search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முரளீதரன்"

    • மத்திய இணை மந்திரி வி.முரளீதரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
    • இதற்கான டெபாசிட் தொகையை மாணவர்களே திரட்டி பணம் செலுத்தினர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுநாள் நிறைவடைகிறது. ஆற்றிங்கல் தொகுதியில் பா.ஜ.க. சார்பில் மத்திய இணை மந்திரி வி.முரளீதரன் போட்டியிடுகிறார்.

    இந்நிலையில், திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில், பழவங்காடி கணபதி கோயிலில் வழிபட்ட பின், தனது வேட்புமனுவை முரளீதரன் இன்று தாக்கல் செய்தார்.

    அதற்கான டெபாசிட் தொகையை உக்ரைனில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள் செலுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

    ரஷியா, உக்ரைன் போரின்போது அங்கு சிக்கித் தவித்த இந்திய மாணவர்களை ஆபரேஷன் கங்கா திட்டம் மூலம் மத்திய அரசு மீட்டு தாயகம் திரும்பி வர உதவியது. வெளியுறவுத்துறை இணை மந்திரியாக முக்கிய பங்காற்றிய முரளீதரனுக்கு நன்றி செலுத்தும் வகையில் அவர் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகையை மாணவர்கள் செலுத்தினர்.

    • கனடாவில் அதிகபட்சமாக 91 பேர் மரணம்.
    • பிரிட்டனில் 48 பேர் மரணம்

    இந்தியாவை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் வெளிநாடுகளில் படித்து வருகின்றனர். உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தியபோதுதான், இந்திய மாணவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் படித்து வருகிறார்களா? என்பது தெரிய வந்தது.

    இந்த நிலையில் வெளிநாடுகளில் படித்து வரும் மாணவர்களில் எத்தனை பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற தகவலை மத்திய மந்திரி வி. முரளீதரன் மக்களவையில் தெரிவித்தார்.

    அப்போது, "408 இந்திய மாணவர்கள் கடந்த 2018-ல் இருந்து மரணம் அடைந்துள்ளனர். கனடாவில் அதிகபட்சமாக 91 பேர் மரணம் அடைந்துள்ளனர். பிரிட்டனில் 48 பேரும், ரஷியாவில் 40 பேரும், அமெரிக்காவில் 36 பேரும், ஆஸ்திரேலியாவில் 35 பேரும், உக்ரைனில் 21 பேரும், ஜெர்மனியில் 20 பேரும், சைபிரஸில் 14 பேரும், இத்தாலி மற்றும் பிலிப்பைன்ஸில் தலா 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

    வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு மத்திய அரசின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்று எனத் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

    • இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது.
    • இந்த விழாவில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி முரளீதரன் பங்கேற்றார்.

    கொழும்பு:

    ஆங்கிலேயரிடம் இருந்து 1948-ம் ஆண்டு பிப்ரவரி 4-ம் தேதி இலங்கை விடுதலை பெற்றது. அதன் 75-வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

    கொழும்பு நகரில் உள்ள காலிமுக திடலில் பிரதான விழா கொண்டாட்டங்கள் நடந்தன. அதில், இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை இணை மந்திரி வி.முரளீதரன் கலந்து கொண்டார். இதற்காக 2 நாள் பயணமாக அவர் நேற்று முன்தினம் இலங்கை சென்றார்.

    சுதந்திர தின கொண்டாட்டத்தில் பங்கேற்றதுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, வெளியுறவுத்துறை மந்திரி அலி சாப்ரி ஆகியோரை வி.முரளீதரன் தனித்தனியாக சந்தித்தார். இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதுதொடர்பாக வி.முரளீதரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் அண்டை நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான பங்காளியாகவும், நம்பகமான நண்பராகவும் உள்ளது என பதிவிட்டுள்ளார்.

    இந்த 75-வது சுதந்திர தின விழாவை இலங்கையின் எதிர்க்கட்சிகள் புறக்கணித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கை அதிபரை சந்தித்த மத்திய மந்திரி முரளீதரன்

    ×