என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மிதமான மழை"
- தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் திருப்பூரில் வெயில் அதிகரித்திருக்கிறது.
- சில நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்
திருப்பூர்
தென் மேற்கு பருவமழை பொய்த்த நிலையில் திருப்பூரில் வெயில் அதிகரித்திருக்கிறது. அதிகபட்சம் 30 முதல் 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தின் கோவை காலநிலை ஆராய்ச்சி மையம் மற்றும் கோவை வேளாண் காலநிலை ஆராய்ச்சி நிலையத்தினர் இணைந்து வெளியிடும் வானிலை அறிக்கையில், வரும் நாட்களில் திருப்பூரில் அதிகபட்சம் 32 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரை வெயில் நிலவும். இரவில் 22 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும். சராசரியாக மணிக்கு 17 கி.மீ., வேகத்தில் காற்றின் வேகம் இருக்கும். சில நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேக மூட்டம் மற்றும் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் என்பதால் பயிர் சத்துகள் உறிஞ்சுவது குறைவாக காணப்படும்.
எனவே வேப்ப புண்ணாக்கு கலந்த தழைச்சத்து உரங்களை இட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
- காலை 5 மணி முதல் சின்ன சேலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
- இன்று காலை மழை குறுக்கிட்டதால் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவநிலை மாற்றம் காரணமாக மழை பொழிந்து கொண்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். இன்று காலை 5 மணி முதல் சின்ன சேலம் பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது பிறகு காலை 6 மணி முதல் சின்னசேலத்தில் விட்டு விட்டு மிதமான மழை பொழிந்தது இன்று கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால் காலையிலே கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்று பக்தர்கள் எண்ணிக் கொண்டிருந்த நிலையில் இன்று காலை மழை குறுக்கிட்டதால் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பிறகு காலை 10 மணிக்கு மழை நின்றதால் பக்தர்கள் கோவிலுக்கு சென்று கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடு செய்து வந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்