search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மந்திரி நவீன் பட்நாயக்"

    ஒடிசாவின் பலசோர் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல் மந்திரி நவீன் பட்நாயக், என் பதவியேற்பு விழாவுக்கு மோடி கண்டிப்பாக வரவேண்டும் என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். #LokSabhaElections2019 #NaveenPatnaik #PMModi
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலத்தின் பலசோர் பாராளுமன்ற தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் வீட்டுக்கு சென்ற பின்னரே நான் ஒடிசாவுக்கு வருவேன் என குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ஒடிசாவின் பலசோர் பாராளுமன்ற தொகுதியில் முதல் மந்திரி நவீன் பட்நாயக் தேர்தல் பிரசார கூட்டத்தில் இன்று பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:



    ஒடிசாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் வறட்சியை பார்வையிட பிரதமர் மோடி பார்வையிட வரவில்லை. அதை பார்வையிட அவருக்கு நேரமும் இல்லை.

    நடைபெற்று முடிந்த மூன்று கட்ட பாராளுமன்ற தேர்தலின் நிலவரத்தை வைத்துப் பார்த்தால், மே 23ம் தேதிக்கு பிறகு நீங்கள் ஆட்சியில் இருக்க மாட்டீர்கள். எனவே, நான் மீண்டும் முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு நீங்கள் கண்டிப்பாக வரவேண்டும் என கிண்டலாக தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #NaveenPatnaik #PMModi
    ஒடிசா முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.



    முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் நேற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து தேர்தல் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர். நவீன் பட்நாயக்கிடம் இருந்த கைப்பைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். #LokSabhaElections2019 #NaveenPatnaik
    ஒடிசாவின் கந்தமால் பகுதியில் லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். #OdishaTtruckAccident
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தின் கலிங்கி பகுதியில் இருந்து பிராமணிகாவ் நோக்கி மினி லாரி இன்று சென்று கொண்டிருந்தது. அதில் சுமார் 40க்கு மேற்பட்டோர் பயணம் செய்தனர். 

    பாலிகுடா காவல் சரகத்திற்கு உட்பட்ட பொய்குடா மலைப்பகுதியில் உள்ள ஒரு வளைவில் திருப்ப முற்பட்டபோது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டினை இழந்த லாரி பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விழுந்தது. 

    இந்த விபத்தில் 8 பேர் இறந்தனர்.  25 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு பெர்ஹாம்பூரில் உள்ள எம்.கே.சி.ஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக முதல் கட்ட தகவல் வெளியானது.

    இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து லாரி கவிழ்ந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    லாரி விபத்தில் பலியானோருக்கு முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். #OdishaTtruckAccident 
    ஒடிசாவில் மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் இதுவரை 9 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர். #OdishaBoatTragedy #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மாவட்டத்தில் உள்ள ஹசினா மற்றும் கண்ட்கிபூர் கிராமங்களில் இருந்து சுமார் 19 குடும்பத்தினர் புத்தாண்டை கொண்டாட ஹுகிடோலா தீவுக்கு நேற்று முன்தினம் சுற்றுலா சென்றனர். அவர்கள் சென்ற படகில் 6 ஆன்கள், 27 பெண்கள் மற்றும் 22 குழந்தைகள் பயணம் செய்தனர்.

    மகாநதி ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென படகு நிலைதடுமாறியது. இதில்  படகு நிலை தடுமாறி ஆற்றில் கவிழந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த அனைவரும்  நீரில் மூழ்கினர்.

    தகவலறிந்து கடலோர காவல் படையினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்களுடன் உள்ளூர் மீனவர்களும் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதில் 45 பேரை உயிருடன் மீட்டனர். 



    இந்நிலையில், இன்று அதிகாலை ஆற்றில் இருந்து 9 பேரின் உடல்களை மீட்புக்குழுவினர் மீட்டனர். மேலும், காணாமல் போன ஒருவரை தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    படகு விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ஒடிசா மாநில முதல் மந்திரி நவீன் பட்நாயக் ஆழ்ந்த இரங்கலை  தெரிவித்தார். விபத்தில் இறந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்றார்.
    #OdishaBoatTragedy #NaveenPatnaik
    பாராளுமன்ற தேர்தலில் மூன்றாவது அணிக்கு ஆதரவு திரட்டும் வகையில், ஒடிசா முதல் மந்திரி நவீன் பட்நாயக்கை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று சந்தித்தார். #ChandrasekharRao #NaveenPatnaik
    புவனேஷ்வர்:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அரசியல் கட்சிகள் முன்னேற்பாடு பணிகளில் இறங்கி உள்ளன. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் வெற்றிமுகம் காட்டிய காங்கிரஸ், அதே வேகத்தோடு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகிறது. 5 மாநில தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் மீதும், ராகுல்காந்தி மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது.
     
    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடும் நிலை உள்ளது.

    இதற்கிடையே, பா.ஜ.க அணியிலும், காங்கிரஸ் அணியிலும் சேராமல், மாநில கட்சிகள் ஒருங்கிணைந்து 3-வது அணி ஒன்றை அமைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங்கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் யோசனை தெரிவித்தார்.

    இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இதேபோல் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியையும் சந்தித்தார்.



    தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி உறுதியாகிவிட்ட போதிலும், 3-வது அணி அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ் தீவிரமாக இருப்பதாக கூறப்படுகிறது. பிராந்திய கட்சிகள் ஆதிக்கம் செலுத்தும் மாநிலங்களில் பா.ஜ.க மற்றும் காங்கிரசுக்கு எதிராக 3-வது அணி அமைத்து போட்டியிட்டால் அந்த அணியை மக்கள் ஆதரிப்பார்கள் என்று அவர் நம்புகிறார். இதுதொடர்பாக அவர் முக்கிய கட்சிகளின் தலைவர்களை சந்திக்க இருக்கிறார்.

    இந்நிலையில், தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் இன்று ஒடிசாவிற்கு சென்றார். தலைநகர் புவனேஷ்வரில் ஒடிசா முதல் மந்திரியை நேரில் சந்தித்தார். அவருக்கு நினைவு பரிசு அளித்தார். அப்போது மூன்றாவது அணி தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தினர்.

    இதையடுத்து, மேற்கு வங்காளத்தின் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, உ.பி.யில் சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #ChandrasekharRao #NaveenPatnaik
    ஒடிசா மாநில சட்டசபையில் விவசாயிகள் நலனுக்காக ரூ.10 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் இன்று நிறைவேற்றப்பட்டது. #OdishaCabinet #NaveenPatnaik #KALIAscheme
    புவனேஷ்வர்:

    ஒடிசா மாநில சட்டசபையில் விவசாயிகள் நலனுக்காக 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான காலியா திட்டம் அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் இன்று நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக முதல் மந்திரி நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    ஒடிசா மாநில சட்டசபையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க திட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. காலியா திட்டம் என அழைக்கப்படும் இத்திட்டம் 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

    இந்த திட்டத்தினால் ஒடிசாவில் உள்ள 32 லட்சம் விவசாயிகளில் 92 சதவீதம் பேர் பலனடைவார்கள். விவசாயிகளின் வறுமையைப் போக்கும் விதமாக அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    காலியா திட்டத்தின் மூலம் ஏழை விவசாயிகள் தாங்கள் வாங்கிய வங்கி கடன்களை அடைக்க முடியும். இந்த திட்டம் விவசாயிகளுக்கு ஆதரவானது மட்டுமின்றி நிலமற்றவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவுவது உள்ளிட்ட பல்வேறு பயன்களை பெறமுடியும் என தெரிவித்தார். #OdishaCabinet #NaveenPatnaik #KALIAscheme
    ×