search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் போலீசார்"

    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தகவல்
    • ஒரு மாதத்தில் மட்டும் 35 பவுன் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகரில் ஓடும் பஸ்சில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 35 பவுன் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் தனி கவனம் செலுத்தி நட வடிக்கை மேற்கொண்டு வரு கிறார். கொள்ளை யர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பெண்களிடம் பெண் கொள்ளையர்கள் கைவரிசை காட்டுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து வரும் பெண் கொள்ளை யர்கள் கூட்டம் நெரிசல் அதிகமாக உள்ள பஸ்களில் கைவரிசை காட்டிவிட்டு உடனடியாக வெளியூர்க ளுக்கு தப்பி செல்வது தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளையில் ஈடுபடும் பெண்கள் கை குழந்தைக ளுடன் டிப்டாப் உடையில் வந்து கொள்ளையை அரங்கேற்றுவதும் தெரி யவந்துள்ளது. கொள்ளை கும்பலை பிடிக்க பஸ் நிலையங்களில் கண் காணிப்பு பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.

    வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையத்தில் மப்டி உடையில் பெண் போலீசார் ரோந்து சுற்றி வருவதற்கு ஏற்பாடு செய்யட்டுள்ளது. மேலும் பஸ்களிலும் சந்தேகப்ப டும்படியாக பெண்கள் இருந்தால் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் வழிப்பறி திருட்டு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறைந்துள்ளது. தற்பொழுது பஸ்களில் செயின் திருட்டு, செயின் மாயம் போன்ற சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது. வெளி மாவட்டங்களில் இருந்து வரும் கும்பல் கைவரிசை காட்டுகிறார்கள். இவர் களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் போலீ சார் ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கொள்ளை சம்பவங்களை தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க நவீன கருவி வாங்கப்பட்டுள்ளது. தற்பொழுது நாகர்கோவிலில் அந்த கருவி மூலமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    நாகர்கோவிலை தொடர்ந்து கன்னியாகுமரி, தக்கலை, குளச்சல் சப்- டிவிஷனலுக்குட்பட்ட பகுதிகளிலும் அபராதம் விற்பதற்கு நவீன கருவி வாங்க நடவடிக்கை எடுக் கப்படும். இந்த கருவியின் மூலமாக ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வரும் வாகனங் களை கண்காணிக்க முடியும். 400 மீட்டர் தொலைவில் அந்த வாகனம் வரும்போது அந்த வாகனத்தில் பதிவு எண் இந்த கருவியில் பதிவாகி விடும். ஹெல்மட் அணியாமல் வருபவர்களை யும் இந்த கருவி மூலமாக கண்டறிந்து அபராதம் விதிக்கலாம். செல்போனில் பேசிக் கொண்டு வாகனம் ஓட்டு பவர்களை கண்ட றிந்தும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • புழல் பெண்கள் சிறையில் சுமார் 150க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர்.
    • போலீசார்கள் அந்த கைதியை தடுத்து நிறுத்தி பெண் போலீசை மீட்டனர்.

    புழல் பெண்கள் சிறையில் சுமார் 150க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு திருப்பூர் மாவட்டத்தில் மோசடி வழக்கில் கைதான உகாண்டா நாட்டை சேர்ந்த நசமா சரம் என்பவர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் அடைக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் உறவினர்கள் கைதிகளுக்கு கொடுத்த பொருட்களை வழங்கும் பணியில் சிறை காவலர் அயனிங் ஜனாதா ஈடுபட்டார். அப்போது கைதி நசமா சரம், பெண் போலீஸ் அயனிங் ஜனாதாவை சரமாரியாக தாக்கினார். இதை பார்த்த மற்ற போலீசார்கள் அந்த கைதியை தடுத்து நிறுத்தி பெண் போலீசை மீட்டனர்.

    இது குறித்து புழல் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணி நேரத்தில் இந்தி பட பாடல்களை கேட்டுக்கொண்டும், அதில் ஒருவர் ஆட்டம் போட்டும் உற்சாகமாக பொழுதைப் போக்கி உள்ளனர்.
    • பெண் போலீசார் 4 பேரை இடைநீக்கம் செய்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு முனிராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் உள்ள ராமர் கோவிலில் பாதுகாப்பு பணியில் 4 பெண் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

    அவர்கள் பணி நேரத்தில் இந்தி படப் பாடல்களை கேட்டுக்கொண்டும், அதில் ஒருவர் ஆட்டம் போட்டும் உற்சாகமாக பொழுதைப் போக்கி உள்ளனர்.

    இதுபற்றிய வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியாகி வைரலானது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அந்த பெண் போலீசார் 4 பேரையும் இடைநீக்கம் செய்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு முனிராஜ் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    ×