search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை ஆசாமிகள்"

    • நானும் மிகப்பெரிய ரவுடிதான்வியாபாரிகளை மிரட்டிய போதை ஆசாமிகள்
    • பொன்னமராவதி போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்

    பொன்னமராவதி,  

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஸ்டேட் பாங்க் வங்கி அருகே மறவாமதுரை சேர்ந்த பெருமாள் என்பவர் மோட்டார் உதிரிபாக விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்த 2 இளைஞர்கள் பெருமாள் நிறுத்தி இருந்த மஞ்சள் நிற ஸ்கூட்டியை சேதப்படுத்திவிட்டு கடைக்குச் சென்று நாங்கள் பெரிய ரவுடி என்றும், தாங்கள் காலில் அணிந்திருந்த செருப்பை காணவில்லை. உனது கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை தனக்கு காட்டு, என்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

    சத்தம் கேட்ட பக்கத்து கடையே சேர்ந்த பாத்திர கடை உரிமையாளர் வெங்கடேசன்,பாலு ஆகியோர் வந்துள்ளனர். இதனை கண்ட அந்த இளைஞர்கள் பீர் பாட்டில்களை உடைத்து கையில் வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதி கடைக்காரர்கள், பொதுமக்கள் கூடியதை கண்டு, அந்த இளைஞர்கள் இருவரும் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

    இது குறித்து பெருமாள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த விசாரணை மேற்கொண்ட பொன்னமராவதி போலீசார் அந்த இளைஞர்களை தேடி சென்று, புதுப்பட்டி செய்கை ஊரணி பிடித்தனர்.

    அப்போது போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த முற்பட்டபோது, நாங்க மிகப்பெரிய ரவுடி என்று மிரட்டி உள்ளனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது, அங்கிருந்த பெண் போலீசாரையும், தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர்.

    பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுக்கா ஆர் பாலகுருச்சியை சேர்ந்த பிரகாஷ் பாபு, திருப்பத்தூர் தாலுகா ஆவினிபட்டி அஞ்சல் ,செவினிப்பட்டியைச் சேர்ந்த ஹரிஷ் பாபு என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து 2 பேர் மீதும் வழக்கு பதிந்த பொன்னமராவதி போலீசார், அவர்களை கைது செய்து திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் புனரமைக்கப்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது.
    • வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்கள் பஸ் நிலையத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

    திருப்பூர்:

    திருப்பூரில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் உள்ளன. இங்கு தமிழகம் மட்டுமின்றி வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்து வருகின்றனர். பனியன் நிறுவன தொழிலாளர்களுக்கு வாரந்தோறும் சனிக்கிழமை சம்பளம் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை விடப்படுகிறது. சம்பள பணத்தை வாங்கும் தொழிலாளர்கள் சிலர் மது குடித்து பணத்தை செலவழித்து விடுகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று ஒரே நாள் இரவில் திருப்பூர் கலைஞர் மத்திய பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே மது அருந்தி விட்டு போதையில் தொழிலாளர்கள், இளைஞர்கள் சிலர் படுத்து கிடந்தனர். திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் புனரமைக்கப்பட்டு கடந்த 5 மாதங்களுக்கு முன்புதான் திறக்கப்பட்டது. பஸ் நிலையத்திற்கு கலைஞர் மத்திய பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. நவீன முறையில் கட்டப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையம் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆனால் குடிமகன்கள் பஸ் நிலையத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். சில மாதங்களுக்கு முன்பு போதையில் இளம்பெண் ஒருவர் பஸ் நிலையத்தில் படுத்து கிடந்த முதியவர் ஒருவரை சரமாரி தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன்பிறகும் வழிப்பறி மற்றும் சமூக விரோத செயல்கள் பஸ் நிலையத்தில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

    விடுமுறை நாளான நேற்று பஸ் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் பாதை மற்றும் பஸ்கள் நிற்கும் பகுதி, வளாகம் உள்ளிட்ட இடங்களில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போதை மயக்கத்தில் ஆடைகள் களைந்து அலங்கோலமாக படுத்து கிடந்தனர். இதனால் பஸ் நிலையத்திற்கு வந்த பெண்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது.

    இது குறித்து பயணிகள் கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை தோறும் திருப்பூர் பழைய பஸ் நிலையத்தில் குடிமகன்கள் அட்டகாசம் மிகவும் அதிகமாக உள்ளது. ஆங்காங்கே ஆடைகள் களைந்து போதையில் விழுந்து கிடக்கின்றனர். இதனை தடுக்க போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பது இல்லை. இதனால் குடிமகன்களின் அட்டகாசம் தொடர்ந்து நீடிக்கிறது என்றனர்.

    ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், சனிக்கிழமை சம்பளம் வாங்கியதும் தொழிலாளர்கள் சிலர் மது குடித்தே பணத்தை செலவு செய்து விடுகின்றனர். திங்கட்கிழமை வேலைக்கு வராமல் உள்ளதால் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த நிலைமை திருப்பூரில் தொடர்ந்து நீடிக்கிறது. எனவே திருப்பூரில் மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்றனர்.

    • விருத்தாசலத்தில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த போதை ஆசாமிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • தப்பியோடிய தங்கதுரை என்பவரை விருத்தாசலம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    மயிலாடுதுறையிலிருந்து சேலம் நோக்கி நேற்றிரவு 2 மணி அளவில் அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநர் ஆலயமணி இயக்கி சென்றுள்ளார். விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் அருகே பேருந்து வந்த போது, அங்கு நடந்துச்சென்று கொண்டிருந்த 3 போதை ஆசாமிகள் பஸ்சினை வழிமறித்து நிறுத்தி, டிரைவர் மற்றும் கண்டக்டரிடம் தகராறு செய்தனர். இதனையடுத்து பஸ்சில் இருந்த பயணிகள் போதை ஆசாமிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் சாலையில் கிடந்த கல்லை எடுத்து பஸ்சின் கண்ணாடி மீது வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிச்சென்றனர். இதனால் பஸ்சின் முன்புற கண்ணாடி சேதமடைந்தது. இதனையடுத்து அங்கு விரைந்து வந்த விருத்தாசலம் போலீசார், சம்பவத்தில் ஈடுபட்ட போதை ஆசாமிகளை மடக்கி பிடித்தனர். அதன்படி மணவாள நல்லூரை சேர்ந்த அன்புச்செல்வன் என்ற மூசா (வயது 20), சரவணன் என்ற அப்பு (20) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். தப்பியோடிய தங்கதுரை என்பவரை விருத்தாசலம் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ரெயில்வே தண்டவாளம் பகுதியில், மது, கஞ்சா பயன்படுத்தும் நபர்கள் தேவையில்லாமல் சுற்றி வந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
    • ஒதுக்குப்புறமான பகுதியாக உள்ளதால் கஞ்சா ஆசாமிகளும், சட்ட விரோத செயல்களும் அதிகரித்து வருகிறது.

    உடுமலை:

    கோவை- திண்டுக்கல் வழித்தடத்தில்உடுமலை- கொழுமம் ரெயில்வே கேட் பகுதியில் தண்டவாள சந்திப்பு பகுதியில் சிறிய அளவிலான ஜல்லி கற்கள் காணப்பட்டது. இதனை கண்ட ரெயில்வே ஊழியர்கள் உடனடியாக கற்களை அப்புறப்படுத்தினர். இச்சம்பவத்தால் ரெயில்வே போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் இல்லை. இது குறித்து ரெயில்வே போலீசார் கூறியதாவது: -

    ரெயில்வே வழித்தடம் அருகில், டாஸ்மாக் கடை உள்ளதால், தண்டவாளம் பகுதியில் அமர்ந்து பலர் மது அருந்தி வருகின்றனர். மேலும் ஒதுக்குப்புறமான பகுதியாக உள்ளதால் கஞ்சா ஆசாமிகளும், சட்ட விரோத செயல்களும் அதிகரித்து வருகிறது. இது சதிச்செயலாக இருக்க வாய்ப்பில்லை. தண்டவாளத்திற்கு மேல் பெரிய அளவிலான கல் வைத்தால் மட்டுமே, சதிச்செயலாக கருத முடியும். கேட் பகுதியில், தண்டவாளம் மற்றும் ரோட்டில் உள்ள இரும்பு பகுதிக்கு இடையில் ஜல்லிக்கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், போதை குடிமகன்கள் யாராவது இதனை செய்திருக்கலாம். ரெயில்வே வழித்தடத்தில், கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும். ரெயில்வே தண்டவாளம் பகுதியில், மது, கஞ்சா பயன்படுத்தும் நபர்கள் தேவையில்லாமல் சுற்றி வந்தால், அவர்கள் கைது செய்யப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். கற்களை அகற்றும் வகையில், ரெயில்வே கேட் சிறிது நேரம் மூடப்பட்டதால் சாலை போக்குவரத்து பாதித்தது.

    ×