search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின் இணைப்பு துண்டிப்பு"

    • மின்வாரிய அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.
    • 21 செங்கல் சூளைகளுக்கு மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீசை வழங்கினர்.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் அருகே உள்ள மருதூர், காளம்பா–ளையம், கெம்மாரம்பா–ளையம் உள்பட பல்வேறு பகுதி–களில் 50-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வருகின்றன.

    அண்மையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் கோவை தடாகம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 124 செங்கல் சூளைகளை மூடி சீல் வைத்தன.

    இதேபோல் காரமடை மேற்கு பகுதிகளில் அனுமதியின்றி செங்கல் சூளைகள் இயங்கி வருவதாக மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.

    இதனையடுத்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகளின் மின் இணைப்பினை துண்டிக்க அறிவுறுத்தியது.

    அதன் அடிப்படையில் நேற்று தாயனூர் தெற்கு மின்வாரிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 16 சூளைகள், தேக்கம்பட்டி மின்வாரிய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 5 சூளைகள் என மொத்தமாக அனுமதியின்றி செயல்பட்டு வரும் 21 செங்கல் சூளைகளுக்கு மின்வாரிய அதிகாரிகள் எச்சரிக்கை நோட்டீசை வழங்கினர்.

    அந்த எச்சரிக்கை நோட்டீசில் அனுமதி இன்றி இயங்கி வரும் தங்களது செங்கல் சூளைக்கான மின் இணைப்பு கடிதம் கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்திற்குள் துண்டி–ப்பு செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்ப–ட்டுள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை முதலே அனும–தியின்றி செயல்பட்டு வரும் 21 செங்கல் சூளைகளின் மின் இணைப்பினை மின்வாரிய துண்டித்து வரும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தாயனூர் மின்வாரிய அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால் செங்கல் சூளை அதிபர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

    • அதிகாரி திடீர் ஆய்வு
    • சுற்றுச் சூழலை மாசுப்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் வாணியம்பாடி பகுதியில் உள்ள தனியார் தோல் தொழிற்சாலைகளில் திடீர் ஆய்வு செய்தார்.

    அப்போது தனியார் தொழிற்சாலை ஒன்று கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் பாலாற்றில் வெளியேற்றி வருவது தெரியவந்தது.

    அதன் காரணமாக அந்த தொழிற்சாலையின் மின் இணைப்பை துண்டிக்க கலெக்டருக்கு அவர் பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து தோல் தொழிற்சாலையின் மின் இணைப்பினை துண்டிக்க கலெக்டர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து தொழிற்சாலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    மேலும் தோல் பதனிடும் தொழிற்சாலைகள் கழிவு நீர் அல்லது திடக்கழிவுகளை நிலத் திலோ, நீர் நிலைகளிலோ வெளியேற்றினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மூடுதல் உத்தரவு அளிக்கப்பட்டு, சுற்றுச் சூழலை மாசுப்படுத்தியதற்கான அபராதத்தொகை விதிக்கப்படும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் எச்சரித்துள்ளார்.

    • அனுமதி பெறாத, விதிமீறல் சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
    • குடோன், வீடுகளை வாடகைக்கு பெற்று சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்களை இயக்குகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூரில் மாசுகட்டுப்பாடு வாரிய அனுமதி பெறாத, விதிமீறல் சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.நகர பகுதிகளில் குடோன், வீடுகளை வாடகைக்கு பெற்று சாய ஆலை, பிரின்டிங் நிறுவனங்களை இயக்குகின்றனர்.சுத்திகரிக்காத சாயக்கழிவுநீரை அருகில் செல்லும் சாக்கடை கால்வாய், நீர் நிலைகளில் திறந்து விடுகின்றனர்.

    இதை ஆய்வு செய்ய மாசுகட்டுப்பாடு வாரிய மாவட்ட பொறியாளர் (வடக்கு) சரவணகுமார், பறக்கும்படை பொறியாளர் பழனிசாமி, உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் பாரதிராஜா உட்பட அதிகாரிகள் குழுவினர், பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் விதிமீறல் நிறுவனங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இதில் சாமுண்டிபுரத்தில் அருகருகே இயங்கிய இரண்டு பிரின்டிங் நிறுவனங்கள் சிக்கின. டேபிள் பிரின்டிங் எந்திரங்களை நிறுவியுள்ள இந்நிறுவனங்கள் மாசுகட்டுப்பாடு வாரியத்தில் அனுமதி பெறவில்லை.சுத்திகரிக்காத பிரின்டிங் கழிவுநீரை அருகில் உள்ள சாக்கடை கால்வாயில் திறந்துவிட்டுள்ளன.அதேபோல் கொங்கு மெயின் ரோடு, திருநீலகண்டபுரத்தில் அனுமதி பெறாமல் இயங்கிய சாய ஆலையும் பிடிபட்டது. எந்த அனுமதியும் பெறாத இந்த ஆலை 5 கிலோ கொள்ளளவுள்ள விஞ்ச் எந்திரத்தை நிறுவி, துணிக்கு சாயமேற்றியதோடு சாயக்கழிவுநீரை விதிமீறி வெளியே திறந்துவிட்டதும் தெரியவந்தது.

    அனுமதி பெறாமல் இயங்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்திய 2 பிரின்டிங், ஒரு சாய ஆலையின் மின் இணைப்பு துண்டிக்க மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரைத்தனர். ஒருங்கிணைப்புக்குழு தலைவரான கலெக்டர் வினீத் உத்தரவுப்படி, 3 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. 

    • நீர் நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் சாய கழிவு நீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகளை கண்டறிந்து, அவற்றிற்கு அபராதம் விதித்து, சீல் வைத்து மூடி வருகின்றனர்.
    • அனுமதி பெறாமல் கழிவுநீரை வெளியேற்றியதாக இதுவரை 144 சாயப்பட்டறைகளின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் சாய கழிவு நீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகளை கண்டறிந்து, அவற்றிற்கு அபராதம் விதித்து, சீல் வைத்து மூடி வருகின்றனர். மேலும் திருமணிமுத்தாற்றில் கழிவு நீரை திறந்து விடும் சாயப்பட்டறைகளுக்கு அபராதம் விதித்து, மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம் மற்றும் உதவி பொறியாளர்கள் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தி, விதிமுறைகளை மீறும் சாயப்பட்டறைகள், சேகோ ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நடப்பாண்டில் அனுமதி பெறாமல் கழிவுநீரை வெளியேற்றியதாக இதுவரை 144 சாயப்பட்டறைகளின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  

    சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றிய 5 சாயப்பட்டறைகளுக்கு ரூ.29.92 லட்சம், ஒரு சேகோ ஆலைக்கு ரூ.2.12 லட்சம், கழிவுகளை பொது வெளியில் கொட்டிய ஒரு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.33.04 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த 7 ஆலைகளின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்த 3 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. 

    இது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் சாயப்பட்ட றைகள் கண்காணிக்கப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாசுக்கட்டுப்பாடு வாரி யத்தின் அனுமதி பெறாமல், சாயப்பட்டறையின் கழிவு  நீரை வெளியேற்றினால் அந்த பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். தொடர்ந்து அந்த பட்டறை மூடப்படும்.

    கழிவு நீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாத நிறுவனங்கள் மீது அபராதம் விதித்து, அவை மூடப்படும். முறையாக அனுமதி பெறாமல் சாயப்பட்டறையை வாடகைக்கு விட்டால், அதன் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும். அவரிடமிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×