என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "kஆர்ப்பாட்டம்"
ஊட்டி:
இலங்கையில் தமிழர்களை கொல்வதற்கு உதவி புரிந்த தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடலில் நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட செயலாளர் கே.ஆர். அர்ஜூணன் எம்.பி. தலைமை தாங்கினார். கோபாலகிருஷ்ணன் எம்.பி., செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ், முன்னாள் அமைச்சர் புத்திச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் ஏ.கே.செல்வராஜ் எம்.பி. பேசியதாவது:-
தொப்புள் கொடி உறவான தமிழர்களின் படுகொலைக்கு காங்கிரஸ், தி.மு.க. துணை நின்றது. கடந்த 1980-ம் ஆண்டில் அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுக்கு ரூ.4 கோடி நிதியுதவி வழங்கினார். ஆனால் 27.4.2009 அன்று இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தியபோது சென்னையில் அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் இருப்பதுபோல நடித்து, பிறகு திடீரென உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்டார்.
இந்த படுகொலைக்கு மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனத்தை தெரிவித்ததுடன், மத்திய அரசு இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று கடிதம் எழுதினார். ஆனால் மத்திய அரசு மூலம் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சென்ற குழுவினர் ராஜபக்சே அளித்த விருந்தில் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வாங்கி வந்தனர். எனவே தான் அவர்கள் மீது போர்க்குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொள்கை பரப்பு செயலாளர் செ.ம.வேலுசாமி பேசும்போது கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மீது தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார். கோவை மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டையாக இருப்பதால் அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை தெரிவித்து வருகிறார். தி.மு.க. ஆட்சியின்போது விடப்பட்ட டெண்டர் முறையே தற்போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். எனவே தவறான குற்றச்சாட்டுகளுக்கான உண்மையான பதிலை அ.தி.மு.க. தொண்டர்கள் தங்களது கிராம மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் சாந்தி ராமு எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மில்லர், விவசாய பிரிவு மாநில துணை செயலாளர் பாரதியார், மாவட்ட துணை செயலாளர் சிவலிங்கம், ஊட்டி நகர செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பழனி:
கொடைக்கானலில் அக்னிநட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே கோடை மழை பெய்யத் தொடங்கியது. அதன்பிறகு தினந்தோறும் மாலையில் சாரல் மழையும், இரவு நேரங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.
தற்போது தொடர் விடுமுறை காரணமாகவும் மலர் கண்காட்சியை காணவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை வந்த வண்ணம் உள்ளனர்.
மழை பெய்தாலும் சுற்றுலா பயணிகள் நனைந்தவாறும், குடைபிடித்து சென்ற படியும் சுற்றுலா இடங்களை கண்டு ரசித்து வருகின்றனர். இதனிடையே கொடைக்கானல் மற்றும் பழனியில் பெய்து வரும் தொடர் மழையினால் பல்வேறு அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று மாலை முதல் இரவு வரை திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் பழனி மற்றும் கொடைக்கானலிலும் விட்டு விட்டு மழை பெய்தது.
கொடைக்கானல் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் அணைகள் இரண்டும் நிரம்பும் நிலையை அடைந்துள்ளன. இதேபோல் கொடைக்கானல் ஏரி நிரம்பி மறுகால் செல்கிறது.
பழனி நகருக்கு குடிநீர் வழங்கும் கோடைகால நீர்தேக்கமும் நிரம்பி வருகிறது. வரதமாநதி அணைக்கு வினாடிக்கு 132 கன அடி தண்ணீர் வருகிறது. 66.47 அடி உயரம் உள்ள இந்த அணையில் தற்போது 40 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.
இதேபோல் பாலாறு பொருந்தலாறு அணை, குதிரையாறு, பரப்பலாறு ஆகிய அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். #Rain
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்