search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மஹாசிவராத்திரி"

    • மஹாசிவராத்திரியினை முன்னிட்டு மார்ச் 8 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை
    • மார்ச் 08 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் 23 அன்று வேலை நாளாக அறிவிப்பு

    மஹாசிவராத்திரியினை முன்னிட்டு மார்ச் 8 (வெள்ளிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

    மார்ச் 08 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2024 மார்ச் 23 (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது

    கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மஹாசிவராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலாவணி முறிச் சட்டம் 1881-இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் மார்ச் 8 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள், அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துளளார். 

    • பொங்கல் என்பது அறுவடைத் திருநாள்.
    • சத்குருவின் வழிகாட்டுதலில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருவேறு சாதனாக்களும் விரதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    ஆன்மீக பாதையில் பயணிப்பவர்களுக்கு உத்தராயண காலம் என்பது மிகவும் முக்கியமான காலம் . பூமியின் வடக்கு பாகத்தில், சூரியன் பயணிக்கும் 6 மாத காலகட்டத்தை உத்தராயணம் என்று குறிப்பிடுகிறோம்.

    அருளையும் ஞானத்தையும் உள்வாங்கிக் கொள்வதற்கு இது மிகச் சரியான நேரம். அதிலும் குறிப்பாக உத்தராயணத்தின் முதல் பாதி அதாவது மார்ச் மாதம் முடியும் வரை அதிகபட்சமான அருளைப் பெறுவதற்கு மிகச் சிறப்பான நேரம்.

    தட்சிணாயணம் தூய்மைப்படுத்துவதற்கானது. உத்தராயணம் ஞானமடைதலுக்கானது. இது உள்வாங்குதலுக்கான காலம், அருளைப் பெறுவதற்கும் ஞானமடைவதற்கும் உகந்தது, மற்றும் உச்சபட்ச தன்மையை எட்டுவதற்கான காலம் இந்த நேரத்தில் விவசாய அறுவடையும் நடைபெறுகிறது.

    பொங்கல் என்பது அறுவடைத் திருநாள். ஆகவே, இது உணவு தானியங்களை அறுவடை செய்வதற்கான காலம் மட்டுமன்றி, மனித ஆற்றலை அறுவடை செய்வதற்கும் உகந்த காலமாக இருக்கிறது. இப்படிப்பட்ட உத்தராயணத்தின் தொடக்கத்தில், விழிப்புணர்வுடன் அருளை உள்வாங்கும் தன்மையை மக்களிடம் அதிகரிப்பதற்காக ஈஷாவில் குறிப்பிட்ட ஒரு வாய்ப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது. அது தான் சிவாங்கா சாதனா. சத்குருவின் வழிகாட்டுதலில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் இருவேறு சாதனாக்களும் விரதங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த சாதானாவில் இருக்கும் பெண்கள் 21 நாட்கள் விரதமிருந்து, மாலை அணிந்து மிக விசேஷமான தைப்பூச தினத்தன்று தேவி லிங்கபைரவியை தரிசித்து, தொழுது விரதத்தை பூர்த்தி செய்வார்கள். ஆண்களோ, 42 நாட்கள் விரதமிருந்து மஹாசிவராத்திரி இரவில் வெள்ளியங்கிரி மலையில் யாத்திரை செய்து மறுநாள் காலை தியானலிங்க வளாகத்தில் விரதத்தை நிறைவு செய்வார்கள். இந்த வாய்ப்பு அருள் தேடும் அனைவருக்கும்– ஈஷாவில் வகுப்பு செய்தோர், செய்யாதவர், எல்லோருக்கும் வழங்கப்படுகிறது.

    சிவாங்கா சாதனாவின் அடுத்த தீட்சை குறித்த கூடுதல் தகவல்களுக்கு +9183000 83111 என்ற எண்ணையும், info@shivanga.org என்கிற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம் மேலும் சிவாங்கா சாதனாவில் பங்கேற்ற தன்னார்வலர்கள் ஆதியோகி ரத யாத்திரையிலும் பங்கேற்று வருகின்றனர். ஆதியோகி ரதயாத்திரையானது தற்போது தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது. இது மார்ச் 8 ஆம் தேதி மஹாசிவராத்திரி அன்று கோவையில் உள்ள ஈஷா யோக மையத்தை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது.
    • ஜன 18 ஆம் தேதி முதல் ஜன 29 ஆம் தேதி வரை இந்த ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவை ஈஷா யோக மையத்தில் இருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பிப் 11 ஆம் தேதி முதல் பிப்19 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது. மேலும், கோவை ஈஷா யோக மையத்தில் மார்ச் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் மஹாசிவராத்திரி விழாவை சேலத்தில் நேரலையாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு சேலத்தில் இன்று (10-02-2024) நடைபெற்றது. இதில் தென்கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர்கள் திரு. ஸ்ரீனிவாசன் மற்றும் திரு. பாலாஜி ஆகியோர் பங்கேற்று பேசியதாவது:

    "கோவை ஈஷா யோக மையத்தில் மஹா சிவராத்திரி விழா 30 ஆவது ஆண்டாக மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதனை ஒட்டி, தென் கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ரத யாத்திரை கோவையில் உள்ள ஆதியோகி முன்பு கடந்த ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. 4 ஆதியோகி ரதங்களை உள்ளடக்கிய இந்த யாத்திரையை பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள் தொடங்கி வைத்தார். அங்கிருந்து புறப்பட்ட ஒரு ரதம் பிப் 11 அன்று தர்மபுரி மாவட்டத்தை வந்தடைய இருக்கிறது. பின்னர் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாலக்கோடு, காவேரிப்பட்டிணம் பர்கூர், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் பிப் 19 ஆம் தேதி வரை வலம் வர இருக்கிறது. முன்னதாக, சேலம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜன 18 ஆம் தேதி முதல் ஜன 29 ஆம் தேதி வரை இந்த ரதம் வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.

    ரதம் பயணிக்கின்ற ஊர்களில் இருக்கும் பெருமக்கள் இந்த யாத்திரையை வரவேற்று தொடங்கி வைக்கின்றனர். அதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். கோவைக்கு நேரில் வந்து தரிசிக்க முடியாத மக்கள் அவர்கள் இருக்கும் இடத்தின் அருகிலேயே ஆதியோகியை தரிசித்து அருள் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.

    இதோடு, சிவ யாத்திரை என்னும் பாத யாத்திரையையும் சிவாங்கா பக்தர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து சிவன் திருவுருவம் தாங்கிய 7 தேர்களை இழுத்தபடி மொத்தம் 7 குழுக்களாக, வருகின்றனர். இந்த யாத்திரை பிப் 23 அன்று சேலத்தை வந்தடைகிறது.

    மேலும் கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவாரத்திரி நடக்கும் அதே வேளையில், மற்ற ஊர் மக்களும் பயன்பெறும் வகையில் தமிழகத்தில் மொத்தம் 36 இடங்களில் மஹாசிவராத்திரி நேரலைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம், கருப்பூர் அரசு இன்ஜினியரிங் கல்லூரிக்கு எதிரே அமைந்துள்ள லிங்க பைரவி கோவிலில் வரும் மார்ச் 8 ஆம் தேதி மாலை 6 மணி முதல் மார்ச் 9ஆம் தேதி அதிகாலை 6 மணி வரையில் ஈஷா மஹாசிவராத்திரி விழா நேரலை செய்யப்பட உள்ளது. மேலும் அன்றைய நாள் இரவு முழுவதும் லிங்க பைரவி கோவில் தரிசனத்திற்காக திறந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மக்களுக்கும் மஹா அன்னதானமும் வழங்கப்பட இருக்கிறது.

    இதை போலவே, தர்மபுரியில் பாரதி புரம், சேலம் மெயின் ரோட்டில் அமைந்துள்ள மதுரபாய் திருமண மண்டபத்திலும், ஓசூரில் ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, சப் ஜெயில் எதிரில் உள்ள மீரா மஹாலிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது .
    • ரதம் மதுரையை அடுத்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளது.

    மஹாசிவராத்திரியை முன்னிட்டு கோவையிலிருந்து புறப்பட்ட ஆதியோகி ரதம் மதுரை வந்தடைந்தது. இந்த ரதம் வரும் 26 - ஆம் தேதி வரை மதுரை நகரின் பல்வேறு பகுதிகளில் வலம் வர உள்ளது.

    இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பு மதுரை செய்தியாளர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் தினேஷ்வர் பங்கேற்று கூறியதாவது:-

    கோவை ஈஷா யோக மையத்தில் மஹாசிவராத்திரி விழா ஆண்டுதோறும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது . இதையொட்டி தென்கயிலாய பக்தி பேரவை சார்பில், மஹாசிவராத்திரி விழாவிற்கு பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கும் விதமாக ஆண்டுதோறும் ஆதியோகி ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான யாத்திரை கோவையிலிருந்து நான்கு ஆதியோகி ரதங்களுடன் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கியது.

    அங்கிருந்து புறப்பட்ட ஒரு ஆதியோகி ரதம் பல்வேறு ஊர்களை கடந்து, 21 ஆம் தேதி இரவு மதுரையை வந்தடைந்தது. இந்த ரதம் திருப்பரங்குன்றம், ஆரப்பாளையம், திருமங்கலம், கூடல் நகர், அலங்காநல்லூர், அழகர் கோவில், மாட்டுத் தாவணி, பிபி குளம், மாசி வீதிகள் மற்றும் தெப்பக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வரும் 26 ஆம் தேதி வரை வலம் வர உள்ளது.

    கோவைக்கு வந்து ஆதியோகியை நேரில் தரிசிக்க முடியாத மக்கள் தங்கள் ஊர்களிலேயே ஆதியோகியை தரிசித்து அவரின் அருளைப் பெறுவதற்கு இந்த ரத யாத்திரை சிறந்த வாய்ப்பாக உள்ளது.

    இந்த ரதம் மதுரையை அடுத்து விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளுக்கு செல்ல உள்ளது.

    கோவையில் இருந்து புறப்பட்ட நான்கு ரதங்களும் ஒவ்வொரு திசையில் பயணித்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வலம் வந்த பின்னர் மஹா சிவராத்திரி நாளன்று கோவை ஈஷா யோக மையத்தை வந்தடைய உள்ளது. ஆதியோகி திருமேனியுடன் கூடிய இந்த ரதங்கள் தமிழகம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் கி.மீ தூரம் பயணிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு மஹாசிவராத்திரி விழா பொது மக்கள் கலந்து கொள்ளும் வகையில் மதுரையிலும் நடைபெற உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தைப்பூசம், மஹாசிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி என வருடாந்திர நிகழ்வுகள் விஞ்ஞான முறையிலும் மெய்ஞான முறையிலும் நம்மை மெருகேற்ற உதவும் நாட்களாகும்.
    • இன்று உலகமே கவனிக்கும் விதமாக ஈஷா மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சிகரமானது.

    ஆன்மீகம் வழிநடத்தும் இந்த பாரத கலாச்சாரத்தில் வழிபாடு என்பது மிக முக்கியமான கருவியாக உள்ளது. கடவுள் வழிபாடு நமக்கான பொருட்தேவைகளுக்காக என்பதைத்தாண்டி அது உள்நிலை வளர்ச்சிக்காகவும், முக்தியை நோக்கியும் இருந்து வந்துள்ளது.

    ஆன்மீகப் பாதையின் ஒவ்வொரு செயலும் நம்மை முக்தி நோக்கோடு பயணிக்க வைக்கும். அப்படித்தான் வருடத்தின் எல்லா நாட்களுமே அதற்கான விஞ்ஞான பூர்வமான பின்புலத்தோடு மெய்ஞானத்தை நமக்கு வழங்கும். ஒரு மாதத்தின் பௌர்ணமி, அமாவாசை, ஏகாதசி, பிரதோஷம் உள்ளிட்ட நாட்கள் உடலை சமநிலைப்படுத்தி ஆன்மீகப் படிகளை எடுக்க ஏதுவான நாட்கள் என்பது பரவலாக நம் அனைவருக்குமே தெரியும். ஒவ்வொரு மாதமும் சிவராத்திரி, ஏகாதசி என விசேஷ நாட்கள் வந்தாலும், வருடத்திற்கொருமுறை வரும் மஹாசிவராத்திரி, குரு பெளர்ணமி ஆகியவை நம் உள்நிலை வளர்ச்சிக்கு உகந்தவை என கருதப்படுகிறது.

    தைப்பூசம், மஹாசிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி என வருடாந்திர நிகழ்வுகள் விஞ்ஞான முறையிலும் மெய்ஞான முறையிலும் நம்மை மெருகேற்ற உதவும் நாட்களாகும். அப்படி இந்த மாசி மாதத்தில் வருவதுதான் மஹாசிவராத்திரி. பண்டைய காலத்தில் மிக விமரிசையாக கொண்டாடப்பட்ட மஹாசிவராத்திரி, காலமாற்றத்தில் காணாமலே போய்விட்டது எனுமளவிற்கு குறைந்துபோனது. அப்படியே அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தாலும், அதில் யாரோ ஒரு சில பெரியவர்கள் அமர்ந்து கதாகாலட்சேபம் கேட்டு பஜனை பாடுவார்கள். வீட்டில் சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் கூட சம்பிரதாயமாக இருப்பதைப்போல சூழல் உருவாகியுள்ளது. மஹாசிவராத்திரியின் மகத்துவத்தை முழுமையாக புரியாமலேயே கடந்த சில தலைமுறையினர் சென்றுவிட்டது பெருஞ்சோகம்.

    பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஈஷா மேற்கொண்ட சீரிய முயற்சிகளால் மஹாசிவராத்திரி தற்போது கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இன்று உலகமே கவனிக்கும் விதமாக ஈஷா மஹாசிவராத்திரி விழா கொண்டாடப்படுவது மிகவும் மகிழ்ச்சிகரமானது. வயது, பாலினம், இனம் என எவ்வித பேதங்களும் இல்லாமல் ஒட்டுமொத்த மக்களும் இரவு முழுக்க விழித்திருந்து சிவநாமம், மந்திர உச்சாடனைகள் செய்து அந்த சக்திமிக்க இரவை பயனுள்ள வகையில் கழிக்கிறார்கள்.

    மஹாசிவராத்திரி குறித்த பெரும்பாலான கட்டுரைகளில் பொருள் வளம், செல்வ வளம் மற்றும் அதைச்சார்ந்த நன்மைகள் குறித்து சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அதன் பின்னுள்ள அற்புதமான விஞ்ஞானமும், அதனூடே உள்ள மெய்ஞானமும் அடியோடு மறக்கப்பட்டிருக்கிறது அல்லது மறைக்கப்பட்டிருக்கிறது. இந்த காலத்து ஆன்மீக அமைப்புகள் இந்த விஞ்ஞான அடிப்படைகளை சொல்லித்தந்ததால் தர்க்கரீதியான இன்றைய தலைமுறை அதனை கவனிக்கிறார்கள்.

    முதுகுத்தண்டு நேராக வைத்திருத்தல் இந்த நாளின் சிறப்பை நாமும் கிரகித்துக் கொள்ளலாம் என்பது அனைவரும் புரிந்துகொண்டு செய்யக்கூடியதாக இருக்கிறது. அதோடு ஈஷா நடத்தும் மஹாசிவராத்திரி விழாவில் அந்த இரவைக் கழிக்க ஆன்மீகம், உற்சாகமான ஒரு விஷயமாக தெம்பூட்டும் ஒரு நிகழ்வாக வழங்கப்படுகிறது. இசை, நடனம், மந்திர உச்சாடனைகள் மற்றும் மஹா அன்னதானம் என இனிய இரவாக இருப்பதால் கூட்டம் கூட்டமாய் லட்சக்கணக்கில் ஈஷாவிற்கு வருகிறார்கள் இந்த மண்ணின் சாமானிய மனிதர்கள். குறிப்பாக, அதிகளவில் இளைஞர்களை ஆன்மீகம் நோக்கி ஈர்க்கும் விழாவாக இது மாறியுள்ளது.

    ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் ஜாதி, மத வேறுபாடு இன்றி யார் வேண்டுமானால் கலந்து கொள்ள முடியும். விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்கை பயன்படுத்தி முன்பதிவும் செய்து கொள்ளலாம்

    https://isha.sadhguru.org/mahashivratri/attend-in-person/

    இந்த கலாச்சாரத்தின் அற்புதமான நெறிமுறைகளை, ஆன்மீக சாராம்சங்களை உணர்ந்து நம் வாழ்வினை கொண்டாட்டமாக நடத்திட ஈசனின் அருள் நமக்கு உதவும்.

    ×