தை அருளினார் பிரம்ம தேவன். அங்கு தொடங்கியது பிரச்சனை.

    மகிஷாசுரனின் அராஜகம் அதிகமாகியது. மகாவிஷ்ணுவை தஞ்சமடைந்தனர். தேவர்கள், மகிஷாசுரனுக்கு மரணம் பெண்ணால்தான் அவனை சம்ஹாரம் செய்யதகுந்தவள் மகாசக்தி மட்டும்தான் என்று கூறினார் மகாவிஷ்ணு.

    மும்மூர்த்திகளும் தேவர்களும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்ததும் ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களையும் ஒன்றாக பெற்ற மகாலட்சுமியாய் தோன்றினாள் அம்பாள்.

    தங்களை காக்க வந்த தேவிக்கு தேவர்கள் படைக்கலங்களைப் படைத்தனர். சிவபெருமான் சூலம் தந்தார். அக்னி சக்தி தந்தார். வாயு பகவான் வில்லும், அம்பறாத்துணியும் கொடுத்தார். தேவி மகிஷனை சம்ஹாரம் புரிய சர்வலங்கார பூஷிதையாய் புறப்பட்டாள்.

    அம்பாளுடன் கடும் போர் புரிந்தான் மகிஷாசுரன். கடும் போர் முடிவுக்கு வந்தது. அநீதி அழிக்கப்பட்டது. அழிந்தான் மகிஷாசுரன்.

    அம்பாள் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தது அஷ்டமி தினத்தன்று. தேவர்கள்அம்மனை வணங்கி வழிபட்டது அடுத்த நாளான நவமி தினத்தன்று. தேவிமணித்வீபம் (மூலஸ்தானம்) சென்றது அதற்கு அடுத்த நாளான தசமி தினத்தன்று.

    இந்த நாட்கள்தான் நவராத்திரியின் கடைசி 3 நாட்களாகக் கொண்டாடப்படுகிறது. 

    ×