search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் கடை"

    • மீன் அங்காடியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுவதற்காக சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.
    • நவீன அங்காடி திறக்கப்பட்டுவிட்டால் மீனவர்கள் சிரமமின்றி வரும் காலங்களில் வியாபாரம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    சென்னை பட்டினப்பாக்கத்தில் சாலையோர மீன் கடைகளை அப்புறப்படுத்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டதை தொடர்ந்து அந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன.

    இதையடுத்து பட்டினப்பாக்கம் கடற்கரை லூப் சாலையில் ரூ.9.97 கோடி மதிப்பீட்டில் நவீன மீன் சந்தையை கட்டுவதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதன்படி பல்வேறு வசதிகளுடன் கூடிய புதிய மீன் அங்காடி கட்டப்பட்டு வருகிறது.

    இந்த நவீன மீன் அங்காடி சுற்றுச் சுவருடன் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 366 மீன் கடைகள் கட்டும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. அங்கு மீனவர்களின் வசதிக்காக குடிநீர், கழிவறை வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளன.

    மீன்களை சுத்தம் செய்யவும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மீன் அங்காடியில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து வெளியேற்றுவதற்காக சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 110 கார்கள், 60 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தவும் இடம் தயாராகி வருகிறது.

    மீன் அங்காடிகளின் 9 சதவீத பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் 3 மாதத்தில் கடைகளை திறப்பதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.

    இதையடுத்து மீனவர்களுக்கு கடைகளை ஒதுக்கும் பணியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடங் கியுள்ளனர். இதுதொடர்பாக மீனவர்களுடன், அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    மீனவர்களுக்கு கடைகளை ஒதுக்குவது தொடர்பாக மீனவர்கள் சங்கம் சார்பில் கணக்கெடுக்கப்பட்டு மாநகராட்சியிடம் வழங்கப்பட்டுள்ளது. இதனை சரிபார்த்து மீனவர்களுக்கு கடைகளை ஒதுக்கீடு செய்யும் இறுதிக்கட்ட பணிகளையும் அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    இந்த நவீன அங்காடி திறக்கப்பட்டுவிட்டால் மீனவர்கள் சிரமமின்றி வரும் காலங்களில் வியாபாரம் செய்ய முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • தலைமறைவாகியுள்ள 3 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள அருள்புரத்தை சேர்ந்த ஜெயராஜ் என்பவரது மகன் மணி(வயது 29). இவர் பல்லடம் அருகே உள்ள வெட்டுப்பட்டான் குட்டை - நாரணாபுரம் ரோட்டில் மீன் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று அவரது கடைக்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல், மணியை அடித்து மிரட்டி அவர் வைத்திருந்த ரொக்கம் ரூ.4,500ஐ பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் மறைந்து விட்டனர். இதையடுத்து மணி பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அதே பகுதியில் சுற்றித்திரிந்த மதுரை, பெரியார் பஸ் நிலையம் அருகே வசிக்கும் சந்திரசேகர் என்பவரது மகன் நாகேந்திரன் என்கிற முத்துப்பாண்டி(36) என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகியுள்ள 3 பேரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

    ×