search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வியாபாரிகளை மிரட்டிய போதை ஆசாமிகள்
    X

    வியாபாரிகளை மிரட்டிய போதை ஆசாமிகள்

    • நானும் மிகப்பெரிய ரவுடிதான்வியாபாரிகளை மிரட்டிய போதை ஆசாமிகள்
    • பொன்னமராவதி போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்

    பொன்னமராவதி,

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஸ்டேட் பாங்க் வங்கி அருகே மறவாமதுரை சேர்ந்த பெருமாள் என்பவர் மோட்டார் உதிரிபாக விற்பனை கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு இருசக்கர வாகனத்தில் குடிபோதையில் வந்த 2 இளைஞர்கள் பெருமாள் நிறுத்தி இருந்த மஞ்சள் நிற ஸ்கூட்டியை சேதப்படுத்திவிட்டு கடைக்குச் சென்று நாங்கள் பெரிய ரவுடி என்றும், தாங்கள் காலில் அணிந்திருந்த செருப்பை காணவில்லை. உனது கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை தனக்கு காட்டு, என்று ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

    சத்தம் கேட்ட பக்கத்து கடையே சேர்ந்த பாத்திர கடை உரிமையாளர் வெங்கடேசன்,பாலு ஆகியோர் வந்துள்ளனர். இதனை கண்ட அந்த இளைஞர்கள் பீர் பாட்டில்களை உடைத்து கையில் வைத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதி கடைக்காரர்கள், பொதுமக்கள் கூடியதை கண்டு, அந்த இளைஞர்கள் இருவரும் தாங்கள் வந்த இருசக்கர வாகனத்தை அதே இடத்தில் விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

    இது குறித்து பெருமாள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த விசாரணை மேற்கொண்ட பொன்னமராவதி போலீசார் அந்த இளைஞர்களை தேடி சென்று, புதுப்பட்டி செய்கை ஊரணி பிடித்தனர்.

    அப்போது போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்த முற்பட்டபோது, நாங்க மிகப்பெரிய ரவுடி என்று மிரட்டி உள்ளனர். அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போது, அங்கிருந்த பெண் போலீசாரையும், தகாத வார்த்தையால் திட்டி உள்ளனர்.

    பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுக்கா ஆர் பாலகுருச்சியை சேர்ந்த பிரகாஷ் பாபு, திருப்பத்தூர் தாலுகா ஆவினிபட்டி அஞ்சல் ,செவினிப்பட்டியைச் சேர்ந்த ஹரிஷ் பாபு என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து 2 பேர் மீதும் வழக்கு பதிந்த பொன்னமராவதி போலீசார், அவர்களை கைது செய்து திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×